|  
        
       
         
          | 106. 
           | 
          பரசுவந் 
            தியர்முன் சூதர் மாகத ரொருபாற்  
                                              பாங்கர் 
             | 
            | 
         
         
          |   | 
          விரைநறுங் 
            குழலார் சிந்தும் வெள்வளை  
                                      யொருபான் 
            மிக்க 
            முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி  
                                     யொருபால் 
            வென்றி 
            அரசிளங் குமரன் போது மணிமணி மாட வீதி. | 
          21 | 
         
       
       
           (இ-ள்.) 
      பரசு...முழங்கொலி ஒருபால் - தனது புகழ்  
      பரவிக்கொண்டு வரும் வந்தியர்கள் முன்னும், சூதர்கள், மாகதர்கள்  
      (ஆகிய இவர்கள்) ஒருபக்கமுமாக வரவும், தாம் அணிந்த  
      வெள்வளைகளைச் சிந்தும் பெண்கள் ஒருபக்கம் வரவும்; முழங்கி  
      ஒலிக்குமாறு முரசும் சங்கமும் ஒலிப்பவர் ஒருபக்கம் வரவும்;  
      வென்றி. வீதி - வெற்றி பொருந்திய அரசனது இளங்குமரன் அழகிய  
      மணிமாடவீதியில் உலாப் போகின்றான். 
       
           (வி-ரை.) 
      பரசுதல் - புகழ்களைப் பாடிவருதல். இதனைச் 
       
      சூதர் மாகதர்களோடும் தனித்தனி கூட்டுக. வந்தியர் 
      - மங்கலப்  
      பாட்டுக்களினால் வந்திப் போர் - பாணர் - என்பர். வந்தித்தலாலே  
      வந்தியர் என்பர். சூதர் - அவ்வப்போது செய்யும் 
      செயல்களைப்  
      பற்றிக் கட்டியங்கூறுவோரும், அரசனைத், தொன்றுதொட்டுத்  
      துயிலெழுப்புங் காலத்தும் பிற சமயங்களினும் பாடுவோரும். இவர்கள்  
      நின்றேத்துவோர். மாகதர் - அரசனது வீரச் 
      செயல்களைப் புகழ்ந்து  
      பாடுவோர் இவர்கள் இருந்தேத்துவோர். 
       
           வெள்வளை சிந்துங் குழலார் என்று கூட்டிப் பொருளுரைக்க. 
       
      குழலார் வெள்வளை சிந்துதல் - இவ்வரசர் போன்ற 
      நாயகனை  
      நாம் அடைவோமோ என்று மனம் வருந்த, அதனால் மேனி  
      இளைத்தல். “கண் களங்கஞ் செய்யக் கைவளை சோர...“  
      பொன்வண்ணத்தந்தாதி 3-வது பாட்டு. “ஏர்பரந்தவின வெள்வளை  
      சோரவென் னுள்ளங் கவர் கள்வன்“ (திருஞா - நட்டபாடை- பிரம  
      புரம் - 3). உத்தம நாயகன் உலாவருங் காலத்து இவ்வாறு மகளிர்க்கு  
      நிகழும் மெய்ப்பாடு கூறுதல் இலக்கிய வழக்காதலின் இஃது இங்குக்  
      கூறப்பட்டது என்க. “...நெறிபல வார்குழலார் மெலிவுற்ற  
      நெடுந்தெருவிற், செறிபல வெள்வளை போயின தாயர்கள்தேடுவரே“  
      (பதினொ - திருமுறை - பட்டினத்தடிகள் - திருவேகம்ப -  
      திருவந்தாதி - 53.) வெள்வளை - சங்குகளினாற் செய்த வளைகள்.  
      “சங்கமரும் முன்கைத் தடமுலையார் மேலெய்வான்“ என்ற  
      ஞானவுலாவுங் காண்க. குழலார் - நாடகப் பெண்களென்று 
       
      கூறுவாரு முளர். 
       
           ஆர்ப்ப முழங்கு ஒலி 
      - ஆர்த்ததனால் எழுந்த  
      ஒலித்தொகுதி. ஒலிப்பவர் - வருவிக்கப்பட்டது. 
      வென்றி -  
      அரசனுடைய வெற்றி. “கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திட“ 
      என்று  
      மேலே கூறியதற்கேற்ப வென்றி என்றார். போதும் - இதனைப்  
      பெயரெச்சமாக்கி - போந்த வீதியில் இவையிவை யிருந்தன -  
      என்றும் கூறுவர். 
       
           குமரன் 
      - பாலியம், யௌவனம், கௌமாரம், வார்த்திகம்  
      என்னும் பருவம் நான்கிலே இளங் கௌமாரப் பருவ மடைந்தவர்  
      என்க. 
       
           வந்திகண்; வந்திகர் 
      - என்பனவும் பாடங்கள்.  21
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |