| 419. 
             | 
           மறைமுனி 
            யஞ்சி னான்போன் மாதினைப் பார்க்க  
                                               மாதும் 
             
             | 
            | 
         
         
          |   | 
           
            இறைவனே! யஞ்ச வேண்டா; வியற்பகை  
                                      வெல்லு 
            மென்ன;  
            வறைகழ லண்ணல் கேளா வடியனே னவரை  
                                            யெல்லாந் 
             
            தறையிடைப் படுத்து கின்றேன்; றளந்தருள் 
                                     செய்யே 
            லென்று,  
             | 
          16 | 
         
       
      
             (இ-ள்.) 
        வெளிப்படை. (அவர்கள் அவ்வாறு வருதல் கண்டு)  
        மறை முனிவர் பயந்தவர்போலக் காட்டி அம்மையாரைப் பார்க்கவே,  
        அவரும் தலைவரே! பயப்படவேண்டாம்; அவர்களை இயற்பகை  
        வெல்லும் என்று சொல்ல; இதனைச் சத்திக்கும் வீரக் கழலணிந்த  
        பெருமையுடையாராகிய நாயனார் கேட்டு, அடியேன் அவர்களை  
        எல்லாம், உமக்கு இடையூறு செய்யாமல் நிலத்தில் வீழ்த்தி  
        விடுகின்றேன்; தேவரீர் தளரவேண்டாம் என்று சொல்லிக்கொண்டே,  
             
             (வி-ரை.) 
        மறைமுனி - மறைகளாற் பேசப்பெற்ற 
        முனிவர் -  
        சிவபெருமான். பொறிவாயி லைந்தவித்தான் - (குறள்);  
        நேரிழையைக் கலந்திருந்தே புலன்க ளைந்தும், வென்றானை -  
        (திருவீழி - திருத்தாண்டகம் - 3) முதலிய திருவாக்குக்களில்  
        இறைவனது முனிவராந்தன்மை விதந்து பேசப் பெற்றிருத்தல் காண்க.  
        முனிவராந்தன்மையை மறைத்துத் தூர்த்த வேடந்தாங்கி வந்தவர்  
        என்றுரைத்தலுமாம். பின்னருந் தவமுனி (430) என்றதும் காண்க. 
         
             அஞ்சினான்போல் 
        - உண்மையில் அஞ்சினாரன்று; கொண்ட  
        வேடத்திற்கும், வந்த செயலுக்கும் ஏற்ப முன்னர்க் கழிபெருங் காதல்  
        காட்டியது (418) போலவே இங்கு அச்சமுங் காட்டினார். 
         
             மாதினைப் பார்த்தது சுற்றத்தார் வந்தபோதும் 
        அம்மை  
        மனந்திரியாமையை உதகரிக்கக் காட்டுவதற்கு.இறைவனே 
        - கணவர்  
        பணியை ஏற்றுச் சென்று நின்றவராதலின் வேதியரைத் தலைவராகக்  
        கொண்டதற்கேற்ப இறைவன் என்று விளித்தார். எல்லார்க்கும்  
        இறைவன் என்ற குறிப்புமாம். 
         
             இயற்பகை வெல்லும் 
        - நாயகிகள் தமது கணவர் பெயரைச்  
        சொல்லலாகாது என்பது விதியும் வழக்குமாம். இங்கு அம்மையார்  
        இப்போது தாம் வேதியரது உடைமைப் பொருளாயினமையாலே  
        நாயனாரிடத்து அவர் தமது கணவர் என்ற நினைப்பினை அறவே  
        ஒழித்து நின்றனர். ஆதலின் அவர் பேராற்கூறியபடியாம். வெல்லும் 
         
        - பலர்பா லொழிந்த நாற்பாலிலும் பொருந்துவதாகிய செய்யும் எனும்  
        வாய்பாட்டு வினைமுற்றாற் கூறிய அழகினைச் சிந்திக்க. 
         
             அறைகழல் அண்ணல் 
        - வீரமும் பெருமையும் ஒருங்கே  
        உடையார் என்பது குறிப்பு. கழல் - வீரங்குறித்தது. 
         
             தறை 
        - எதுகை நோக்கித் தரை என்பது தறை வல்லினமாய்  
        வந்தது. 
         
             தளர்ந்தருள் செய்யேல் 
        - அருள் செய்தல் இங்கு உபசாரங்  
        குறித்த மொழி மாத்திரமாய் நின்றது. தளரேல் என்க. 
         
             அறை கழலன்பர் 
        - என்பதும் பாடம். 16 
	 |