எட்டாம் தந்திரம்

13. மும்முத்தி

1சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓ உபசாந்தம் சிவ முத்தி ஆனந்த
மூவயின் முச் சொரூப முத்தி முப்பாலது ஆய்
ஓ உறு தாரத்தில் உள்ளு நாதாந்தமே.
உரை
   
2ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும்
ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும்
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று
ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே.
உரை
   
3சிவம் ஆகி மும்மல முக்குணம் செற்றுத்
தவம் ஆன மும் முத்தி தத்துவத்து அயிக்கியத்து
உவம் ஆகிய நெறி சோகம் என்போர்க்குச்
சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே.
உரை
   
4சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுக ஆனந்த
சத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும் பெருமானே.
உரை