எட்டாம் தந்திரம்

22. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி

1நவம் ஆம் அவத்தை நனவு ஆதி பற்றில்
பவம் ஆம் மலம் குணம் பற்று அற்றுப் பற்றாத்
தவம் ஆன சத்திய ஞானப் பொதுவில்
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே.
உரை
   
2சிவம் ஆன சிந்தையில் சீவன் சிதைய
பவம் ஆன மும் மலம் பாறிப் பறிய
நவம் ஆன அந்தத்தின் நல் சிவ போதம்
தவம் ஆம் அவை ஆகித் தான் அல்ல ஆகுமே.
உரை
   
3முன் சொன்ன ஒன்பானின் முன் உறு தத்துவம்
தன் சொல்லில் எண்ணத் தகா ஒன்பான் வேறு உள
பின் சொல்ல ஆகும் இவ் ஈர் ஒன்பான் பேர்த்திட்டு
தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே.
உரை
   
4உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகந்து எம்பிரான் என்பான் அல்லும் பகலும்
இகந்தன வல்வினையோடு அறுத்தானே.
உரை
   
5நலம் பல காலம் தொகுத்தன நீளம்
குலம் பல வண்ணம் குறிப் பொடும் கூடும்
பலம் பல பன்னிரு கால நினையும்
நிலம் பலவாறு இன நீர்மையன் தானே.
உரை
   
6ஆதி பராபரம் ஆகும் பரா பரை
சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி
நீதி ஆம் பேதம் ஒன்பானுடன் ஆதியே.
உரை
   
7தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறா நரக சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான்
வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.
உரை
   
8ஒன்பான் அவத்தை உள் ஒன்பான் அபிமானி
நன்பால் பயிலும் நவ தத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பது ஓர் முத்துரியத்து உறச்
செம்பால் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.
உரை
   
9நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி இருக்கும் பெரு மறை அம் மறை
கூசி இருக்கும் குணம் அது ஆமே.
உரை