தொடக்கம் |
|
|
எட்டாம் தந்திரம் 3. அவத்தை பேதம் கீழாலவத்தை |
1 | ஐ ஐந்து மத்திமை ஆனது சாக்கிரம் கை கண்ட பல் நான்கில் கண்டு அங் கனா என்பர் பொய் கண்டு இலாத புருடன் இதயம் சுழுனை மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே. |
|
உரை
|
|
|
|
|
2 | முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆகச் செப் பதின் நான்காய்த் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி அப் பதி ஆகும் நியதி முதலாகச் செப்பும் சிவம் ஈறு ஆய்த் தேர்ந்து கொள்ளீரே. |
|
உரை
|
|
|
|
|
3 | இந்தியம் ஈர் ஐந்து ஈர் ஐந்து மாத்திரை மந்திரம் ஆய் நின்ற மாருதம் ஈர் ஐந்தும் அந்தக் கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும் பந்த அச் சக்கரப் பால் அது ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
4 | பார் அது பொன்மை பசுமை உடையது நீர் அது வெண்மை செம்மை நெருப்பு அது கார் அது மாருதம் கருப்பை உடையது வானகம் தூமம் மறைந்து நின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
5 | பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்து உளும் ஏதம் படம் செய்து இருந்த புறநிலை ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு ஆதி அவத்தைக் கருவி தொண்ணூற்று ஆறே. |
|
உரை
|
|
|
|
|
6 | இட வகை சொல்லில் இருபத்து அஞ்சு ஆனை படு பர சேனையும் பாய் பரி ஐந்தும் உடையவன் மத்திமை உள் உறு நால்வர் அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே. |
|
உரை
|
|
|
|
|
7 | உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பு இடை நின்ற உயிரை அறியார் உடம்பொடு உயிர் இடை நட்பு அறியாதார் மடம் புகு நாய் போல் மயங்கு கின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
8 | இருக்கின்ற வாறு ஒன்று அறிகிலர் ஏழைகள் முருக்கும் அசபையை மாற்றி முகந்து கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து உருக் கொண்டு தொக்க உடல் ஒழியாதே. |
|
உரை
|
|
|
|
|
9 | ஒளித்திட்டு இருக்கும் ஒருபதினாலை அளித்தனன் என் உள்ளே ஆறியன் வந்து அளிக்கும் கலைகளின் அறுபத்து ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே. |
|
உரை
|
|
|
|
|
10 | மண்ணினில் ஒன்று மலர் நீரும் அங்காகும் பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம் மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் உன்னின் முடிந்த ஒரு பூத சயமே. |
|
உரை
|
|
|
|
|
11 | முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை கன்னியைக் கன்னியே காதலித்தாளே. |
|
உரை
|
|
|
|
|
12 | கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின் பண்டை அது ஆகிப் பரந்த வியாக்கிரத்து அண்டமும் தான் ஆய் அமர்ந்து நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
13 | நின்றவன் நிற்கப் பதினாலில் பத்து நீத்து ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன் மன்று கலந்த மனை வாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே. |
|
உரை
|
|
|
|
|
14 | தானம் இழந்து தனி புக்கு இதயத்து மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி ஆன விரிவு அறியா அவ் வியத்தத்தின் மேனி அழிந்து சுழுத்தியது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
15 | சுழுனையைச் சேர்ந்து உள மூன்று உடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன் தன் காட்சி ஒழுகக் கமலத்தின் உள்ளே இருந்து விழுமப் பொருளுடன் மேவி நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
16 | தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின் வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டுக் கானத்து எழுந்த கருத்தின் தலையிலே ஊனத்து அவித்தை விட்டு ஊமனின் நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
17 | ஊமை எழுத்தொடு பேசும் எழுத்து உறில் ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும் ஓமயம் உற்றது உள் ஒளி பெற்றது நாமயம் அற்றது நாம் அறியோமே. |
|
உரை
|
|
|
|
|
18 | துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன பரிய புரவியும் பாறிப் பறந்தது துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே. |
|
உரை
|
|
|
|
|
19 | மாறா மலம் ஐந்தான் மன்னும் அவத்தையின் வேறு ஆய மாயா அநு கரண ஆதிக்கு இங்கு ஈறு ஆகாதே எவ் உயிரும் பிறந்து இறுந்து ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே. |
|
உரை
|
|
|
|
|
20 | உண்ணும் தன் ஊடு ஆடாது ஊட்டிடும் மாயையும் அண்ணல் அருள் பெற்ற முத்தி அது ஆவது நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து எண்ணூறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே. |
|
உரை
|
|
|
|
|
21 | அதி மூட நித்திரை ஆணவம் நந்த அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னித் திதம் ஆன கேவலம் இத் திறம் சென்று பரம் ஆகா வைய அவத்தைப் படுவானே. |
|
உரை
|
|
|
|
|
22 | ஆசான் முன்னே துயில் மாணவர்தமைத் தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல் நேசாய ஈசனு நீடு ஆணவத் தரை ஏசாத மாயாள் தன்னாலே எழுப்புமே. |
|
உரை
|
|
|
|
|
23 | மஞ்சொடு மந்தாகினி குடம் ஆம் என விஞ்சு அறி வில்லோன் விளம்பு மிகுமதி எஞ்சலில் ஒன்று எனும் ஆறு என இவ் உடல் அஞ்சு உணு மன்னன் அன்றே போம் அளவே. |
|
உரை
|
|
|
|
|
24 | படி உடை மன்னவன் பாய் பரி ஏறி வடி உடை மாநகர் தான் வரும் போது அடி உடை ஐவரும் அங்கு உறை வோரும் துடி இல்லம் பற்றித் துயின்றனர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
25 | நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின் நேரான வாறு உன்னி நீடு நனவினில் நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து நேர் ஆம் பரத்துடன் நிற்பது நித்தமே. |
|
உரை
|
|
|
|
|
1 | சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோ தாயி சாக்கிர சொப்பனம் தன் இடை மா மாயை சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற் காமியம் சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே. |
|
உரை
|
|
|
|
|
2 | மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின் நேய விராகு ஆதி ஏய்ந்த துரியத்துத் தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி ஆயினன் அந்தச் சகலத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
3 | மேவிய அந்தகன் விழி கண் குருடன் ஆம் ஆவயின் முன் அடிக் காணும் அது கண்டு மேவும் தடி கொண்டு சொல்லும் விழிபெற மூவயினான் மா முயலும் கருமமே. |
|
உரை
|
|
|
|
|
4 | மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறுபோல் அத்தனும் ஐம் பொறி ஆடகத்து உள் நின்று சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணும் ஆறே. |
|
உரை
|
|
|
|
|
5 | வைச்சன வச்சு வகை இருபத்து அஞ்சு முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன் பிச்சன் பெரியன் பிறப்பு இலி என்று என்று நச்சி அவன் அருள் நான் உய்ந்த வாறே. |
|
உரை
|
|
|
|
|
6 | நாலு ஆறு உடன் புருடன் அற்று தத்துவமுடன் வேறு ஆன ஐ ஐந்து மெய்ப்புருடன் பரம் கூறா வியோமம் பரம் எனக் கொண்டனன் வேறு ஆன நாலு ஏழு வேத அந்த தத்துவமே. |
|
உரை
|
|
|
|
|
7 | ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன்புக்கு மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும் காலம் கொண்டான் அடி காணலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
8 | நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும் ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும் கூடிய காமம் குளிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே. |
|
உரை
|
|
|
|
|
9 | பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும் உய்த்த துரியமும் உள் உணர் காலமும் மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும் தத்துவ நால் ஏழு என உன்னத் தக்கதே. |
|
உரை
|
|
|
|
|
10 | விளங்கிடும் முந்நூற்று முப்பதோடு ஒருபான் தளம் கொள் இரட்டிய ஆறு நடந்தால் வணங்கிடும் ஐம் மலம் வாயு எழுந்து விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே. |
|
உரை
|
|
|
|
|
11 | நாலு ஒரு கோடியே நாற்பத்து எண் ஆயிரம் மேலும் ஓர் ஐந்து நூறு வேறாய் அடங்கிடும் பால் அவை தொண்ணூறோடு ஆறு உட் படும் அவை கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே. |
|
உரை
|
|
|
|
|
12 | ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர் ஆகின்ற ஆறா அரும் சைவர் தத்துவம் ஆகின்ற நால் ஏழ் வேதாந்தி வயின் அவர்க்கு ஆகின்ற நாலு ஆறு ஐந்தும் மாய வாதிக்கே. |
|
உரை
|
|
|
|
|
13 | தத்துவம் ஆனது தன் வழி நின்றிடில் வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம் பொய்த்தவம் ஆம் அவை போயிடும் அவ்வழி தத்துவம் ஆவது அகார எழுத்தே. |
|
உரை
|
|
|
|
|
14 | அறிவு ஒன்று இலாதன ஐ ஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீ என்று அருள் செய்தார் நந்தி அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே. |
|
உரை
|
|
|
|
|
15 | சாக்கிர சாக்கிரம் ஆதி தனில் ஐந்தும் ஆக்கும் மல அவத்தை ஐந்து நனவு ஆதி போக்கி இவற்றொடும் பொய்யான ஆறு ஆறு நீக்கி நெறி நின்றான் ஆகியே நிற்குமே. |
|
உரை
|
|
|
|
|
16 | ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு ஆணவம் ஆதி நான்கு ஆம் ஆற் அரனுக்கு ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப ஆணவம் ஒன்றே சதா சிவற்கு ஆவதே. |
|
உரை
|
|
|
|
|
1 | தத்துவம் ஆறு ஆறு தன் மனு ஏழ்கோடி மெய்த்தகு அன்னம் ஐம் பான் ஒன்று மேதினி ஒத்து இரு நூற்று இருபான் நான்கு என்பான் ஒன்று வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே. |
|
உரை
|
|
|
|
|
2 | நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து ஓடும் அவரோடு உள் இருபத்து அஞ்சும் கூடுவர் கூடிக் குறிவழியே சென்று தேடிய பின்னர்த் திகைத்து இருந்தார்களே. |
|
உரை
|
|
|
|
|
3 | சாக்கிர சாக்கிரம் ஆதித் தலை ஆக்கி ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்துத் தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே. |
|
உரை
|
|
|
|
|
1 | நனவு ஆதி தூலமே சூக்கப் பகுதி அனது ஆன ஐ ஐந்தும் விந்துவின் சத்தி தனது ஆம் விந்து தான் நின்று போந்து கனவா நனவில் கலந்தது இவ் ஆறே. |
|
உரை
|
|
|
|
|
2 | நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவோடு நல் செய்தி ஆனதே. |
|
உரை
|
|
|
|
|
3 | செறியும் கிரியை சிவ தத்துவம் ஆம் பிறிவில் சுக யோகம் பேர் அருள் கல்வி குறிதல் திருமேனி குணம் பல ஆகும் அறிவில் சரா சரம் அண்டத்து அளவே. |
|
உரை
|
|
|
|
|
4 | ஆதி பரம் சிவம் சத்தி சதாசிவம் ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம் போதம் கலை கால நியதி மா மாயை நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே. |
|
உரை
|
|
|
|
|
5 | தேசு திகழ் சிவம் சத்தி சதா சிவம் ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம் ஆசு அகல் வித்தை நியதி மகா மாயை ஆசு இல் புருட ஆதி ஆன்மா ஈறு ஆறே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஆணவ மாயையும் கன்மமும் மா மலம் காணு முளைக்கும் தவிடு உமிஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண் துலம் ஆய் நிற்கும் பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே. |
|
உரை
|
|
|
|
|
7 | பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. |
|
உரை
|
|
|
|
|
8 | உடல் இந்திய மனம் ஒண்புத்தி சித்தம் அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னிக் கெடும் அவ் உயிர் மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே. |
|
உரை
|
|
|
|
|
9 | தன் தெரியாத அதீதம் தன் காண அம் சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம் பெற்ற சுழுத்திப் பின் பேசு உறும் காதலால் மற்று அது உண்டிக் கன நனவு ஆதலே. |
|
உரை
|
|
|
|
|
10 | நனவில் கனவு இல்லை ஐந்து நனவில் கனவு இலாச் சூக்குமம் காணும் சுழுத்தி தனல் உண் பகுதியே தன் கூட்டு மாயை நனவில் துரியது அதீதம் தலை வந்தே. |
|
உரை
|
|
|
|
|
11 | ஆறு ஆறில் ஐ ஐந்து அகல நனா நனா ஆறாம் அவை விட ஆகும் நனாக் கனா வேறு ஆன ஐந்தும் விடவே நனா வினில் ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே. |
|
உரை
|
|
|
|
|
12 | மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை விட்டதுவும் தான் அன்றாகிச் சேய கேவல விந்துடன் செல்லச் சென்றக் கால் ஆய தனுவின் பயன் இல்லை ஆமே. |
|
உரை
|
|
|
|
|
13 | அதீதத்து துரியத்து அறிவன் ஆம் ஆன்மா அதீதத் துரிய அதனால் புரிந்தால் அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன் முதிய அனலில் துரியத்து முற்றுமே. |
|
உரை
|
|
|
|
|
14 | ஐ ஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கை கண்ட ஐ ஐந்தில் கண்டம் கனா என்பர் பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின் மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே. |
|
உரை
|
|
|
|
|
15 | புரி அட்டகமே பொருந்தல் நனவு புரி அட்டகம் தன்னின் மூன்று கனவு புரி அட்டகத்தில் இரண்டு சுழுத்தி புரி அட்டகத்து ஒன்று புக்கல் துரியமே. |
|
உரை
|
|
|
|
|
16 | நனவின் நனவு புலன் இல் வழக்கம் நனவில் கனவு நினைத்தல் மறத்தல் நனவில் சுழுத்தி உண் ஆடல் இலாமை நனவில் துரியம் அதீதத்து நந்தியே. |
|
உரை
|
|
|
|
|
17 | கனவின் நனவு போல் காண்டல் நனவு ஆம் கனவினில் கண்டு மறத்தல் கனவு ஆம் கனவில் சுழுத்தியும் காணாமை காணல் அணு ஆதி செய்தலில் ஆன துரியமே. |
|
உரை
|
|
|
|
|
18 | சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை சுழுத்தி துரியம் ஆம் சொல் அறும் பாழே. |
|
உரை
|
|
|
|
|
19 | துரிய நனவு ஆம் இதம் உணர் போதம் துரியக் கனவு ஆம் அகம் உணர் போதம் துரியச் சுழுத்தி வியோமம் துரியம் துரியம் பரம் எனத் தோன்றிடும் தானே. |
|
உரை
|
|
|
|
|
20 | அறிவு அறிகின்ற அறிவு நனவு ஆம் அறிவு அறியாமை அடையக் கனவு ஆம் அறிவு அறி அவ் அறியாமை சுழுத்தி அறிவு அறிவு ஆகும் ஆனதுரியமே. |
|
உரை
|
|
|
|
|
21 | தான் எங்கும் ஆய அவனை அம் மலம் தான் விட்டு ஞானம் தனது உரு ஆகி நயந்தபின் தான் எங்கும் ஆய் நெறி நின்றது தான் விட்டு மேன் அந்தச் சூக்கம் அவை வன்னம் மேல் இட்டே. |
|
உரை
|
|
|
|
|
22 | ஐ ஐந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்தியா மெய்யும் பின் சூக்கமும் மெய்ப் பகுதி மாயை ஐயமும் தான் அவன் அத் துரியத்தனே. |
|
உரை
|
|
|
|
|
23 | ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும் ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் ஈது என்று அறியும் அறிவை அறிந்தபின் ஈது என்று அறியும் இயல்பு உடையோனே. |
|
உரை
|
|
|
|
|
24 | உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் அயல் புணர்வு ஆகி அறிவாய்ச் செறிவாய் நயப்பு உறு சத்தியும் நாதன் உலகு ஆதி இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
25 | சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி ஒத்து உறு பாச மலம் ஐந்தோடு ஆறு ஆறு தத்துவ பேதம் சமைத்துக் கருவியும் வைத்தனன் ஈசன் மலம் அறும் ஆறே. |
|
உரை
|
|
|
|
|
26 | சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை சாக்கிரா தீதம் துரியத்தில் தான் உறச் சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடாச் சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே. |
|
உரை
|
|
|
|
|
27 | மலக் கலப்பாலே மறைந்தது சத்தி மலக் கலப்பாலே மறைந்தது ஞானம் மலக் கலப்பாலே மறைந்தனன் தாணு மலக் கலப்பு அற்றான் மதி ஒளி ஆமே. |
|
உரை
|
|
|
|
|
28 | திகைக் கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக் கின்ற நெஞ்சுள் நரிக் குட்டி நான்கு வகைக் கின்ற நெஞ்சின் உள் ஆனைக் கன்று ஐந்து பகைக் கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே. |
|
உரை
|
|
|
|
|
29 | கதறு பதி னெட்டுக் கண்களும் போகச் சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும் விதறு படா முன்னம் மெய் வழி நின்றால் அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
30 | நனவு அகத்தே ஒரு நால் ஐந்தும் வீடக் கனவு அகத்தே உள் கரணங்களோடு முனவு அகத்தே நின்று உதறி உள் புக்கு நினைவு அகத்து இன்றி சுழுத்தி நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
31 | நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய் ஒன்றி உலகின் நியம் ஆதிகள் உற்றுச் சென்று துரிய ஆதீதத்தே சில காலம் நின்று பரன் ஆய் நின்மலன் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
32 | ஆன அவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத் தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி மேனிகள் ஐந்தும் போய் விட்டுச் சிவம் ஆகி மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
33 | மண்டலம் மூன்றின் உள் மாய நல் நாடனைக் கண்டு கொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆகத் தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
34 | போது அறியாது புலம்பின புள் இனம் மாது அறியா வகை நின்று மயங்கின வேதறி ஆவணம் நின்றான் எம் இறை சூது அறிவார் உச்சி சூடி நின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
35 | கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே பொருத்து அறிந்தோன் புவனாபதி நாடித் திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
36 | ஆன விளக்கு ஒளி தூண்டும் அவன் என்னத் தான விளக்கு ஒளியாம் மூல சாதனத்து ஆன விதி மூலத் தானத்தில் அவ் விளக்கு ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே. |
|
உரை
|
|
|
|
|
37 | உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய விண் நாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில் கண்ணாடி காணும் கருத்து என்றானே. |
|
உரை
|
|
|
|
|
38 | அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான் அறியா தவத்தை அறிவானைக் கூட்டி அறியாது அறிவானை யார் அறிவாரே. |
|
உரை
|
|
|
|
|
39 | துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன தூடணம் அந் நனவு ஆதி பெரியன கால பரம்பில் துரியம் அரிய அதீதம் அதீதத்தம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
40 | மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன் மாயையின் மற்று அது நீவு தன் மாயை ஆம் கேவலம் ஆகும் சகலமா யோனியுள் தோயும் மனிதர் துரியத்துள் சீவனே. |
|
உரை
|
|
|
|
|
1 | தன்னை அறி சுத்தன் தற்கே ஏவலன் தானும் பின்னம் உற நின்ற பேத சகலனும் மன்னிய சத்து அசத்து சத சத்துடன் துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே. |
|
உரை
|
|
|
|
|
2 | தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானே தான் செய்த வினைப் பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
3 | பாசம் அது ஆகும் பழமலம் பற்று அற நேசம் அதாய் நின்ற ஆறாது நீங்கிடக் காசம் இலாத குணம் கேவல சுத்தம் ஆசு அற நிற்றல் அது சுத்த சைவமே. |
|
உரை
|
|
|
|
|
4 | ஆம் உயிர் கேவலம் மா மாயை இன் நடந்து ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவு உற்றுக் காமியம் மாயேயமும் கலவா நிற்பத் தாம் உறு பாசம் சகல அத்தம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
5 | சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர் நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
6 | தாவிய மாயையில் தங்கும் பிரளய மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் ஆவயின் நூற்று எட்டு உருத்திரர் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
7 | ஆகின்ற கேவலத்து ஆணவத் தானவர் ஆகின்ற இத் தேசர் ஆம் அனந்த ஆதியர் ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
8 | ஆம் அவரில் சிவனார் அருள் பெற்று உளோர் போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு ஓம் மயம் ஆகி ஒடுங்கனலின் மலம் தோம் அறு சுத்தா அவத்தைத் தொழிலே. |
|
உரை
|
|
|
|
|
9 | ஓரினும் மூவகை நால் வகையும் உள தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை சாரியல் ஆயவை தாமே தணப் பவை வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே. |
|
உரை
|
|
|
|
|
10 | பொய் ஆன போதாந்தம் ஆறு ஆறும் விட்டு அகன்று எய்யாமை நீங்கவே எய்தவன் தான் ஆகி மெய் ஆம் சரா சரம் ஆய் வெளி தன் உள்புக்கு எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே. |
|
உரை
|
|
|
|
|
11 | அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு அனாதி பிறப்பு அறச் சுத்தத்து உளாகுமே. |
|
உரை
|
|
|
|
|
12 | அந்தரம் சுத்தா வத்தை கேவலத்து ஆறு தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்து இன் பால் துரியத்து இடையே அறிவுறத் தன் பால் தனை அறி தத்துவம் தானே. |
|
உரை
|
|
|
|
|
13 | ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் துய்ய அவ் வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி ஐய சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே. |
|
உரை
|
|
|
|
|
14 | ஐ ஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும் மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் கை கண்ட சத்தி சிவ பாகத்தே காண எய்யும் படி அடங்கும் நால் ஏழ் எய்தியே. |
|
உரை
|
|
|
|
|
15 | ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர் பேணிய மாயைப் பிரளயாகலர் ஆகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலர் முப் பாசமும் புக்கோரே. |
|
உரை
|
|
|
|
|
16 | ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப் பேணிய மாயை பிரளயா கலருக்கே ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே காணும் சகலர்க்குக் காட்டு மலங்களே. |
|
உரை
|
|
|
|
|
17 | கேவலம் தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர் கேவலம் தன்னில் கிளர் விந்து சத்தியால் ஆவயில் கேவலத்து அச் சகலத்தையும் மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே. |
|
உரை
|
|
|
|
|
18 | மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ மாய சகலத்துக் காமிய மாமாயை ஏய மன் நூற்று எட்டு உருத்திரர் என்பவே. |
|
உரை
|
|
|
|
|
19 | மும் மலம் கூடி முயங்கி மயங்குவோர் அம் மெய்ச் சகலத்தர் தேவர் சுரர் நரர் மெய்ம்மை இல் வேதா விரிமிகு கீடாந்தத்து அம் முறை யோனி புக்கார்க்கும் சகலரே. |
|
உரை
|
|
|
|
|
20 | சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும் மலச் சத்து அசத்தோடு அத்தனித் தனி பாசமும் மத்த இருள் சிவன் ஆன கதிராலே தொத்து அற விட்டிடச் சுத்தர் ஆவார்களே. |
|
உரை
|
|
|
|
|
21 | தற்கே வலம் முத்தி தானே தனிமை ஆம் பிற்பால் சகலம் கலாதிப் பிறிவது ஆம் சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் தற்பால் புரிவது தற் சுத்தம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
22 | அறிவு இன்றி முத்தன் அரா காதி சேரான் குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி செறியும் செயல் இலான் இனம் கற்றவல்லோன் கிறியன் மல வியாபிக்கே வலம் தானே. |
|
உரை
|
|
|
|
|
23 | விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்தத ஞான பரையும் தனுச் சத்தி விந்துவின் மெய்ஞ் ஞானம் மேவும் பிரளயர் வந்த சகல சுத்த ஆன்மாக்கள் வையத்தே. |
|
உரை
|
|
|
|
|
24 | கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில் கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள் ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே ஒவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர் கட்கே. |
|
உரை
|
|
|
|
|
25 | கேவலத்தில் கேவலம் அதீதா தீதம் கேவலத்தில் சகலங்கள் வயின் தவம் கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே. |
|
உரை
|
|
|
|
|
26 | சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம் சகல சகலமே சாக்கிர சாக்கிரம் சகலத்தின் சுத்தமே தற் பரா வத்தை சகலத்தில் இம் மூன்று தன்மையும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
27 | சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல் சுத்தத்தில்கேவலம் தொல் உப சாந்தம் ஆம் சுத்த சகலம் துரிய விலாசம் ஆம் சுத்தத்தில் இம் மூன்றும் சொல்லலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
28 | சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும் சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிரா தீதம் தனில் சுக ஆனந்தமே ஆக்கு மறை ஆதி ஐம் மல பாசமே. |
|
உரை
|
|
|
|
|
29 | சாக்கிரா தீதத்தில் தான் அறும் ஆணவம் சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது ஆக்கு பரோ பாதியா உப சாந்தத்தை நோக்கு மலம் குண நோக்குதல் ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
30 | பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும் அத்தன் அருள் என்று அருளால் அறிந்தபின் சித்தமும் இல்லை செயல் இல்லை தானே. |
|
உரை
|
|
|
|
|
31 | எய்திய பெத்தமும் முத்தமும் என்பன எய்தும் அரன் அருளே விளையாட்டோடு எய்திடு உயிர் சுத்தத்து இடு நெறி என்னவே எய்தும் உயிர் இறை பால் அறிவாமே. |
|
உரை
|
|
|
|
|
32 | ஐம் மலத்தாரும் மதித்த சகலத்தர் ஐம் மலத்தாரும் அருவினைப் பாசத்தார் ஐம் மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர் ஐம் மலத்தார் அரனார்க்கு அறிவோரே. |
|
உரை
|
|
|
|
|
33 | கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும் உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து அரிய கனா, தூலாம் அந் நனவு ஆமே. |
|
உரை
|
|
|
|
|
34 | ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும் பூணும் துரியம் சுழுத்தி பொய்க் காமியம் பேணும் கனவும் மா மாயை திரோதாயி காணும் நனவில் மலக் கலப்பு ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
35 | அரன் முதல் ஆக அறிவோன் அதீ தத்தன் அரன் முதல் ஆம் மாயை தங்கிச் சுழுனை கருமம் உணர்ந்து மா மாயைக் கைக் கொண்டோர் அருளும் அறைவர் சகலத்து உற்றாரே. |
|
உரை
|
|
|
|
|
36 | உரு உற்றுப் போகமே போக்கி அந்துற்று மரு உற்றுப் பூதம் அனாதியான் மன்னி வரும் அச் செயல் பற்றிச் சத்து ஆதி வைகிக் கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே. |
|
உரை
|
|
|
|
|
37 | இருவினை ஒத்திட இன் அருள் சத்தி மருவிட ஞானத்தில் ஆதன மன்னிக் குருவினைக் கொண்டு அருள் சத்திமுன் கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே. |
|
உரை
|
|
|
|
|
38 | ஆறு ஆறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு ஈறு ஆம் அதீதத் துரியத்து இவன் எய்தப் பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து நீறு ஆர் பரம் சிவ மாதேயம் ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
39 | தன்னை அறியாது உடலை முன் தான் என்றான் தன்னை முன் கண்டான் துரியம் தனைக் கண்டான் உன்னும் துரிய மும் ஈசனோடு ஒன்று ஆக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே. |
|
உரை
|
|
|
|
|
40 | சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில் ஆக்கிய அந்த வயிந் தவம் ஆனந்த நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம் வாக்கும் மனமும் மருவல் செய்யாவே. |
|
உரை
|
|
|
|
|
41 | அப்பும் அனலும் அகலத்துளே வரும் அப்பும் அனலும் அகலத்துளே வாரா அப்பும் அனலும் அகலத்து உளே ஏது எனில் அப்பும் அனலும் கலந்தது அவ்வாறே. |
|
உரை
|
|
|
|
|
42 | அறு நான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம் உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் பெறு மாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே. |
|
உரை
|
|
|
|
|
43 | மாயை கைத் தாய் ஆக மா மாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர்க்கேவல சகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே. |
|
உரை
|
|
|
|
|
1 | அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி விஞ்சும் உடல் உயிர் வேறு படுத்திட வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே. |
|
உரை
|
|
|
|
|
2 | சத்தி பரா பரம் சாந்தி தனில் ஆன சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து சத்திய மாயை தனுச் சத்தி ஐந்துடன் சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஆறு ஆறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறு ஆறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறு ஆறுக்கு அப்பால் அறிவு ஆம் அவர்கட்கே ஆறு ஆறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்குப் பஞ்சணி காலத்துப் பள்ளி துயில் நின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு நஞ்சு உற நாதி நயம் செய்யும் ஆறே. |
|
உரை
|
|
|
|
|
5 | உரிய நனாத் துரியத்தில் இவன் ஆம் அரிய துரிய நனா ஆதி மூன்றில் பரிய பர துரியத்தில் பரன் ஆம் திரிய வரும் துரியத்தில் சிவமே. |
|
உரை
|
|
|
|
|
6 | பரம் ஆம் அதீதமே பற்று அறப் பற்றப் பரம் ஆம் அதீதம் பயிலப் பயிலப் பரம் ஆம் அதீதம் பயிலாத் தபோதனர் பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே. |
|
உரை
|
|
|
|
|
7 | ஆயும் பொய்ம் மாயை அகம்புறம் ஆய் நிற்கும் வாயும் மனமும் கடந்த மயக்கு அறின் தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே. |
|
உரை
|
|
|
|
|
8 | துரியப் பரியில் இருந்த அச்சீவனைப் பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலம் இட்டு அன்றே. |
|
உரை
|
|
|
|
|
9 | நின்ற இச் சாக்கிர நீள் துரியத்தினின் மன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும் மன்றன் மணம் செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன் வடிவு ஆமே. |
|
உரை
|
|
|
|
|
10 | விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்து இடை ஈடு ஆன மாயை பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும் தெரிந்த துரியத்தே தீது அகலாதே. |
|
உரை
|
|
|
|
|
11 | உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய் உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய் தன்னை அறிந்தும் பிறவி தணவாது ஆல் அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே. |
|
உரை
|
|
|
|
|
12 | கரு வரம்பு ஆகிய காயம் துரியம் இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
13 | அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணு அசைவின் கண் ஆன கனவும் அணு அசைவில் பரா தீதம் சுழுத்தி பணியில் பரதுரியம் பரம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
14 | பர துரியத்து நனவும் பரந்து விரி சகம் உண்ட கனவு மெய்ச் சாந்தி உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவத் தெரியும் சிவ துரி அத்தனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
15 | பரமா நனவின் பின் பாற்சகம் உண்ட திரமார் கனவும் சிறந்த சுழுத்தி உரம் ஆம் உப சாந்தம் உற்றல் துறவே தரனாம் சிவ துரி அத்தனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
16 | சீவன் துரிய முதல் ஆகச் சீர் ஆன ஆவ சிவன் துரி யாந்தம் அவத்தை பத்து ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நால் ஏழ் விடுத்து நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
17 | பரம் சிவன் மேல் ஆம் பரமம் பரத்தில் பரம் பரன் மேல் ஆம் பர நனவு ஆக விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை உரம்தகு மா நந்தி ஆம் உண்மை தானே. |
|
உரை
|
|
|
|
|
18 | சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம் மேல் ஆய விந்து சதா சிவம் மிக்கு ஓங்கிப் பால் ஆய்ப் பிரமன் அரி அமராபதி தேவாம் உருத்திரன் ஈசன் ஆம் காணிலே. |
|
உரை
|
|
|
|
|
19 | கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும் உலப்பு அறியார் உடலோடு உயிர் தன்னை அலப்பு அறிந்து இங்கு அர சாள கிலாதார் குறிப்பது கோல மடல் அது வாமே. |
|
உரை
|
|
|
|
|
20 | பின்னை அறியும் பெரும் தவத்து உண்மைசெய் தன்னை அறியில் தயாபரன் எம் இறை முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியல் உற்று இன்புற்ற வாறே. |
|
உரை
|
|
|
|
|
21 | பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம் தன்னை மறைத்தது தன் கணரணங்கள் ஆம் தன்னின் மறைந்தது தன் கரணங்களே. |
|
உரை
|
|
|
|
|
22 | மரத்தை மறைத்தது மா மத யானை மரத்தில் மறைந்தது மா மத யானை பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே. |
|
உரை
|
|
|
|
|
23 | ஆறு ஆறு அகன்று நமவிட்டு அறிவாகி வேறு ஆன தானே அகரமாய் மிக்கு ஓங்கி ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே. |
|
உரை
|
|
|
|
|
24 | துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி விரியப் பரையின் மிகுநாதம் அந்தம் புரியப் பரையின் பரா வத்தார் போதம் திரியப் பரமம் துரியம் தெரியவே. |
|
உரை
|
|
|
|
|
25 | ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப் பந்திடும் சுத்த அவத்தைப் பதைப் பினில் நந்தி பராவத்தை நாடச் சுடர் முனம் அந்தி இருள் போலும் ஐம் மலம் ஆறுமே. |
|
உரை
|
|
|
|
|
26 | ஐ ஐந்தும் எட்டுப் பகுதியும் மாயையும் பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு எய்யும் படியாய் எவற்றும் ஆய் அன்று ஆகி உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே. |
|
உரை
|
|
|
|
|
27 | நின்றான் அருளும் பரமும் முன் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும் நன்றான ஞானத்தின் நாதப் பிரானே. |
|
உரை
|
|
|
|
|
1 | சாத்திகம் எய்து நனவு எனச் சாற்றுங் கால் வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தி ஆம் மாய்த்திடு நிர்க்குண மாசு இல் துரியமே. |
|
உரை
|
|
|
|
|
1 | பெறு பகிரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல் அளவு ஆகப் பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கிச் செறியும் அண்டா சனத் தேவர் பிரானே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின் மேல் மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்து ஆறாய்த் தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே. |
|
உரை
|
|
|
|
|
பதினொராம் தானமும் அவத்தை எனக் காணல் |
1 | அஞ்சில் அமுதும் ஓர் ஏழின் கண் ஆனந்த முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சமே நின்று வைத்திடில் காயம் ஆம் கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே. |
|
உரை
|
|
|
|
|
2 | புருடன் உடனே பொருந்திய சித்தம் அருவ மொடு ஆறும் அதீதத் துரியம் விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும் அரிய பதினொன்றும் ஆம் அவ் அவத்தையே. |
|
உரை
|
|
|
|
|
3 | காட்டும் பதினொன்றும் கை கலந்தால் உடல் நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை ஆட்டம் செய்யாத அது விதியே நினை ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
1 | கேவலம் தன்னில் கலவச் சகலத்தின் மேவும் செலவு விட வரு நீக்கத்துப் பாவும் தனைக் காண்டல் மூன்றும் படர் அற்ற தீது அறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே. |
|
உரை
|
|
|
|
|
2 | வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி ஆமே. |
|
உரை
|
|
|
|
|
1 | ஊமைக் கிணற்று அகத்து உள்ளே உறைவது ஓர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே. |
|
உரை
|
|
|
|
|
2 | காலங்கி நீர்பூக் கலந்த ஆகாயம் மாலங்கி ஈசன் பிரமன் சதா சிவன் மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார் கட்குக் காலனும் இல்லை கருத்து இல்லை தானே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது தான் மா மறை அறை தன்மை அறிகிலர் ஆன் மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல் ஆன் மாவும் இல்லைஆல் ஐ ஐந்தும் இல்லையே. |
|
உரை
|
|
|
|
|
4 | உதயம் அழுங்கல் ஒடுங்கல் இம் மூன்றின் கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி பதி தரு சேதனன் பற்று ஆம் துரியத்து அதி சுபன் ஆயன் தான் நந்தி ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
5 | எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல் உயிர் பொல்லாத ஆறா உள் போகாது போதம் ஆய்ச் செல்லாச் சிவகதி சென்று எய்தும் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
6 | காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனல் என வாதனை நின்றால்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத்து துரிசு அகலாதே. |
|
உரை
|
|
|
|
|
7 | ஆன மறை ஆதி யாம் உரு நந்தி வந்து ஏனை அருள் செய் தெரி நனா வத்தையில் ஆன வகையை விடும் அடைத்தாய் விட ஆன மலா தீதம் அப்பரம் தானே. |
|
உரை
|
|
|
|
|
8 | சுத்த அதீதம் சகலத்தில் தோய் உறில் அத்தன் அருள் நீங்கா ஆங்கு அணிற்றான் ஆகச் சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதி செய் அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
9 | வேறு செய்தான் இருபாதியின் மெய்த் தொகை வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான் வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
10 | கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை நிறம்சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே. |
|
உரை
|
|
|
|
|
11 | தானே சிவம் ஆன தன்மை தலைப் பட ஆன மலமும் அப் பாச பேதமும் மான குணமும் பரான்மா உபாதியும் பானுவின் முன் மதிபோல் படராவே. |
|
உரை
|
|
|
|
|
12 | நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திருத் தக்க மாலும் திசை முகன் தானும் உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே. |
|
உரை
|
|
|
|
|
13 | ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும் ஞானத் திரியைக் கொளுவி அதன் உள்புக்கு கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழி எளிது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
14 | ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் தாடித்து எழுந்த தமருக ஓசையும் பாடி எழுகின்ற வேத ஆகமங்களும் நாடியின் உள் ஆக நான் கண்ட வாறே. |
|
உரை
|
|
|
|
|
15 | முன்னை அறிவினில் செய்த முது தவம் பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை அறிவது அறிவாம் அஃது அன்றிப் பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
16 | செயல் அற்று இருக்கச் சிவானந்தம் ஆகும் செயல் அற்று இருப்பார் சிவ யோகம் தேடார் செயல் அற்று இருப்பார் செகத் தொடும் கூடார் செயல் அற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே. |
|
உரை
|
|
|
|
|
17 | தான் அவன் ஆகும் சமாதி கை கூடினால் ஆன மலம் அறும் அப் பசுத் தன்மை போம் ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர் கட்கே. |
|
உரை
|
|
|
|
|
18 | தொலையா அரன் அடி தோன்றும் அம் சத்தி தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும் தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணித் தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே. |
|
உரை
|
|
|
|
|
19 | தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை தான் தரு ஞானம் தன் சத்திக்குச் சாதன் ஆம் ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே. |
|
உரை
|
|
|
|
|
20 | அறிகின்று இலாதன ஐ ஏழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீ என்று அருள் செய்தான் நந்தி அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே. |
|
உரை
|
|
|
|
|
21 | தான் அவன் ஆகிய ஞானத் தலைவனை வானவர் ஆதியை மா மணிச் சோதியை ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை ஊனம் இலாள் தன்னை ஊன் இடைக் கண்டதே. |
|
உரை
|
|
|
|
|
22 | ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளியது எனல் ஆகும் ஆன் மாவை அன்றி அளியும் அருளும் தெருளும் கடந்து தெளிய அருளே சிவானந்தம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
23 | ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில் தான் அந்தம் ஆம் உயிர் தானே சமாதி செய் ஊன் அந்தம் ஆய் உணர்வாய் உள் உணர்வு உறில் கோன் அந்தம் வாய்க்கும் மகா வாக்கியம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
24 | அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர் வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும் அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே அறிவிக்கத் தம் அறிவார் அறிவோரே. |
|
உரை
|
|
|
|
|
25 | சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கூடிச் சித்தும் அசித்தும் சிவ சித்தாய் நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல் அற்றவர்களே. |
|
உரை
|
|
|
|
|
26 | தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன் தானே அறிவான் அறிவு சத சத்து என்று ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்கத் தானே அறிந்து சிவத்துடன் தங்குமே. |
|
உரை
|
|
|
|
|
27 | தத்துவ ஞானம் தலைப்பட்டவர் கட்கே தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும் தத்துவ ஞானத்துத் தான் அவன் ஆகவே தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே. |
|
உரை
|
|
|
|
|
28 | தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும் பின்னது சன் முத்தி சன்மார்க்கப் பேர் ஒளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே. |
|
உரை
|
|
|
|
|
29 | ஞானம் தன் மேனி கிரியை நடு அரங்கம் தான் உறும் இச்சை உயிர் ஆகத் தற்பரன் மேனி கொண்டு ஐங் கருமத்து வித்து ஆதலான் மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே. |
|
உரை
|
|
|
|
|
30 | உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம் உயிர்க்குக் கிரியை உயிர் மாயை சூக்கம் உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே உயிர்ச் செயல் அன்றி அவ் உள்ளத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
31 | தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர் கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும் பழி அற்ற காரண காரியம் பாழ் விட்டு அழிவு அற்ற சாந்தன் அதீதன் சிவன் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
32 | இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி இல்லதும் உள்ளதும் ஆயன் தாம் அண்ணலைச் சொல்லாது சொல்லிடில் தூர் ஆதி தூரம் என்று ஒல்லை உணர்ந்தால் உயிர்க்கு உயிர் ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
33 | உயிர் இச்சை ஊட்டி உழி தரும் சத்தி உயிர் இச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் உயிர் இச்சை ஊட்டி உடன் உறலாலே உயிர் இச்சை வாட்டி உயர் பதம் சேருமே. |
|
உரை
|
|
|
|
|
34 | சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓர் ஒன்று இலார் ஐம் மல இருள் உற்றவர் பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர் ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே. |
|
உரை
|
|
|
|
|
35 | எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின் எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின் எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின் எய்தினர் செய்யும் இறை அருள் தானே. |
|
உரை
|
|
|
|
|
36 | திருந்தனர் விட்டார் திருவின் அரகம் திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தனர் விட்டார் செறிமலக் கூட்டம் திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே. |
|
உரை
|
|
|
|
|
37 | அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவன் அருள் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
38 | அருளான சத்தி அனல் வெம்மை போலப் பொருள் அவன் ஆகத்தான் போதம் புணரும் இருள் ஒளியாய் மீண்டும் மும் மலம் ஆகும் திரு அருள் ஆன நந்தி செம் பொருள் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
39 | ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள் பேதித்த அவ்வினையால் செயல் சேதிப்ப ஆதித்தன் தன் கதிரால் அவை சேட்டிப்பப் பேதித்துப் பேதியா வாறு அருட் பேதமே. |
|
உரை
|
|
|
|
|
40 | பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும் போதம் புணர் போதம் போதமும் நாதமும் நாதமுடன் நாத நாதாதி நாதமும் ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே. |
|
உரை
|
|
|
|
|
41 | மேவிய பொய்க் கரி ஆட்டும் வினை எனப் பாவிய பூதம் கொண்டாட்டிப் படைப் பாதி பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள் ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
42 | ஆறு அகன்று தனை அறிந்தான் அவன் ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த வேறு ஆய் வெளிபுக்கு வீடு உற்றான் அம் அருள் தேறாத் தெளி உற்றுத் தீண்டச் சிவம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
43 | தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை மீண்டு உற்று அருளால் விதி வழியே சென்று தூண்டிச் சிவ ஞான மா வினைத் தான் ஏறித் தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
44 | சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்தி அருள் தன்மை யாரே. |
|
உரை
|
|
|
|
|
45 | தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம் தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையைத் தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர் தான் இன்றித் தான் ஆகத் தத்துவ சுத்தமே. |
|
உரை
|
|
|
|
|
46 | தன்னினில் தன்னை அறியும் தலைமகன் தன்னினில் தன்னை அறியத் தலைப்படும் தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில் தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே. |
|
உரை
|
|
|
|
|
47 | அறியகிலேன் என்று அரற்றாதே நீயும் நெறி வழியே சென்று நேர் பட்ட பின்னை இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும் ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
48 | ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர் தேம்பு கின்றார் சிவம் சிந்தை செய்யாதவர் கூம்ப கில்லார் வந்து கொள்ளலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
49 | குறி அறியார்கள் குறிகாண மாட்டார் குறி அறியார்கள் தம் கூடல் பெரிது குறி அறியா வகை கூடுமின் கூடி அறிவு அறியா விருந்து அன்னமும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
50 | ஊனோ உயிரோ உறுகின்றதே இன்பம் வானோர் தலைவி மயக்கத்து உற நிற்கத் தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர் தானே பிறப்போடு இறப்பு அறியாரே. |
|
உரை
|
|
|
|