எட்டாம் தந்திரம்

24. முத்திநிந்தை

1பரகதி உண்டு என இல்லை என்போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடுவார் கடை தோறும்
துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.
உரை
   
2புறப்பட்டுப் போகும் புகுதும் என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வம் என்று எண்ணி
அறப்பட்ட மற்றப் பதி என்று அழைத்தேன்
இறப் பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே.
உரை
   
3திடர் இடை நில்லாத நீர் போல ஆங்கே
உடல் இடை நில்லா உறு பொருள் காட்டிக்
கடல் இடை நில்லாக் கலம் சேருமாப் போல்
அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே.
உரை
   
4தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும்
போம் வழி வேண்டிப் புறமே உழிதர்வர்
காண் வழி காட்டக் கண் காணா கலதிகள்
தீ நெறி செல்வான் திரிகின்ற வாறே.
உரை
   
5மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி அவனைக் குறித்து உடன்
காடும் மலையும் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை உன்ன கிலாரே.
உரை
   
6ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறி வழி
நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி
வேவது செய்து விளங்கிடுவீரே.
உரை
   
7மயக்கு உற நோக்கினும் மா தவம் செய்யார்
தமக்கு உறப் பேசின தாரணை கொள்ளார்
சிணக்கு உறப் பேசின தீவினை யாளர்
தமக்கு உறவல் வினை தாங்கி நின்றாரே.
உரை
   
8விட்ட இலக்கணை தான் போம் வியோ மத்துத்
தொட்டு விடாத துப சாந்தத்தே தொகும்
விட்டு விடாதது மேவும் சத்து ஆதியில்
சுட்டும் இலக்கண ஆதீதம் சொரூபமே.
உரை