பல்லிய நாதம் பொங்கப் படர்திரு நீற்றின் சோதி நல்லொளி வட்ட மாகி நண்ணிமேல் வருவ தென்ன வில்வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற, வெவ்வே றெல்லையில் முத்தின் காளந் தாரைசங் கெங்கு மோத; | 743 | (இ-ள்)பல்லிய நாதம்பொங்க - பலவகைப்பட்ட இயங்களின் ஓசை மிக்கு எழந்திசைக்க;படர்...நிழற்ற - எங்கும் படர்ந்து பெருகும் திருநீற்றின் சோதியானது நல்ல ஒளிவட்டமாக உருவெடுத்துப் பொருந்தி மேலே வருவதுபோல ஒளிபெருகும் முத்துக் கோவைகளையுடைய வெண்குடையானது மேலே நிழலைச் செய்ய; வெவ்வேறு....ஓத - வேறு வேறாக அளவில்லாத முத்துக் காளமும் தாரையும் சங்கங்களும் எங்கும் இசைக்க; (வி-ரை)பொங்க - நிழற்ற- ஓத(ச்) செல்லும் எழுச்சி என, வரும் பாட்டுடன் முடிக்க. திருநீற்றின் சோதி - ஒளி வட்டமாக நண்ணி மேல வருவ தென்ன வெண்குடை நிழற்ற என்றது மேலே கவிந்து நிழற்றும் வெள்ளியமுத்துக் குடையானது திருநீற்றின் பரந்த ஒளி ஒரு வட்டமாகப் பொருந்தி மேல் வருவது போல இருந்ததென்பது மெய்யும் உருவும்பற்றி வந்த உவமம். மதியைச் சூழ்ந்து பரி வேடம் ஒளி வட்டமாகப் பொருந்தும் காட்சி இங்கு நினைவு கூர்தற் பாலது; "சிவிகையின் மேற்சேவித்து வருநிலவு தருமதிபோல் வளரொளிவெண் குடைநிழற்ற"(2546) என்று முன் கூறிய கருத்தும், திருநீற்றுத் தொண்டர்குழாத்திற்கு நிலவின்கடலை உவமித்துத் "திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழாத்திற்கு நிலவின்கடலை உவமித்துத் "திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்கு மிருமருங்குஞ் சேர்ந்த போதி, லிரண்டு நில வின்கடல்க ளொன்றாகி யணைந்தனபோ லிசைந்த வன்றே"(1498) என்றதும் ஆண்டுரைத்தவையும் இங்குக் கருதற் பாலன. படர் திருநீற்றின் சோதி - படர் திருநீறு என்றும், படர் சோதி என்றும் ஈரிடத்தும் கூட்டுக. வெண்குடை நிழற்ற - அரச அடையாளமாகிய பத்து அங்கங்களுட் சிறப்புடைய ஒன்றாதலின் ஈண்டுக் குடையினை இவ்வாறு சிறந்த உவமானத்தாற் சிறப்பித்துக் கூறினார். வெவ்வேறு - ஓத - என்க; தாளம், தாரை, சங்கு இவற்றின் ஓசைகள் வெவ்வேறாதல் காண்க. முத்தின் என்பதனைத் தாரை என்பதனுடனும் கூட்டுக. ஓதுதல் - புகழ்களை எடுத்து ஒலித்தல். வில்வளர் தாளக்கோவை - வில் - ஒளி; முத்துக்கள் கோத் தணிபெற அமைத்த. நாதமோங்க - எங்குமொத்த - எங்குமூத - என்பனவும் பாடங்கள். |
|
|