பாடல் எண் :2559
ஆங்கனம் போற்றி யடிபணிந் தவர்மே
லளவிலா வருள்புரி கருணை
தாங்கயி மொழியாற் றகுவன விளம்பித்
தலையளித் தருளுமப் பொழுதில்
ஓங்கெயில் புடைசூழ் மதுரைதோன் றுதலு
முயர் தவத் தொண்டரை நோக்கி
"ஈங்குநம் பெருமான் றிருவால வாய்மற்
றெம்மருங் கின" தென வினவ,
661
(இ-ள்) ஆங்கனம்...பொழுதில் - அவ்வாறு துதித்துத் திருவடியில் வீழ்ந்து பணிந்தவர்மேல் அளவில்லாத அருளைத் தரும் கருணை கூந்த மொழிகளால் தக்கவற்றைச் சொல்லித் தலையளி செய்தருளும் அப்போது; ஓங்கு எயில்... தோன்றுதலும் - ஓங்கிய மதில்கள் பக்கங்களிற் சூழ்ந்த மதுரையம்பதி கட்புலப்படத் தோன்றுதலும் கண்டு; உயர்தவத் தொண்டரை...வினவ - உயரும் தவமுடைய தொண்டரைப் பார்த்து, "இவ்விடத்து நமது இறைவர் எழுந்தருளுகின்ற திருவாலவாயானது மற்று எப்பக்கத்தில் உள்ளது?" என்று கேட்க;
(வி-ரை) அடிபணிந்தவர்மேல்-அடிபணிந்த குலச்சிறையாரும் அவரைத் தம் பொருட்ச் சென்று அடிபணிவீரென்ற ஏவிய அம்மையாரும் ஆகிய இருவர் மேலும் என்பது குறிப்பு.
அளவிலா... தலையளித்தருளும் அப்பொழுதில் - கருணையை உட்கொண்ட மொழிகளால் தலையளி செய்தபோதில்; அம்மையார் பணித்தபடி கூறிப் பணிந்த குலச்சிறையாருக்கு அதனை ஏற்று அருளிய மொழிகளாற் கூறிச் சிறப்பருளும் மரபு பற்றியது. என்றலுமாம்; "பன்னலம் புணரும்" "சிவன்றிரு நீற்றினை வளர்க்கும்" (பதிகம்) என்பன முதலியவை காண்க.