846
 

(ப. இ.) பூதம் ஐந்தும், பொறி ஐந்தும், குற்றம் எய்துமாறு இருந்த புறநிலைக்கருவிகள் என்ப. இவற்றால் நிகழும் குணம் செயல்கள் மலங்காரணமாகும். இவற்றை அடிப்படையாகக்கொண்டு விரிந்த கருவிகள் அறுபது, ஆகக் கருவிகள் தொண்ணூற்றாறு என்ப.

கருவிகள் அறுபது வருமாறு :

கூறு

நிலம்   :    மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை ஆக

5

நீர்   :    நீர், குருதி, மூளை, கொழுப்பு, வெண்ணீர் ஆக

5

தீ :    ஊண், உறக்கம், உட்கு, உடனுறைவு, மடி ஆக

5

வளி  :    ல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல் ஆக

5

வெளி  :    வகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு,  பொறாமை ஆக

5

செய்தற்கருவி :    பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல்,மகப்பெறுதல் ஆக

5

அறிவுவளி :    உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,ஒலிக்காற்று, நிரவுகாற்று ஆக

5

தொழில்வளி  :    தும்மற்காற்று, விழிக்காற்று,கொட்டாவிக் காற்று,இமைக்காற்று, வீங்கற்காற்று ஆக

5

நாடி  :    இடப்பால்நரம்பு, வலப்பால்நரம்பு, நடுநரம்பு,இடக்கண்நரம்பு, வலச்செவிநரம்பு, உள்நாக்கு நரம்பு, இடச்செவிநரம்பு, வலக்கண்நரம்பு,கருவாய்நரம்பு,எருவாய்நரம்பு ஆக

10

ஓசை  :    நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை,செவியோசை ஆக

4

முப்பற்று   :     பொருட்பற்று, புதல்வர்ப்பற்று,பொய்யுலகப் பற்று ஆக

3

முக்குணம் :    அமைதி, ஆட்சி, அழுந்தல் ஆக

3

(அறுபது)60

உடனுறைவு - ஆண்பெண் சேர்க்கை. பொய்யுலகு - தோன்றி யொடுங்கும் நிலையில்லாத உலகு.

(அ. சி.) ஏதம் - குற்றம். கருவி - தத்துவம்.

(5)

2108. இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை
படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை யுள்ளுறு நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

(ப. இ.) ஆருயிர்கள் ஐம்பாடு எய்தும் இடவகைகள் ஐந்தென்ப. அவை: நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்ப. இவற்றுள் உயிர்ப்படங்கல் ஒழித்து ஒழிந்த நான்கினும் உள்ள கருவிகளை