எட்டாம் தந்திரம்

7. அடித்தலை அறியும் திறம் கூறல்

1காலும் தலையும் அறியார் கலதிகள்
கால் அந்தச் சத்தி அருள் என்பர் காரணம்
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர்
கால் அந்த ஞானத்தைக் காட்ட வீடு ஆகும்.
உரை
   
2தலைஅடி ஆவது அறியார் காயத்தில்
தலை அடி உச்சியில் உள்ளது மூலம்
தலை அடி ஆன அறிவை அறிந்தோர்
தலை அடி ஆகவே தான் இருந்தாரே.
உரை
   
3நின்றான் நிலம் முழுது அண்டமும் மேல் உற
வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே.
உரை
   
4சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழ் அது
எந்தையும் என்னை அறியகிலன் ஆகில்
எந்தையை யானும் அறிய கிலேனே.
உரை
   
5பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால்
என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம்
உன்னா ஒளியும் உரை செய்யா மந்திரம்
சொன்னான் கழல் இணை சூடி நின்றேனே.
உரை
   
6பதி அது தோற்றும் பதம் அது வைம்மின்
மதி அது செய்து மலர்ப் பதம் ஓதும்
நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன்
கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே.
உரை
   
7தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை
பரித்து நின்றான் அப் பரி பாகத்தானே.
உரை
   
8ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதம் செய வல்லார்கட்கு
இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே.
உரை
   
9கால் கொண்டு என் சென்னியில் கட்டறக் கட்டற
மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அறப்
பால் கொண்ட என்னைப் பரன் கொள்ள நாடினான்
மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே.
உரை
   
10பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்குச்
செற்றம் இலாச் செய்கைக்கு எய்தின செய்யுமே.
உரை