தொடக்கம் |
|
|
ஒன்பதாம் தந்திரம் 1. குருமட தரிசனம் |
1 | பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்த் தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
2 | இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும் அவனைப் புறம்பு என்று அரற்று கின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய் மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பு இலி எம் இறை ஓடும் உலகு உயிராகி நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
4 | இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈரா இரு நிலத்தோர்க்கே. |
|
உரை
|
|
|
|
|
5 | முகம் பீடம் ஆம் மடம் உன்னிய தேயம் அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி அகம் பரம் ஆதனம் எண் எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஆக முகம் ஆம் பீடம் ஆதாரம் ஆகும் சக முகம் ஆம் சத்தி ஆதனம் ஆகும் செகமுகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும் அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே. |
|
உரை
|
|
|
|
|
7 | மாயை இரண்டு மறைக்க மறை உறும் காயம் ஓர் ஐந்தும் கழியத் தான் ஆகியே தூய பரம் சுடர் தோன்றச் சொரூபத்து உள் ஆய் பவர் ஞான ஆதி மோனத்தர் ஆமே. |
|
உரை
|
|
|
|