| 89. | 
          மாட 
            மாளிகை சூளிகை மண்டபங் | 
            | 
         
         
          |   | 
          கூட 
            சாலைகள் கோபுரந் தெற்றிகள 
            நீடு சாளர நீடரங் கெங்கணும் 
            ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன. | 
          4 | 
         
       
       
            (இ-ள்.) 
      வெளிப்படை. மாடம் முதல் அரங்குவரை குறித்த  
      பலவகை ஆடிடங்களில் எங்கும் ஆடும் மாதர்கள் அணிந்த  
      சிலம்பும் சத்திப்பன. 
       
           (வி-ரை.) 
      மாடம் - மாளிகை - சூளிகை - மண்டபம் -  
      கூடம் - சாலைகள் - கோபுரம் - தெற்றிகள் - சாரம் - அரங்கு  
      இவைகள் வெவ்வேறு ஆடிடங்கள். எண் உம்மைகள் தொக்கன. 
       
           அரங்கு எங்கணும் 
      - அரங்குகளும் ஆகிய ஆடிடங்கள்  
      எங்கும் - என்று பெய்துரைத்துக் கொள்க. நகருள்ளே ஆடல்  
      நிகழும் பலவகை இடங்களையும் இப்பாட்டிற் கூறினார். புறநகர்க்  
      கூத்துக்கு வேறாய்ச், சிலம்பொலிக்க ஆடும் உள்நகர் நிகழ்ச்சியை  
      இங்குப் பிரித்துக் கூறியவாறு. ஆதலின் மேற்பாட்டிலே மணி 
       
      முழவு - என்றதில் மணி என்பதற்கு மணிச் சிலம்பு என்று உரை  
      கூறுதல் பொருந்தாதுபோலும். 
       
           மாளிகை 
      - செய்குன்று. தெற்றி - திண்ணை. சாளரம் 
      -  
      (பலகணி) பல கண்களையுடையனவாய் ஆடற்கென்று  
      அமைக்கப்பெற்ற பெரிய ஆடிடங்கள். நீடு சாளரம் 
      - மிகுந்த  
      காற்று உட்புகுந்து வீசக்கூடியதாய் அமைக்கப் பெறுவதனால்  
      இதனைக் காலதர் என்பர். சிலப்பதிகாரத்துக் காண்க. (கால் -  
      காற்று; அதர் - வழி). நீடு - மான்கண்போன்று 
      நீண்ட என்க. 
       
           அரங்கு 
      - தெருப் பக்கத்து ஆடிடம். “கமழ்தார் வீதித்,  
      தேரொடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலும் ...” என்ற  
      தேவாரமும் காண்க. “மாடமாளிகை கோபுரங் கூடங்கள்  
      மணியரங் கணிசாலை, பாடு சூழ்மதிற் பைம்பொன் செய்  
      மண்டபம் பரிசொடு பயில்வாய” (திருக்கோட்டூர் - நட்டராகம்  
      - 7) என்ற திருஞானசம்பந்தப் பிள்ளையார் தேவாரமும்  
      இங்குக் குறிக்கத்தக்கது.   4 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |