| 170. 
           | 
          நிறைகுடந் 
            தூப தீப நெருங்குபா லிகைக ளேந்தி | 
            | 
         
         
          |   | 
          நறைமல 
            ரறுகு சுண்ண நறும்பொரி பலவும் வீசி 
            யுறைமலி கலவைச் சாந்தி னுறுபுன றெளித்து வீதி 
            மறையவர் மடவார் வள்ளன் மணமெதிர் கொள்ள 
                                             வந்தார். | 
          24 | 
         
       
       
           (இ-ள்.) 
      வெளிப்படை. (புத்தூரின்) மறையவர்களும்  
      மடவார்களும் - நிறைகுடம் - தூபம் - விளக்கு - முளைப்  
      பாலிகைகள் முதலிய மங்கலப் பொருள்களை ஏந்திக் கொண்டும்,  
      மலர் - அறுகு - பொற் சுண்ணப்பொடி - பொரி - முதலியவற்றை  
      இறைத்துக் கொண்டும், சந்தனங் கலந்த பனிநீர்  
      தெளித்துக்கொண்டும், மணஎழுச்சியிற் போந்தவர்களை  
      எதிர்கொண்டு வந்தார்கள். 
       
           (வி-ரை.) 
      மறையவரும் மடவாரும் - ஏந்தி - வீசி - தெளித்து  
      - எதிர்கொள்ள வந்தார் - என முடிக்க. இவ்வாறு திருவிழா  
      முதலியவற்றில் எதிர்கொள்ளுதல் அந்நாள் மரபு. 
       
           நிறைகுடம் - 
      பூரண கும்பம் என்பர். இவை முதலியவை  
      ஏந்திவரும் மங்கலப் பொருள்கள். 
       
           நெருங்கு பாலிகை - 
      [நீண்முளை சாத்தினார்கள் என  
      வரிசை 157-ம் பாட்டிற் கண்ட] முளைகள் நெருங்கி முளைத்து  
      வளர்ந்த முளைப்பாலிகைகள். மலர் - அறுகு - சுண்ணம் - பொரி  
      முதலியவற்றைக் கலந்து வீசுதல் மங்கல மரபுகளில் ஒன்று. பலவும்  
      என்றதனால் இவற்றோடு பிற பொருள்களும் சேர்த்தல்  
      குறிப்பிட்டதாம். 
       
           உறைமலி கலவை சாந்து - கலவை சேர்த்து 
      உறைத்த  
      மணமிக்க சந்தனம். உறுபுனல் தெளித்து - அந்தச் 
      சந்தனம்  
      சேர்ந்த பனிநீரைத் தெளித்தல். இது இக்காலத்தும் வழக்கமாம்.  
      தெளித்து - எழுச்சியிற் போந்தார்மீது தெளித்து. 24 
         |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |