| 451. 
             | 
           மாது 
            கூறுவண் மற்றொன்றுங் காண்கிலேன்;  
             | 
            | 
         
         
          |   | 
           ஏதி 
            லாரு மினித்தரு வாரில்லை;  
            போதும் வைகிற்றுப்; போமிடம் வேறிலை;  
            தீது செய்வினை யேற்கென் செய? லென்று;  
             | 
          12 | 
         
       
       
           (இ-ள்.) 
      வெளிப்படை. அதற்கு அம்மையார் விடை கூறுவாராய்  
      அதனுக்கு வழி வேறொன்றுங் காண்கிலேன்; பிறர் எவரும் இனிக்  
      கொடுப்பவர்களில்லை; காலமும் கழிந்து நள்ளிரவாயிற்று; மற்றும்  
      சென்று தேடக்கூடிய பிற இடங்களும் ஒன்றுமில்லை;தீவினையேனுக்கு  
      இனி யென்ன செயலுளது? என்று சொல்லிப் பின்னரும்,  
       
           (வி-ரை.) 
      மற்றொன்றுங் காண்கிலேன் 
      - மற்று ஒன்றும் -  
      என்றதனால் ஒன்று உள்ளது; அதனைத் தவிர வேறு ஒன்றும் -  
      என்பது, அவ்வொன்று வரும்பாட்டிற் கூறுகின்றார்.  
      அவ்வொன்றினையன்றி மற்ற வழிகளாக எண்ணக்கூடியவற்றை 
       
      எல்லாம் இப்பாட்டிற் றனித்தனி கூறிக் கழித்து அவ்வொன்றினையே  
      முடிபாகக் கூறும் காரணமும் காட்டிய அழகு காண்க. 
       
           ஏதிலார் 
      - அயலார். வேறு ஏதும் தொடர்பு இல்லாதவர். 
       
           இனி - 
      இதுவரைத் தன்னை மாறி 
      யிருக்க உள்ள கடன்கள்  
      தக்கனவுங் கொண்டு (446) விட்டமையின் இனிக் 
      கடன் வாங்க  
      இயலாமை குறித்தவாறு. 
       
           போதும் வைகிற்று 
      - வைகுதல் இங்கு நீட்டித்து விட்டமை  
      குறித்தது. போது - பொழுது. அகாலமாயினமை வேறிடம் 
       
      போகக்கூடாமைக்குக் காரணமாம். 
       
           இடம் வேறு 
      - இவ்வூரன்றிப் பிற ஊறினும் என்ற குறிப்புமாம். 
       
           தீதுசெய் வினையேற்கு என் செயல்? - 
      தாமும் தம்  
      நாயகரும் மனத்தில் எண்ணியபடி அடியார் பூசைக்கு அமுதமைக்க  
      இயலாமையின், இல்லாளின் கடமையாகிய இதற்குரிய தாம் செய்த  
      தீவினையின் பயனாகவே கருதி மனைவியார் வருந்துகிறார்.12 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |