| 92. 
           | 
          செங்கண் 
            மாதர் தெருவிற் றெளித்தசெங் | 
            | 
         
         
          |   | 
          குங்கு 
            மத்தின் குழம்பை யவர்குழற் 
            பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன் 
            அங்கண் மேவி யளறு புலர்த்துமால். | 
          7 | 
         
       
       
           (இ-ள்.) 
      செங்கண்...குழம்பை - சிவந்த கண்களையுடைய  
      பெண்கள் தெருவிலே தெளித்த குங்குமக் குழம்பை; அவர் குழல் ...  
      வீழ்ந்து - அவர் கூந்தலிலே அணிந்த புதுப் பூமாலைகளிலிருந்து  
      பூந்தாதுகள் உதிர்ந்து விழுந்து; உடன் ... புலர்த்தும் -  
      குழம்பினுடனே அங்குப் பொருந்தி அச்சேற்றை உலரச்செய்யும்.  
      ஆல் - அசை. 
       
           (வி-ரை.) 
      பெண்களுக்குச் செங்கண் அழகினைக் காட்டும்.  
      கண் தாமரை போலும் என்று உவமிப்பர். செங்கண் செவ்வரி  
      படர்ந்ததால் உளதாம்.  
       
           செங்கண்மாதர் 
      தெளித்த குங்குமக் குழம்பு - குங்குமக்  
      குழம்பைத் தெருவிற்றெளித்தல் அழகின் பொருட்டு. அளறு 
      -  
      குழம்பினால் உண்டாகிய சேறு. அளறு புலர்த்தும் - தெருவிற்  
      செல்வாரைச் சேறு இழுக்காமல், துகள், புலர்த்தி உபகரிக்கும்.  
      தம்மால் விளைந்த இடையூற்றைத் தாமே போக்குதல் என்ற  
      அறவினையின் குறிப்பாம். “செழுந்தாதே துகளன ... சேறே  
      யிழுக்கின” (திருக்குறிப்பு - 108) என்றும் பின்னரும் சேர்த்துக்  
      கூறுவது இங்குக் காணத்தக்கது. 
       
           கோதை 
      - மாலை. பொங்குதல் - மிகுதல். துகள் 
      -  
      மாலையின் பூக்களிலிருந்து உதிரும் பூந்தாது; மகரந்தப்பொடி.  
      இது அதிசயோத்தி அணி என்பர். இறைவன் திருவடி தூது நடந்த  
      மணத்தினைக் குங்குமக் குழம்பு சாத்தி வணங்கினார் என்ற  
      குறிப்பும் மேற்பாட்டைத் தொடர்ந்து தோற்றுவதாம்.      7
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |