தொடக்கம் |
|
|
எட்டாம் தந்திரம் 27. விசுவக் கிராசம் |
1 | அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரில் குமிழியைக் காணில் எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்கப் பொழிகின்ற இவ்வுடல் போம் அப்பரத்தே. |
|
உரை
|
|
|
|
|
2 | உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில் படரும் சிவ சத்தி தாமே பரம் ஆம் உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகிக் கடையும் தலையும் கரக்கும் சிவத்தே. |
|
உரை
|
|
|
|
|
3 | செவி மெய் வாய் கண் மூக்குச் சேர் இந்திரியம் அவி இன்றி யமனம் ஆதிகள் ஐந்தும் குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து தவிர் ஒன்று இலாத சரா சரம் தானே. |
|
உரை
|
|
|
|
|
4 | பரன் எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும் திரன் எங்கும் ஆகிச் செறிவு எங்கும் எய்தும் உரன் எங்கும் ஆய் உலகு உண்டு உமிழ்க்கும் வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்து உற்ற வாறே. |
|
உரை
|
|
|
|
|
5 | அளந்து துரியத்து அறிவினை வாங்கி உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து கிளர்ந்த பரம் சிவம் சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
6 | இரும்பு இடை நீர் என என்னை உள்வாங்கிப் பரம்பரம் ஆன பரம் அது விட்டே உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்த என் நந்தி இதயத்து உளானே. |
|
உரை
|
|
|
|
|
7 | கரி உண் விளவின் கனிபோல் உயிரும் உரிய பரமும் முன் ஓதும் சிவமும் அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம் திரிய விழுங்கும் சிவ பெருமானே. |
|
உரை
|
|
|
|
|
8 | அந்தமும் ஆதியும் ஆகும் பரா பரன் தந்தம் பரம் பரன் தன்னில் பரம் உடன் நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயந்தத்தே நந்தி இருந்தனன் நாம் அறியோமே. |
|
உரை
|
|
|
|