தொடக்கம் |
|
|
எட்டாம் தந்திரம் 29. ஞானிசெயல் |
1 | முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர் பின்னை வினைக் கணார் பேர்ந்து அறப் பார்ப்பார்கள் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே. |
|
உரை
|
|
|
|
|
2 | தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே. |
|
உரை
|
|
|
|
|
3 | மன வாக்குக் காயத்தால் வல்வினை மூளும் மன வாக்கு நேர் நிற்கில் வல்வினை மன்னா மன வாக்குக்கு எட்ட அவர் வாதனை தன்னால் தனை மாற்றி ஆற்றத் தகு ஞானி தானே. |
|
உரை
|
|
|
|
|
4 | நிற்றல் இருத்தல் கிடத்தல் நடை ஓடல் பெற்ற அக்காலும் திருவருள் பேராமல் சற்றியல் ஞானந்தம் தானந்தம் தங்கவே உற்ற பிறப்பு அற்று ஒளிர் ஞான நிட்டையே. |
|
உரை
|
|
|
|