தொடக்கம் |
|
|
எட்டாம் தந்திரம் 19. உபசாந்தம் |
1 | காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்று அறப் பாரணவும் உப சாந்தப் பரிசு இதே. |
|
உரை
|
|
|
|
|
2 | அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத்து உறு புரி மன்னு பரங்காட்சி ஆவது உடன் உற்றுத் தன்னின் வியாத்தி தனின் உப சாந்தமே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஆறு ஆறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு பேறு ஆன தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறு ஆம் வியாத்தம் பிறழ் உப சாந்தமே. |
|
உரை
|
|
|
|
|
4 | வாய்ந்த உப சாந்த வாதனை உள்ளப் போய் ஏய்ந்த சிவம் ஆதலின் சிவ ஆனந்தத்துத் தோய்ந்து அறல் மோனச் சுக அனுபவத் தோடே ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈர் ஐந்துமே. |
|
உரை
|
|
|
|
|
5 | பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையின் இன்றாகிய தெண்புனல் போல உற்று உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன் கரை கண்டான் உரை அற்ற கணக்கிலே. |
|
உரை
|
|
|
|
|
6 | பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறை மணி வாள் கொண்டவர் தமைப் போலக் கறை மணி கண்டனைக் காண்குற மாட்டார் நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே. |
|
உரை
|
|
|
|