| 201. 
           | 
          அவ்வுரை 
            யவையின் முன்பு நம்பியா ரூரர்  
                                           சொல்லச் | 
            | 
         
         
          |   | 
          செவ்விய 
            மறையோர் நின்ற திருமறை முனியை  
                                           நோக்கி 
            ‘இவ்வுல கின்க ணீயின் றிவரையுன் னடிமை  
                                           யென்ற 
            வெவ்வுரை யெம்முன் பேற்ற வேண்டு'மென்  
                                    றுரைத்து 
            மீண்டும். 
             | 
          55 | 
         
       
        
       
           (இ-ள்.) 
      அவ்வுரை......சொல்ல - நம்பி ஆரூரர் சபையின்  
      முன்னே இவ்வாறு சொல்லிவிடவே; செவ்விய மறையோர்.......உரைத்து  
      - அச்சபையிலிருந்த செம்மையந்தணர்கள் நின்றவராகிய திருமறை  
      முனிவரைப் பார்த்து ‘இந்த உலகத்திலே நீ இன்று இவரை அடிமை  
      என்ற வசை வழக்கை எங்கள் முன்பு நிரூபித்துக் காட்டவேண்டும்'  
      என்று சொல்லி; மீண்டும் - மேலும் (சொல்வாராயினர்).  
       
           (வி-ரை.) 
      அவை - சபை. இங்கு நீதிமன்றம்.  
       
           செவ்விய மறையோர் - அந்தணரவையின் மிக்கார் - 
       
      வேதபாரகரின் மிக்கார் - என்று முன்னர்க் கூறியதற்கேற்ப இவ்வாறு  
      கூறினார். செம்மைக் குணமுடையோர். ஒருபால்பற்றிச் செல்லா  
      நடுநிலையே மனச்செம்மையாம். 
       
           நின்ற திருமறைமுனி 
      - (1) முன்னே வழக்குத்  
      தொடுத்துநின்ற மறைமுனிவர் (2) அருமறை முடிவில் நடுவினிற்  
      சிரத்தில்நின்ற முனி (3) நின்ற திருத்தாண்டக முதலிய வேதங்களிலே  
      சொல்லியவாறு எல்லாமாய் நிறைந்து நின்ற முனிவர். 
       
           இவ்வுலகின்கண்...வெவ்வுரை - இவ்வுலகின்கண் - உலகியலில் 
       
      நிகழாதது; நீ - உன்னைத்தவிர வேறு எவரும் 
      சொல்லாதது;  
      அடிமை என்ற- அடிமையல்லாதாரை அடிமையாக்கியது;  
      வெவ்வுரை - காதால் கேட்கவும் தகாதது; என்றிவ்வாறு  
      சொற்றோறும் பொருளழுத்தம் பெறக் கூறினார். 
       
           எம்முன்பு ஏற்றவேண்டும் - எமது சபை முன்னர் 
       
      நிரூபிக்கும் பொறுப்பு உம்முடைய பேரில் உள்ளது. Burden of  
      proof என்பர் நவீனர். 
       
           மீண்டும் - 
      எம்முன்பு ஏற்றவேண்டும் என்று சொல்லியதைத்  
      தொடர்ந்து, அவ்வாறு ஏற்றுதற்கு இன்னின்னவற்றை நீ காட்டுதல்  
      வேண்டும் என்று நியாய வரம்புகளை அறிவித்துக்காட்டியவாறு. இது  
      நியாய விமரிசனம் செய்து காட்டும் முறை. நீதிச் சபையாரது  
      கடமைகளில் ஒன்று. ‘ஏற்றவேண்டும்; அதற்காக' என்று தொடங்கிப்  
      பின்வருமாறு விவரிக்கின்றார்கள்.  
       
           இவ்வுலகின்கணின்றிங்கிவரை - என்பதும் பாடம். 55 
       
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |