| 372. 
             | 
           நண்ணிய 
            தவச்சிவ யோக நாதரைக்  
             | 
            | 
         
         
          |   | 
           கண்ணுற 
            நோக்கிய காத லன்பர்தாம் புண்ணியத்  
            தொண்டரா மென்று போற்றிசெய் தெண்ணிய  
            வகையினா லெதிர்கொண் டேத்தினார்.  
             | 
          13 | 
         
       
            (இ-ள்.) 
        வெளிப்படை. மேலே கூறியவாறு நண்ணிய  
        தவக்கோலம் பூண்ட சிவயோக நாதரைக் கண்ணாரக் கண்ட  
        ஆசைமிகுந்த அன்பனார், இவர் புண்ணியத் தொண்டரேயாம் என்ற  
        கருத்துடன் துதித்து நினைத்திருந்த வகையினுக் கேற்ப எதிர்கொண்டு  
        சென்று வணங்கித் துதித்தார். 
         
             (வி-ரை.) 
        தவச்சிவயோகநாதர் - தவக்கோலமுடைய 
         
        சிவயோகியார். தவம் நண்ணிய - செய்த தவத்தினாலே நண்ணிய  
        என்று கூட்டியுரைத்தலுமாம். யோக நாதர் - யோகிகளுக்கெல்லாம்  
        பெரியவர் - தலைவர். யோகத்தாற் கிடைக்கும் பொருளாகிய  
        இறைவர் என்றதும் குறிப்பாம். 
         
             கண்ணுற நோக்கிய 
        - கண்களினாலே ஆர நோக்கிய.  
        கண்ணாரக் கண்டும் என் கையாரக் கூப்பியும் என்ற அம்மையார்  
        திருவந்தாதியும் (25) காண்க. இது குறிக்கவே நோக்கிய என்றதனோ  
        டமையாது கண்ணுற நோக்கிய என்றார். கண் காதலுற நோக்கிய  
        அன்பர் என்று கூட்டி உரைத்தலுமாம். 
         
             காதலன்பர் 
        - மெய்யடியார்கட்கான பணிசெயும்  
        விருப்பினின்றவரான (361) தொண்டர். காதல் 
        - நாயகன்  
        நாயகிகளிடத்து நிகழ்வது. அடியார்களே தமது நாயகர்கள் -  
        தலைவர்களாவார் எனக் கொண்டு ஒழுகும் ஆசையாதலால் காதல்  
        என்ற சொல்லாற் கூறினார்.  
         
      
         
          உன்னடியார் 
            தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோம் 
            அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து 
            சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் 
               (9) | 
         
       
       
      
         
          | எங்கொங்கை 
            நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க 
            (19) | 
         
       
      என்ற (திருவெம்பாவை) 
        திருவாசகங்கள் காண்க. 
         
             ஆசையொடு மானடியா ரடியாரை யடைந்திட்டு 
        என்பது  
        சாத்திரம். 
         
             புண்ணியத் தொண்டராம் 
        - புண்ணியஞ் செய்தமையாலே  
        தொண்டராகப் பெற்றார் இவராகும். நாம் செய்த புண்ணியத்தினாலே  
        போந்த தொண்டர் - அடிமை செய்யும் புண்ணியமுதவும் 
        தொண்டர்  
        - என்றலுமாம். புண்ணியம் - இங்குச் சிவ புண்ணியம் குறித்தது. 
         
             போற்றிசெய்து எண்ணிய 
        வகையினால் - மனத்தாற்  
        றுதித்துக்கொண்டு இது வளர அன்பர் பணிசெய்வதிலே தாம்  
        எண்ணியிருந்த எல்லா வகையாலும், வழக்கமாய் அன்பர்களைப்  
        போற்றி எண்ணியிருந்த வகையினாலே என்றலுமாம். நித்தமாகிய  
        பத்திமுன் கூர (442) காண்க. எதிர்கொண்டு - எதிர்கொண்டு  
        சென்று.அவர் முன்னர் வரவேற்கச் சென்று. எத்தினார் 
        - உபசார  
        மொழி கூறித் துதித்தார்.  
      
         
           கூர 
            வந்தெதிர் கொண்டு கைகள் குவித்து நின்று                                 செவிப்புலத் 
              தீர மென்மது ரப்ப தம்பரி வெய்த முன்னுரை                              செய்தபின் | 
         
         
          |  
                         - 
              இளையான்குடியார் புராணம் - (3) 
           | 
         
       
            என்றமை 
        காண்க. 
         
             போற்றி 
        செய்து - என்பது கண்டவுடனே தாமிருந்த  
        நிலையில் மனத்தாலும் வாக்காலும் துதித்தல்; ஏத்தினாரென்பது  
        அவர்முன்னர்ச் சென்று உபசரித்துத் துதித்தல்.  
         
             தொண்டர்தாம் 
        - எண்ணிய வுவகையால் - என்பனவும்  
        பாடங்கள். 13 
       |