ஏழாம் தந்திரம்

27. சற்குரு நெறி

1தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள் தந்து தன்னை அறியத் தர வல்லோன்
தாள் தந்து தத்துவா தீதத்துச் சார் சீவன்
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே.
உரை
   
2தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள்
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம்
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்
தவிர வைத்தான் பிறவித் துயர் தானே.
உரை
   
3கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போலக்
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே.
உரை
   
4பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம் அற நீக்கு வோர்
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குரு அன்றே.
உரை
   
5நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற
நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.
உரை
   
6பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசைதரும் பொன் வகை ஆகும் மா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரி மலம் தீர்ந்து சிவகதி ஆமே.
உரை
   
7தானே என நின்ற சற்குரு சந்நிதி
தானே என நின்ற தன்மை வெளிப்படில்
தானே தனைப் பெற வேண்டும் சதுர் பெற
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே.
உரை
   
8வரும் வழி போம் வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும் வழியா நந்தி பேசும் வழியைக்
குரு வழியே சென்று கூடலும் ஆமே.
உரை
   
9குரு என்பவனே வேத ஆகமம் கூறும்
பர இன்பன் ஆகிச் சிவயோகம் பாவித்து
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி
வரு நல் குரவன் பால் வைக்கலும் ஆமே.
உரை
   
10சத்தும் அசத்தும் சத சத்தும் தான் காட்டிச்
சித்தும் அசித்தும் சிவ பரத்தே சேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச் சுகம் ஆன சொல்
அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே.
உரை
   
11உற்றிடும் ஐம் மலம் பாச உணர்வினால்
பற்று அறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டித்
தற்பரம் மேவும் ஓர் சாதகர் ஆமே.
உரை
   
12எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்
வல்லார் புலனும் வரும்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே
செல்லாச் சிவ கதி சேர்தல் விளையாட்டே.
உரை
   
13ஈனப் பிறவியில் இட்டது மீட்டு ஊட்டித்
தானத்துள் இட்டுத் தனை ஊட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுஉற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன் தன் செய்கையே.
உரை
   
14அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம்
சித்தொடு சித்து அறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐம் கருமத்து இடும் தன்மையே.
உரை
   
15ஈ சத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம்
பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை
நேசத்து உள்ளே நின்ற நின் மலன் எம் இறை
தேசத்தை எல்லாம் தெளிய வைத்தானே.
உரை
   
16மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம்
ஆணிப் பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது
பேணிக் கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே.
உரை
   
17அசத்தொடு சத்தும் அசத்து சத்து நீங்க
இசைத்திடு பாசப் பற்று ஈங்கு அறு மாறே
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத் தானும் ஒன்று அறிவிப்போன் இறையே.
உரை
   
18ஏறு நெறியே மலத்தை எரித்தல் ஆல்
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால்
மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குரு வாம் இயம்பிலே.
உரை