| 382. 
             | 
           இழையணி 
            முந்நூன் மார்பி னெந்தை!நீர்  
                                          தந்துபோன 
             
             | 
            | 
         
         
          |   | 
          விழைதரு 
            மோடு வைத்த வேறிடந் தேடிக்  
                                           காணேன்; 
             
            பழையமற் றதனி னல்ல பாத்திரந் தருவன்  
                                          கொண்டிப் 
             
            பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும!  
                               வென் 
            றிறைஞ்சி நின்றார்.  
             | 
          22 | 
         
       
            (இ-ள்.) 
        வெளிப்படை. இழைகளாலாகிய அழகிய  
        முந்நூலணிந்த மார்பையுடைய எமது தந்தை போல்பவரே! நீர்  
        என்னிடம் கொடுத்துப் போயின விரும்பத்தக்க திருவோட்டினை  
        அது வைக்கப்பெற்ற இடத்தினும் பிறஇடங்களினும் தேடியும்  
        கண்டிலேன்; ஆதலால், பழையதாகிய மற்ற (கெட்டு ஒழிந்த)  
        அதனைவிட நல்லதொரு வேறு புதிய பாத்திரங் கொடுப்பன்;  
        அதனை யேற்றுக் கொண்டு உமது பாத்திரத்தைக் காணாது  
        போக்கிய இந்தப் பிழையைப் பொறுத்தருள வேண்டும், எமது  
        இறைவரே! என்று சொல்லி வணங்கி நின்றார். 
         
             (வி-ரை.) 
        இழை அணி முந்நூல் - 
        ஒன்பது போலவர்  
        மார்பினில் நூலிழை என்ற அப்பர் பெருமான் (விடந்தீர்த்த பதிகம்  
        - 9) தேவாரம் காண்க. அணி - அழகிய. இழை முந்நூலணிமார்பின் 
        - என மாற்றி அணிந்த மார்பின் - என்றலுமாம். 
         
             எந்தை 
        - சிறுவர்செய்த பிழைகளைப் பொறுத்தருள் செய்வது  
        பெற்றோர் கடமை என்ற குறிப்பில் இங்கு எந்தை என்றார்;  
        பெரியோர்க்கும் அதுவே கடமை என்று பின்னர்ப் பெரும என்று  
        கூறி முடித்தார். 
         
             விழைதகும் ஓடு 
        - பொன் மணி முதலியவற்றை  
        விழையாதாரும் விழையத்தகுவதாகிய ஓடு. இதன் தன்மையை நீர்  
        தெரிவித்தபடி (375) பொன்னினு மணியினும் போற்ற வேண்டுவதென  
        யான் அறிந்துகொண்ட தென்க. 
         
             வைத்த வேறிடம் 
        - வைத்த இடம், வேறிடம் எனத் தனித்  
        தனிக் கூட்டி எண்ணும்மை விரித்துரைக்க. வேறாகக் காப்புற வைத்த  
        இடம் என்றலுமாம். நீர் இப்போது அகலப்போக்கி வைத்திருக்கும்  
        இடத்தின் வேறாகிய இடம் என்ற குறிப்புமாம். 
         
             பழைய மற்றதனின் 
        - பழமையாகியதும், காணாது  
        போனதுமாகிய அதனினும் நல்ல பாத்திரம் - புதியதும் நல்லதும் நீடு  
        செல்வதுமாகிய வேறு ஒரு பாத்திரம். 384- ம் பாட்டில் இக்கருத்தை  
        நாயனாரே விளங்க உரைத்தல் காண்க.        
            
        கொண்டு - ஏற்றுக்கொண்டு அதனைக் கொண்டதுபோலவே 
         
        இதனைக் கைக்கொண்டு 
         
             இப்பிழை 
        - காவல்செய்ய ஒப்புவித்த பொருளைக் காணாமற்  
        போக்கிய இந்தப் பிழை. கேள்வன்றானும் - தொண்டர் கேட்பப் -  
        புக்காய்? தாழ்த்ததென்? என்னத்; (தொண்டரும்) வந்து - தொழுது  
        - உரைப்பாராய் - எந்தை! - ஓடு - தேடிக் காணேன் - நல்ல  
        பாத்திரந் தருவன் - கொண்டு - இப்பிழை - பொறுக்கவேண்டும்  
        என்று (கூறி) இறைஞ்சி நின்றார்- என இவ்விரண்டு பாட்டுக்களையும்  
        தொடர்ந்து முடித்துக்கொள்க.  
         
             விழைதரும் 
        - என்பதும் பாடம். 23 
       |