பாடல் எண் :2649
குலச்சிறை யார்முன்பெய்தக், கொற்றவன் றேவி யாரும்
தலத்திடை யிழிந்து சென்றார்; தண்டமிழ் நாட்டு மன்னன்
நிலத்திடை வானி னின்று நீளிரு ணீங்க வந்த
கலைச்செழுந் திங்கள் போலுங் கவுணியர் தம்மைக் கண்டான்.
751
(இ-ள்) குலச்சிறையார்.....எய்த - அரசனிடம் அறிவித்தபின் குலச்சிறையார் பிள்ளையாரது திருமுன்பு வந்து சேர; கொற்றவன்...சென்றார் - அரசமா தேவியாரும் அரண்மனையினுள்ளே வந்து தமது சிவிகை யினின்றும் இறங்கிச் சென்றனர்; தண்தமிழ்நாட்டு.......கண்டான் - தண்மையுடைய தமிழ் நாட்டின் மன்னனாகிய பாண்டியன் வானத்தினின்றும் நீண்ட இருள் நீங்கும்படி நிலத்தினில் வந்த நிறைந்த கலைகளையுடைய செழித்த திங்களைப் போலும் கவுணியர் பெருமானாகிய பிள்ளையாரைக் கண்டான்.
(வி-ரை) முன்பு எய்த - திருவாலவாயினின்றும் பிள்ளையார் போத, முன்பு பெருந்தொண்டர் குழாத்துச் சென்ற (2643) அமைச்சனார், அரண்மனையை அணுகியபோது அத்திருக்குழாத்தின் முன்பு நீங்கி, முன்னர் விரைவிற் சென்று சென்று அரண்மனையினுள் புக்கு அரசனுக்கு அறிவித்து, அவன் ஏவல்வழிப் பீடம் அமைத்து எதிர் சென்று அழைக்கும்படி மீண்டு, பிள்ளையார் முன்பு வந்து எய்தினர் என்க.
கொற்றவன் தேவியாரும் கலத்திடை இழிந்து - அரசனுக்கு முன் அறிவிப்பின் பொருட்டும், ஆசனம் அமைத்ததற்பின் அவன் ஏவல் வதழி அவனுக்காக எதிர் சென்ற ஐத்தற் பொருட்டுமாக அமைச்சனார் திருக்குழாத்தினீங்கி முன் சென்றனர்; அரசியார்க்கு அத்தகைய அரசகாரிய மொன்று மின்மையின் பிள்ளையாரைப் பின்பற்றித் தொடர்ந்து மதது சிவிகையில் வந்தனர்; இழிந்து - தமது சிவிகையினின்றும் கீழே இறங்கி.(2643)
தண் தமிழ் நாட்டு மன்னன் - வெப்பு நோய் நீக்கிக் குளிரச் செய்ய வுள்ள தன்மைக் குறிப்புப்பற்றித் தண் தமிழ் - என்று தண்மையோடு புணர்த்தி ஓதினார்; "தமிழ்மாருதம்" (313) என்ற குறிப்பு மிது; தண்மையைப் பொதியமலைச்சார்பு பற்றி நாட்டொடு புணர்த்தித் தமிழ்த் தண் நாட்டு என்று கூட்டி உரைப்பினும்மையும். முன்னர்த் "தெற்மிழ் நாடு செய்த செய்தவம்" (2648) என்ற குறிப்பு மிது; பிள்ளையாரது ஞானத்தமிழே இந்நலம் செய்வதாம் என்பார் இனம்பற்றி அறிவித்த குறிப்புமாம்; "தமிழ் நாதன் ஞான சம்பந்தன்"(ஆலவாய் - கொல்லி -11) என்ற பதிகமும் காண்க.
நீள் இருள் நீங்க வானினின்று நிலத்திடை வந்த - என்க; நீள் இருள்; திணிந்த பிணிப்பாகிய அமண அக விருள்; வான் - இங்கு அறிவொளி வானம்(சிதாகாசம்) குறித்தது; வானினின்றபடியே இவ்விருணீக்குதல் சாலாமையின் நிலத்திடை வருதல் வேண்டப்பட்டதென்பது குறிப்பு.
கலைச் செழும் திங்கள் போலுட்ம - கலை - வளர்வும் குறைவும் படாத கலை; செழுமையாவது நிரம்பியிருத்தல். "வளர்மதிக் கொழுந்தை"(2625)
திங்கள் போலும் - ஞான அமுதகலையோடும் குளிர்ச்சி செய்தலால் திங்களை உவமித்தார்; பய வுவமம். வெண்ணீற்றுப் பூச்சின் விளக்கத்தால் நிறம் பற்றி எழுந்த "இரண்டு நிலவின் கடல்கள்(1498)" என்றபடி உரு வுவமமுமாம்" கலை வளர் மதியே" (1990) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. பிள்ளையாரது ஆண்டெல்லை பதினாறான வரும் குறிப்பும் கொண்டது.
கண்டான் - முன்னை நாளிற் "கண்டுமுட் டடிகண் மார்கள் கேட்டு முட்டி யானும்"(2590) என்ற அரசன முற்செய் தவப்பயன் வந்நெய்தும் செவ்வியுற்றதனால் இங்கு அந்நிலை மாறி விருப்பொடும் கண்டான்; அகப் பொருட்டுறைகளுள் காட்சி என முதற்கண் நிகழும் இயல்பெல்லாம் ஈண்டு வைத்துக் கண்டுகொள்க; "நற்பெரும்பான்மைகூட்ட....விளங்கிழையவரைக் கண்டார்"(285), "பண்டைவிதி கடைகூட்டப் பரவையாருங் கண்டார்"(258); "விதியாற் கண்ணுற்றார்" (ஏயர்கோன் - புரா.226) முதலியவையும், முன் "காட்சிபெற்றார்"(2642) என்றவிடத் துரைத்தவையும் இங்கு வைத்துக் காண்க; "திங்கள் போம் கவுணியர்" என உடம்பொடுபுணர்த்தி ஓதின குறிப்பினால் வெப்பமிக்கார்பாலே திங்களின் வரவு பயன் செய்யுமாறு, பயன் கூர்தர விருப்புடன் கண்டான் என்பது பெறப்பட்டது.
நீளிருணீங்க நிலத்திடை வந்த திங்கள் - "இருளிரண்டின் மாக்கள், சிந்தையுட் சார்ந்து நின்ற பொங்கிய விருளை - செங்கதிரவன் போல்நீக்கும்"(10) என்ற கருத்துக்கள் இங்குவைத்துக் கருதத்தக்கன; முன்னர்ச் செங்கதிரவன் என்ற ஆசிரியர் இங்கு வெப்பு நீக்கமும் அமுத ஞானவொளியும் வேண்டப்படும் குறிப்புணர்த்தக் கலைச் செழுந் திங்கள் என்ற தகுதியும் கவிநயமும் காண்க.
கண்டான் - இக்காட்சியின் சிறப்பும் பயனும் நோக்கி இதனை விதந்தெடுத்துத் தனியாக ஓதியருளினார்; இதனால் விளைந்த மன நிகழ்ச்சியைப் புறச்செயலால் மேல்வரும் பாட்டிற் கூறுவதும் காண்க.