தொடக்கம் |
|
|
ஒன்பதாம் தந்திரம் 11. சத்திய ஞானாந்தம் |
1 | எப்பாழும் பாழும் யாவும் ஆய் அன்றாகி முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து தற்பர ஞான ஆனந்தம் தான் அது ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
2 | மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மாசோபை அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் ஆறது இன்னிய வுற்பலம் ஒண்சீர் நிறமணம் பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே. |
|
உரை
|
|
|
|
|
3 | சத்தி சிவன் பரஞானமும் சாற்றும் கால் உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம் வைத்த சொரூபத்த சத்தி வரு குரு உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே. |
|
உரை
|
|
|
|
|
4 | உருஉற் பலம் நிறம் ஒண் மணம் சோபை தரநிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் மருவச் சிவம் என்ற மா முப் பதத்தின் சொரு பத்தன் சத்தி ஆதி தோன்ற நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
5 | நினையும் அளவின் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலும் ஆகும் எனையும் எம்கோன் நந்தி தன் அருள் கூட்டி நினையும் அளவில் நினைப் பித்தனனே. |
|
உரை
|
|
|
|
|
6 | பாலொடு தேனும் பழத்து உள் இரதமும் வாலிய பேர் அமுதாகும் மதுரமும் போலும் துரியம் பொடி பட உள் புகச் சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே. |
|
உரை
|
|
|
|
|
7 | அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனிமொழி மாதர் துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
8 | மத்திமம் ஆறு ஆறு மாற்றி மலம் நீக்கிச் சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்றுப் பெத்தம் அறச் சிவம் ஆகிப் பிறழ் உற்றுச் சத்திய ஞான ஆனந்தம் சார்ந்தனன் ஞானியே. |
|
உரை
|
|
|
|
|
9 | சிவம் ஆய் அம் ஆன மும் மலம் தீரப் பவம் ஆன முப்பாழைப் பற்று அறப் பற்றத் தவம் ஆன சத்திய ஞான ஆனந்தத்தே துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே. |
|
உரை
|
|
|
|