எட்டாம் தந்திரம்

15. முக்கரணம்

1இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன் உறு அவ் உருவேறு எனக் காணும்
திடம் அது போலச் சிவ பர சீவர்
உடன் உறை பேதமும் ஒன்று எனல் ஆமே.
உரை
   
2ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி
வளியை வளி செய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளி செய்து மேல் எழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவ பதம் தானே.
உரை
   
3முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அக்
கைக் காரணம் என்னத் தந்தனன் காண் நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக
ஒக்கும் அது உன்மணி ஓது உள் சமாதியே.
உரை