| 29.  
           | 
          சம்பு 
            வின்னடித் தாமரைப் போதலால் 
             | 
            | 
         
         
          |   | 
          எம்பி 
            ரானிறைஞ் சாயிஃ தென்? னெனத் 
            தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன் 
            நம்பி யாரூர னாந்தொழுந் தன்மையான், | 
          19 | 
         
       
            (இ-ள்.) 
        சம்புவின் ... என்? என் 
        - எமது தலைவரே!  
        சிவபெருமானது திருவடிகளைத் தவிர வேறு எதனையும் பணியாத  
        இயல்புடையீர்; இப்போது இந்தச் சோதியைத் தொழுது எழுந்து திசைநோக்கிச் செல்லும் 
        காரணம் என்ன? என்று மாதவர்கள்  
        கேட்க;தம்பிரானை ... தன்மையான் - 
        இங்கு வருகின்றவர்  
        தம்பிரானாகிய சிவபெருமானையே தமது உள்ள முழுதும் தழுவிக்  
        கொண்டுள்ளவர்; அவர் நம்பி ஆருரர் என்னும் பேருடையவர்;  
        அவர் நம்மாற் றொழப்படும் தன்மையுடையவர். (என்று கூற -  
        எனவரும் பாட்டுடன் தொடர்ந்து கொள்க.) 
            (வி-ரை.) 
        சம்பு - சுகத்தை உண்டுபண்ணுபவன்,  
        சிவபெருமான்.உயிர்கள் துக்க முற்றவர்; துக்கம் போக்கிச் சுகத்தை  
        உண்டுபண்ணுவதால் இவனை அடைகிறார்கள். வஞ்சநமன் 
         
        வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும், அஞ்சி யுனையடைந்தே  
        னையா பராபரமே என்பது தாயுமானவர் திருவாக்கு. 
         
             சம்பு இன் அடித்தாமரைப் போது - சிவபெருமானது இனிய 
        தாமரை மலர் போன்ற திருவடி. இன் அடி - இனிய திருவடி.  
        அடித்தாமரைப்போது என்பதைப் போது போன்ற அடி என்று  
        மாற்றியுரைத்துக் கொள்க. 
         
             இது என்? - சம்புவின் திருவடியே யன்றி வேறொன்றையும் 
        வணங்காத தலைவராகிய தேவரீர் இப்போது இச்சோதியை நோக்கிக்  
        கைகூப்பித்தொழுது செல்லும் இது என்ன? 
           தம்பிரான் 
        - முழுமுதற் கடவுள்.   
            உள்ளந் 
        தழீஇயவன் - உள்ளத்திலே இடையீடின்றி முழுதும்  
        நிறையும்படி பொருத்தி வைத்தவன். நாம் வணங்கும் தம்பிரானைத்  
        தம்மனத்தே நிறைய வைத்துக்கொண்டிருப்பவர். 
            நாம் 
        - சம்புவையன்றி வணங்காத நாம். நாம் தொழும் -  
        நம்மாற் றொழப்படும்; தொழும் என்பது செயப்பாட்டுவினைப்  
        பொருளில் வந்தது. தன்மை - உள்ளந்தழீஇய 
        காரணத்தால்  
        வந்ததென்பது குறிப்பு.  19 
   |