1043.
|
நனைமருவுஞ்
சினைபொதுளி நறுவிரைசூழ் செறிதளிரிற்
றினகரமண் டலம்வருடுஞ் செழுந்தருவின்
குலம்பெருகிக்
கனமருவி யசைந்தலையக் களிவண்டு புடைசூழப்
புனன்மழையோ மதுமழையோ பொழிவொழியா
பூஞ்சோலை. 3 |
(இ-ள்.)
வெளிப்படை. அரும்புகள் நிறைந்த கொம்புகள்
செறிந்து மிக்க வாசனை சூழும் செறிந்த தளிர்களினால் ஞாயிற்றின்
மண்டலத்தைத் தடவுகின்ற செழித்த மரங்களின் கூட்டம் பெருகி,
மேகங்களும் பொருந்தி, அசைந்து அலைதலால், தேன் வண்டுகள்
பக்கங்களிற் சூழ, புனன் மழையோ, அன்றித் தேன்மழையோ,
ஒழியாமல் பெய்வன பூஞ்சோலைகள்.
(வி-ரை.)
நனை - அரும்புகள். பொதுளுதல்
-
நெருங்குதல்.
பொதுளி
நறுவிரைசூழ் - பொதுளுதலால் நல்ல மணம்
சூழும். காரணப் பொருளில் வந்த வினையெச்சம். சூழ் -
தளிர்
என்க.
தளிரின்
தினகரமண்டலம் வருட - மேல் ஓங்கி வளர்ந்த
பூமரங்களின் உச்சியில் தழைத்த தளிர்கள் ஞாயிற்றின் மண்டலத்தை
அளாவ என்று மரங்களின் உயர்ச்சி தோன்றக் கூறிய
உயர்வுநவிற்சியணி. தினகரன் - ஞாயிறு - (சூரியன்), நாள் என்ற
காலப் பகுதியைச் செய்பவன் என்பது பொருள். தினம் - நாள்;
கரன் - செய்பவன். (க்ரு- செய் - பகுதி).
உலகம் தன்னைச் சுற்றிச்
சுழன்று சென்றும் உருண்டும் சூழ்வதனால் உலகுக்குப் பகல் இரவு
என்ற காலப் பாகுபாட்டை ஞாயிறு உண்டாக்குகிறான் என்பது
குறித்தது. மண்டலம் ஞாயிற்றின் கதிர்களின்
சூழல் குறிப்பது.
மண்டிலம்என்று பாடங் கொண்டு வட்டவடிவம்
என்பாருமுண்டு.
தளிரின் வருடும் என்று கூட்டுக. தளிர்களினால் ஞாயிற்று
மண்டலத்தைத் தடவுவன போன்றன என்பதாம். இள்
- கருவிப்
பொருளில் வந்த ஐந்தனுருபு.
வருடும்
செழும் தரு - வருடும்படி உயர்ந்த செழிப்புடைய
மரங்கள், குலம் - கூட்டம். கனம்-
மேகம். மருவி அசைந்து
அலைய - மேகங்கள் சஞ்சரிக்க அவற்றாலும் காற்றினாலும்
அசைவுகள் உண்டாதலின், அசைந்து அலையஎன்று
இரண்டு
இயக்கங்கள் கூறினார்.
கனம்-
தளிர்ச்சினைகளில் மருவி அசைப்பன; வண்டு-
புடைசூழ அச்சினைகளில் உள்ள பூ நனைகளில் புடைசூழ்ந்து
முரன்றும் மொய்த்தும் அவற்றை அலர்த்துவன. கனமருவி
அசைந் தலைதலால் புனன் மழைத் துளி வீழ்வன; வண்டு
நனைகளின் புடைசூழ்ந்து அலர்த்துதலால் தேன்துளி மழைபோலத்
துளிப்பன; ஆதலின் புனன்மழையோ? மதுமழையோ?
பொழிவொழியா என்றார்.
கனமருவி அசைந்தலையப்புனன்மழை,
வண்டுசூழமதுமழை,
பொழிவொழியா என்று நிரனிரையாகக் கூட்டி உரைக்க. இங்கு
மழை என்பது துளிகளின் தூற்றுதலைக் குறித்தது.
ஓகாரங்கள் ஒவ்வோர்
காலம் இரண்டிலொன்று இடைவிடாது
பொழியும் நிலையாகிய சிறப்புக் குறித்தன. ஐயப்பொருளில் வந்தன
என்று கொள்வாரு முண்டு.
இருந்தசையக்
களி வண்டு - என்பதும் பாடம். 3
|