| 80. 
           | 
          மங்கல 
            வினைக ளெங்கு மணஞ்செய்கம் பலைக  
                                            ளெங்கும் | 
            | 
         
         
          |   | 
          பங்கய 
            வதன மெங்கும் பண்களின் மழலை  
                                            யெங்கும் 
            பொங்கொளிக் கலன்க ளெங்கும் புதுமலர்ப் பந்த  
                                            ரெங்குஞ் 
            செங்கயற் பழன மெங்குந் திருமக ளுறையு  
                                            ளெங்கும். | 
          30 | 
         
       
       
           (இ-ள்.) 
      வெளிப்படை. 
       
           (வி-ரை.) 
      மங்கலவினைகள் - பலவகை மங்கலச் செயல்கள். 
       
      மணஞ்செய் கம்பலை - இவற்றுளே சிறந்ததாகவும் 
      கம்பலை  
      மிகுதியாகவும் உள்ளதென்று குறிக்க இதனை வேறுபிரித்துக்  
      கூறினார். கம்பலை - ஆர்ப்பரிப்பு - முழக்கம். கம்பலைகள் என்ற  
      பன்மை பல மணங்களில் நிகழும் பல முழக்கங்களையும் பல  
      வகைகளையும் குறித்தது. 
       
           பங்கய வதனம் 
      - மேற்கூறிய மணமுதலிய மங்கலங்களிற்  
      கூடி வினைசெய்யும் பெண்களின் தாமரைபோன்ற முகங்கள்.  
      பண்களின் மழலை - அவ்வினைகளில் அவர்கள் 
      மழலையினால்  
      மிழற்றும் பண்ணிசைகள். பெண்களின் இன்சொற்கள்  
      பண்போன்றிருத்தலாலும் அவர்களது மழலையிற்  
      பண்களிருத்தலாலும் இவ்வாறு கூறினார். 
       
       
      
        
          |  
             “பண்ணி 
              னேர்மொழி யாளுமை பங்கர்” 
               
                                          - 
              தேவாரம். 
           | 
         
       
       
      
        
          |  
             “பண்சுமந்த 
              பாடற் பரிசு படைத்தருளும், பெண்சுமந்த 
              பாகத்தன்”                       - 
              திருவாசகம் 
           | 
         
       
       
      
        
          |  
             “பண்ணி 
              னேரும் மொழியாளென் றெடுத்துப் பாடப் 
              பயன்றுய்ப்பான்”         - 
              திருநாவுக் - புராணம் 
           | 
         
       
       
      முதலிய திருவாக்குக்கள் 
      காண்க. 
       
           கலன்கள் 
      - ஆடவர்களும் மகளிரும் அணியும் அணிகள். 
       
           புதுமலர்ப் பந்தர் 
      - மேற்கூறிய மங்கல வினைகளுக்காக  
      அமைந்து அழகு செய்வன. புதுமலர்ப் பந்தர் இடுதல் மங்கலஞ்செய்  
      வினைகளுள் ஒன்றென்பது. 
       
       
      
        
          | 
             “பெருந்தண் 
              கணவீர நறுந்தண் மாலை, துணையுற  
                                     
              அறுத்துத் தூங்க நாற்றி” 
           | 
         
       
       
      என்ற திருமுருகாற்றுப்படையாலும் 
      காணப்பெறும். 
       
       
      
        
          |  
             “தாதவிழ்பூந் 
              தொடைமாலைத் தண்பந்தர் களுஞ்சமைத்து”- 
              தடுத் - புரா - 121 
               
           | 
         
       
       
      
        
          |  
             “தோடு 
              குலவு மலர்மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்”- 
              திருநா - புரா - 319 
           | 
         
       
       
      என்பனவாதி புராணத் திருவாக்குக்களும் 
      காண்க.  
       
           செங்கயற் 
      பழனம் - செங்கயல் மீன்களையுடைய வயல்கள். 
       
           திருமகள் உறையுள் - 
      இலக்குமி வாழும் இடம் -  
      இருப்பிடம். மங்கல வினைகள் நிகழும் இடங்கள் யாவும் அந்த  
      வினைகளின் சிறப்புக்களால் இலக்குமி தேவியே வசிக்கும்  
      இடங்களாகத் தோன்றின என்பது. திருமகள் உறையுள் 
      - தாமரை  
      என்றுரைப்பினும் அமையும். 
       
           முதலில் மங்கல வினைகள் எனப் பொதுப்படக் கூறிப் 
       
      பின்னர் அவற்றில் நிகழும் கம்பலைகளும், அவற்றில் வினைசெய்  
      பெண்களும், அவர் மழலையும், அவர் அணிகளும், அவ்விடங்களின்  
      அழகும் தொடர்ந்து கூறினாராயிற்று.  30 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |