| 362.
	  | 
	       அளவிலா மரபின் 
            வந்த மட்பல மமுதுக் காக்கி  
             | 
	  | 
	 
	
	      |   | 
	       
            வளரிளந் திங்கட் கண்ணி மன்றுளா ரடியார்க்  
                                            கென்றும் 
             
            உளமகிழ் சிறப்பின் மல்க வோடளித் தொழுகு  
                                              நாளின் 
             
            இளமைமீ தூர வின்பத் துறையினி லெளிய  
                                              ரானார். 
             | 
	         3 
             | 
	 
	 
             (இ-ள்.) 
        அளவிலா......ஆக்கி - (அவர்) அளவுட்படாத 
        -  
        பரம்பரையில் தமது மரபு வழியே நின்று செய்துவந்த தொழிலிலே  
        செய்யும் மட்கலங்களைத் தமது இல்வாழ்க்கையின் சீவனத்துக்கு  
        ஆகிய அளவில் மட்டுமே ஆக்கிக்கொண்டு; வளர்.....ஓடளித்து 
        -  
        வளர் பிறையை அணிந்த இறைவனடியார்கள் வேண்டிய  
        பலிப்பாத்திரங்களை அவர்கள் எப்போதும் மகிழ்ந்து கொள்ளும்படி  
        நிறையக் கொடுத்து; ஒழுகு நாளில் - ஒழுகி 
        வருகின்ற நாளிலே;  
        இளமை....ஆனார் - இளமை மீதூர் தலினால் 
        சிற்றின்பத் துறையிலே  
        எளியராயினார். 
         
             (வி-ரை.) 
        அளவிலா மரபின் வந்த - அளவு 
         
        காணமுடியாதபடி தொன்று தொட்டு வழங்கி வந்த மட்கலத்தொழில்.  
        அளவிட முடியாத பயனுடையதாய், ஆரியன் குலால 
        னாய்நின்றாக்குவ னுலக மெல்லாம் என்றபடி, இறைவனது சிருட்டித்  
        தொழிலுக்கு இணை சொல்லத்தக்க மரபில் வந்ததாய் உள்ள  
        என்றுரைத்தலுமொன்று. 
         
             அமுதுக்காக்கி - 
        அமுது சமைத்தற்காக வேண்டிய பற்பல  
        வகைகளிலும் படைத்து என்று உரை கூறுவாருமுண்டு. தமது  
        அமுதுக்கு - சீவனத்துக்காக மட்கலங்களையும், அடியார்க்கு உதவ  
        ஓடுகளையும் - பலிப்பாத்திரம் முதலியவையும் - செய்து வந்தார்  
        என்பதே சிறந்த பொருளாம். தமது குலத்துக்குரிய அளவிலா  
        மட்பாண்டங்களைச் சீவனார்த்தமாக வனைந்து என்பது இராமநாதச்  
        செட்டியார் உரைக்குறிப்பு. 
         
             வளர் இளந் திங்கட் 
        கண்ணி மன்றுளார் - வளர் திங்கள்  
        எனவும், இளந்திங்கள் எனவும் கூட்டுக. முன்னர்த் தேய்ந்து வந்தது  
        வளர்ச்சி பெறுவதாய் என்க. இளந்திங்கள் 
        - பிறைச்சந்திரன்.  
        மாதர்ப் பிறைக்கண்ணி யானை, போழிளங் கண்ணியினானை, 
         
        வளர்மதிக் கண்ணியி னானை என்ற அப்பர் பெருமான்  
        தேவாரங்கள் (திருவையாறு - காந்தாரம்) காண்க. திங்களைத்  
        தலையிற் சூட்டிய மாலைபோல அணிந்தவன். உளமகிழ் சிறப்பின் -  
        உள்ளம் மகிழத்தக்க சிறப்பினாலே. மல்க 
        - நிறைய. மகிழ் சிறப்பின்  
        உளம் மல்க என்று மாற்றிக் கூட்டியுரைத்தலுமாம். 
         
             இளமை மீதூர 
        - இளமை மீதூரப்பெற்றதனாலே. மீதூர -  
        மிகுதிப்பாட்டை அடைந்ததனாலே. இன்பத்துறை 
        - இங்குச்  
        சிற்றின்பப் பகுதியாகிய காமச்செயல்களைக் குறித்து நின்றது. 
         
             எளியரானார் 
        - அது வலிமைபெறத் தாம் அதன்  
        ஆட்சிக்குட்பட்டு எளியராக ஆயினார். ஆயினவகை பின்பாட்டிற்  
        குறித்தார். பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் நூல்களிற்  
        றடுக்கப்பட்டதாயினும் எளியராயினமையில் அதனை  
        விலக்கலாகாதவராயினார். 
         
             இளமை மீதூர 
        - என்பதற்குக் கழிந்த இளமை பிறர்போலக்  
        கழிந்தே போகாது மீளவும் பெறும்படியாக; மீது - 
        மேலும்; ஊர -  
        வர - என்ற சரிதக்குறிப்புப் பொருளும் தொனித்தல் காண்க. என்றும்  
        மன்றுளார் உளமகிழ் சிறப்பின் மல்க அடியார்க்கு ஓடளித்து என்று  
        கூட்டி யுரைத்தலுமொன்று. 
         
             அளவிலாப் 
        - பொருளின் மரபின் வாழ்க்கை - என்பனவும்  
        பாடங்கள்.  3  
       |