பாடல் எண் :2540
அவ்வகை யவர்க ளெல்லா மந்நிலை மையர்க ளாகச்
சைவநன் மரபின் வந்த தடமயின் மடமென் சாயற
பைவள ராவே ரல்குற் பாண்டிமா தேவி யார்க்கும்
மெய்வகை யமைச்ச னார்க்கும் விளங்குநன் னிமித்த மேன்மேல்.
642
(இ-ள்) அவ்வகை...ஆக - அவ்வகையில் அவ்வமணர்கள் எல்லாம் முன்கூறிய அந்த நிலைமையினையடைந்தவர்களாக; சைவ நன்மரபில்......அமைச்சனார்க்கும் - சைவத்தின் நன்மரபில் வழிவழிவந்த பெரிய மயில் போன்ற இளமையாகிய மெல்லிய சாயலையும் பையரவல்குலையு முடைய பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசி யம்மையாருக்கும் மெய்ம்மையுள் நிற்கும் அமைச்சனாராகிய குலச்சிறையாருக்கும்; நன்நிமித்தம் மேன்மேல் விளங்கும்-நன்னிமித்தங்கள் பலவும் மேலும் மேலும் விளங்குவனவாயின.
(வி-ரை) அவ்வகை - அவர்கள் - அந்நிலைமையர்கள் - அகரம் இரண்டும் சேய்மைச் சுட்டுக்கள் இதுவரை அவர்கள் பானின்ற நமது கருத்தை மீட்டு இனி இப்பக்கம் அணியவர்களாகிய அம்மையார்பால் திரும்பும் குறிப்புடையன. இவ்வாறே முன் "இந்திலையவர்கள்" - "அந்நிலை யமணர்"(2529) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. அந்நிலை - மையர்கள் எனப் பிரித்து, மையர் - அறிவினுள் இருள் கொண்டவர் என்ற குறிப்புமாம்.
சைவ நன்மரபில் வந்த...பாண்டிமாதேவியார்... மங்கையர்க்கரசியார்; இவ்வாறு அம்மையாரைப் போற்றிய திறம் அவர் பாதங்களிற் கொண்ட பேரன்பு மிகுதியையும், சமணத்தை விட்டுச் சைவத்திறத்திற் பேசப் புகுகின்றதனால் விளைந்த பெருமகிழ்ச்சியினையும் உள்ளக் கிளர்ச்சியினையும் உணர்த்திற்று; சைவத்தாபன நிலைபேசத் தொடங்குகின்ற இவ்விடத்து அதனைச் செய்து உதவிய அம்மையைப் போற்றும் தகுதியும் காண்க. "வைசத் துறையின் வழிவந்த குடிவளவர்"(1900)
மெய்வகை அமைச்சனார் - குலச்சிறையார்; ஒருபாற் கோடாது நாட்டுக்கும் அரசுக்கும் உறுதி தேடிய மெய்ம்மைத்திறம் போற்றப்பட்டது; அரசன் எவ்வழி நிற்பினும் தாம் உண்மைத் திறத்தினையே நாடிச் செய்தனர் என்பது; மெய்ம்மை - சத்தாந்தன்மை; அது அழிவில்லாத சிவநெறியின் தன்மை குறித்தது;
பையர...தேவி - பையர வங்குற் பாண்டிமா தேவி(தேவா)
நன்னிமித்தம் மேன்மேல் விளங்கும் என்க; விளங்கும் - விளங்கின; விளங்கும் - பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாது ஒளிகுன்றியிருந்த நிலை நீங்கி விளங்க நின்றமை காட்டுதலின் விளங்கும் நல் நிமித்தம் - என்றார்; பழம்பெருஞ் சைவத்தின் பழம் பெருநிலை விளங்க வருவனவாதலின் இவை பொதுப்படக் கூறுவதன்றி இன்னவென்று விரிக்க வேண்டாவாயின.
அமணரெல்லாம் - என்பதும் பாடம்.