எட்டாம் தந்திரம்

17. முப்பாழ்

1காரியம் ஏழ் கண்டு அறு மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ் கண்டு அறும் போதப் பாழ்விடக்
காரிய காரண வாதனை கண்டு அறும்
சீரூப சாந்த முப் பாழ் விடத் தீருமே.
உரை
   
2மாயப் பாழ் சீவன் வியோமப் பாழ்மன் பரன்
சேய முப் பாழ் எனச் சிவசத்தியில் சீவன்
ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல் முடி வாகுமே.
உரை
   
3எதிர் அற நாளும் எருது வந்து ஏறும்
பதி எனும் நந்தி பதம் அது கூடக்
கதி எனப் பாழைக் கடந்த அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்கு கின்றேனே.
உரை
   
4துரியம் அடங்கிய சொல் அறும் பாழை
அரிய பரம் பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம் பரம் என்றே துதிக்கும்
அரு நிலம் என்பதை யார் அறிவாரே.
உரை
   
5ஆறு ஆறு நீங்க நமவாதி அகன்றிட்டு
வேறு ஆகிய பரை ஆ என்று மெய்ப் பரன்
ஈறு ஆன வாசியில் கூட்டும் அது அன்றோ
தேறாச் சிவாய நம எனத் தேறிலே.
உரை
   
6உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும்
உள்ள பரிசு அறிந்தோறும் அவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே.
உரை