| 
	 
       
	
	
		
      
        
	      |  
            166.  | 
	       இயம்பல 
            துவைப்ப வெங்கு மேத்தொலி யெடுப்ப  
                                                மாதர் 
             
            நயந்துபல் லாண்டு போற்ற நான்மறை யொலியி  
                                              னோங்க | 
            | 
	 
	
	      |   | 
	       வியந்துபார் 
            விரும்ப வந்து விரவினர்க் கின்பஞ்  
                                              செய்தே 
             
            யுயர்ந்தவா கனயா னங்கண் மிசைக்கொண்டா  
                                        ருழைய 
            ரானார்.  | 
          20 
             | 
	 
	 	
			
		
       
            (இ-ள்.) 
        இயம்பல.......விரும்ப - பலவகை வாத்தியங்களும்  
        முழங்கவும், எங்கும் சிறப்புச் சொல்லும் (சத்தம்) ஒலி பெருகவும்,  
        மங்கலப் பெண்கள் விருப்பத்துடன் பல்லாண்டு வாழ்த்தவும்,  
        வேதவொலிகள் மேலெழுந்து ஓங்கவும், உலகத்தார் வியப்பும்  
        விருப்பமும் கொள்ளவும்; வந்து.......ஆனார - மண எழுச்சி காண  
        வந்து கூடியவர் யாவர்க்கும் மகிழ்ச்சி செய்து சுற்றத்தார்கள்  
        அவரவர் தத்தமக் கேற்ற உயர்ந்த பல்லக்கு முதலிய  
        வாகனங்களின்மீது ஏறிக்கொண்டார்கள். 
            (வி-ரை.) 
        துவைப்ப - எடுப்ப - போற்ற ஓங்க - விரும்ப  
        - இன்பஞ் செய்து - உழையரானார் - மிசைக்கொண்டார் - என்று  
        முடிக்க. 
            துவைப்ப 
        - இயங்களை முழக்க. எடுப்ப - பின்னர் மாதர்  
        போற்ற என்பதனால் இவர்கள் பலவகை ஏத்துச்சொல்வோர்; மாகதர்  
        - வந்தியர் முதலியோர். நம்பிஆரூரர் மன்னவர்  
        திருவுமுடையாராதலின் இவர்களும் கூடினர் என்க. 
            ஏத்தொலி 
        - ஏத்துகின்றதால் எழும் ஒலி. புகழ்களைச்  
        சொல்லும் மொழிகள் ஏத்து - எனப் பெறுவன. பல்லாண்டு -  
        மங்கல மாதர்கள் போற்றும் மங்கல வாழ்த்து. 
            நான் 
        மறை ஒலியின் ஓங்க - ஒலியே உருவமாய் உள்ள  
        வேதப்பகுதிகளை உரிய உயர்ந்த சுரங்களோடு மறையவர் சொல்ல.  
        இவை மணம் முதலிய சுபங்களிற் சொல்லும் வேதப்பகுதிகள். 
            வாகன 
        யானங்கள் - குதிரை முதலிய வாகனங்களும் 
        சிவிகைகளும் என்க. சிவிகைகளாகிய வாகனங்கள் என்றலுமாம். 
            உழையர் 
        - பக்கத்தே சூழ்ந்து வரவேண்டியவராகிய  
        சுற்றத்தார்களும் பரிசனமும். உடன் இருக்க வேண்டியவராதலின்  
        உழையர் என்றார். சுற்றியிருத்தலின் சுற்றம் என்பது பெயராம்.  
        சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் என்பது குறள். 
            இன்பம் 
        செய்தே.....மிசைக்கொண்டார் - என்று கூட்டுக.  
        வந்தவர்களுக்கு இன்பமாகிய பாராட்டுக்களைச் செய்தபின்  
        யானங்களில் ஏறினர். 
            இன்பம் 
        - இனிய மனத்தோடு, சொல்லும் உபசரிப்புச்  
        சொற்களும், செய்யும் செயல்களுமாம். செயல் - தாம்பூலம் முதலிய  
        வழங்கி உபசரித்தல். 20      
       |