[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1023

  முத்த சித்துருவராகிய சிவபெருமானையே எவ்வகை மொழிகளாலும் செல்லப் படாது என்று; அந்தண்...அருளினார் - அழகிய குளிர்ந்த பூந்தராய்த் தலைவராகிய பிள்ளையார் அருளிச்செய்தனர்.
 

832

  2727 முதல் 2730 வரை இந்நான்கு திருப்பாட்டுக்களானும் "வெந்த சாம்பல்" என்ற மூன்றாவது திருப்பாட்டின் உரையினை விரித்தருளினார்.
  2727. (வி-ரை) "வெந்த சாம்பல் விரை எனப் பூசியே" என்பது பதிகப் பகுதி. இதனாற் சிவபெருமான், மாசங்காரத்தினிறுதியில் நீறாய்க் கிடந்த உலகத்தைத் தமது திருமேனியிற் றாங்கிநின்ற தன்மை பேசப்பட்டது. வெந்த சாம்பல் - வெந்ததனால் பெற்ற நீறு, ஆறு சென்ற வியர் என்புழிப்போல; வெந்த என்பது காரணப் பொருளில் வந்தது.
  விரை - கலவைச் சாந்து; "சுண்ணவெண் சந்தனக் சாந்து" (தேவா) "சாந்தமுந் திருநீறு" (திருவிசை). சிவதருமம் பல; அவற்றுள்ளே சிறந்தது பூசனையாம்; அப்பூசனையினுட் செய்யப்படும் உபசாரங்களுட சிறந்தன ஐந்து அங்கங்கள். அவையாவன: அபிடேகம், விரை, விளக்கு, அருச்சனை, நிவேதனம் என்பன; அவற்றுள் விரையாவது இலேபனமும் சுகந்தமுமென்று இருவகைப்படும்; அவற்றுள் இலேபனமாவது பனிநீரும் பச்சைக்கர்ப்புரமுங் குங்குமப்பூவுங் கோரோசனையும் புழுகுங் கத்தூரியுங் கலந்த மலாக்காச் சந்தனத்தைத் திருமேனி முழுவதுஞ் செறிவாகச் சாத்துதலாம்; சுகந்தமாவது முல்லை, இருவாட்சி, பிச்சி(சாதி), மல்லிகை, பனிநீர், மருக்கொழுந்து, வெட்டிவேர் என்னும் ஏழினையுந் தொடுத்துத் திருவுருத் தெரியாவண்ணம் அலங்கரித்தலாம் எனவரும் ஆகமவிதிகள் ஈண்டுக் கருதத்தக்கன.
 
"சிவதருமம் பல; வவற்றுட் சிறந்ததுபூ சனை;யதனுள்
அவமில்பல வுபசாரத் தைந்துசிறந் தனவவற்றைத்
தவமலியப் பதினாறு மண்டலந்தண் டாதியற்றிற்
கவலையறப் பயனிம்மைப் பிறப்பிடையே கைகூடும்"
 

(28)

 
"ஆங்கவைதா மபிடேக மரியவிரை விளக்குமனுத்
தாங்குமருச் சனைநிவே தனமாகும்....."
 

(29)

 
"....விரையிரண்டாந் தளராத விலேபனமுந்
தயங்குசுகந் தமுமென்ன"
 

(33)

 
"காசில்பனி நீர்பச்சை கருப்பூரங் குங்குமப்பூ
மாசறுரோ சனைபுழுகு மான்மதநா வியுங்கலந்த
வாசிகந்த மலாக்காச்சந் தனமிலே பனமதனைத்
தேசவிருந் திருமேனி முழு துஞ்செறி தரக்கொட்டல்"
 

(34)

  எனவரும் பேரூர்ப்புராணம்(மருதவரைப் படலம்) காண்க.
  விரை எனப் பூசியே - பூசியே என்பது உபசாரம். மாசங்காரத்துள் இறைவரை ஒழித்தொழிந்த எல்லாமும் நீறாக; அந்நீறு தங்குதற்கு வேறு இடமின்மையின் ஆண்டு அழியாது நிற்கும் இறைவர் திருமேனிமேற் கிடத்தலே பூசுதலென் றுபசரித்துக் கூறப்படும்.
  தமது அந்தம் இல் ஒளி - தமக்கு அழிவில்லாமையால் தமது சிவவொளி அந்தமில் ஒளி எனப்பட்டது. தாம் எல்லாவற்றுக்கும் அந்தத்தைச் செய்யத் தமக்கு அந்தஞ் செய்ய வேறொருவருமில்லாதவர். "அந்தமாதி"(போதம் - 1).