| 266. 
           | 
          மாளிகைகண் 
            மண்டபங்கண் மருங்குபெருங்  
                                      கொடிநெருங்கத் | 
            | 
         
         
          |   | 
          தாளினெடுந் 
            தோரணமுந் தழைக்கமுகுங் 
                                      குழைத்தொடையு 
             
            நீளிலைய கதலிகளு நிறைந்தபசும் பொற்றசும்பும்  
            ஒளிநெடு மணிவிளக்கு முயர்வாயி  
                                      றொறுநிரைத்தார். | 
          120 | 
         
       
       
           (இ-ள்.) 
      (அங்ஙனம் முற்பட்ட அவர்கள்) மாளிகைகள் ...  
      நெருங்க - மாளிகைகளிலும் மண்டபங்களிலும் நீண்டு உயர்ந்த  
      கொடிகளை மேற்பக்கத்திலே நெருங்கும்படி அமைத்து; தாளின் ...  
      நிரைத்தார் - அடிப்பக்கத்திலே நீண்ட தோரணங்களையும்  
      (காய்க்குப் பயன்படாதனவாய்) இலைகளடர்ந்த கமுகு வகைகளையும்  
      தழைகளாற் றொடுக்கப்பட்ட மாலைகளையும் நீண்ட  
      இலைகளையுடைய வாழை மரங்களையும் நீர் நிறைந்த பசும்பொற்  
      கலசங்களையும் வரிசைப்பட வைத்த மணிகளாலாகிய  
      விளக்குகளையும் ஓங்கிய வாயில்கள் எங்கும் ஒழுங்குபெற  
      வரிசையாய் அமைத்தார்கள். 
       
           (வி-ரை.) 
      எழுந்த அவர்கள் என்ற எழுவாய்  
      மேற்பாட்டிலிருந்து வருவிக்க. 
       
           மாளிகைகள் - 
      தனி யிருப்புக்கள்; மண்டபங்கள் பொது  
      இருக்கைகள். 
       
           தாளின் - 
      அடிப்பக்கத்திலே, தாளின் என்றதனாற் கொடிகள்  
      மேற் பக்கத்தே நெருங்கின என்க. மெய்ப்பொருள் - புரா - 8  
      பாட்டுப் பார்க்க. தாளின் - கால்கள் நாட்டி 
      அவற்றிலே என்பாரு  
      முண்டு. 
       
           தழைக் கமுகும் 
      - காய்க்காகவன்றி அலங்காரத்திற் கென்றே  
      செறிவாய்ப் பயிராக்கப் பெற்று இலைகள் அடர்ந்து வளர்ந்த கமுகு. 
       
      கமுகுத் தழையும் - என மாற்றி உரைத்தலுமாம். 
       
           குழைத் தொடை - குழை 
      - மாவிலை முதலியன.  
      இலைகளைக் கொண்டு தொடுத்த மாலைகள். பலவகை  
      மாலைகளையும் அளவாய் அறுத்துத் தொங்க வைத்தல் அலங்கார  
      வகைகளில் ஒன்று. பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை,  
      துணையுற அறுத்துத் தூங்க நாற்றி என்ற திருமுருகாற்றுப்படை  
      காண்க. 
       
           ஒளி - 
      வரிசை. ஒளி என்பது எதுகை நோக்கி முதல் நீண்டு  
      வந்தது என்று உரைத்தலுமாம். இரத்தினங்கள் பதித்த தீபங்கள்  
      என்றும், ஒரு முழுமாணிக்கத்தாற் செய்யப்பட்ட விளக்கு என்றும்  
      கூறுவர் மகாலிங்கையர். சேடு கொண்டவொளி தேர்நிரை தோறும்  
      (வரிசை-247) என்றதும் காண்க. 
       
           உயர் வாயில் - வாயில்கள் 
      - நன்மை உட்புக விடுக்கவும்,  
      தீமை உட்புகாமல் தடுக்கவும் உதவும் உயர்வுடைய வாயில், ஓங்கிய  
      பெரிய வாயில்கள் என்றுரைத்தலுமாம். 
       
       
      
         
          ............................................................... 
            பெரியோர் உள்ளம்  
                                                    போல 
            ஓங்குநிலைத் தன்மையவாய், அகில முய்ய வுமைபாக ரருல்  
                                       சய்த 
            வொழுக்க மல்லாற் 
            றீங்குநெறி யடையாத தடையு மாகி ......  
                                    - 
            திருக்குறிப்பு - புரா - 88 | 
         
       
       
      நிரைத்தார் - வரிசைப்பட 
      அமைத்தார்கள். 120 
       
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |