1046திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 

யாம்; என்றனர் வேதவாயர் - என்று அருளினார் வேதங்களை வெளிப்படுக்கும் திருவாக்கினை யுடைய பிள்ளையார்.

  (வி-ரை) பாவுற்ற.....உண்மை - இத்திருப்பாட்டினால் "பாராழி வட்டம்" என்று தொடங்கும் திருப்பாசுரம் ஒன்பதாம் திருப்பாட்டின் கருத்தினை எடுத்து உரைத்தபடி. பாவுற்ற - பா - திருப்பாசுரம். தன் சிறப்புப்பற்றி இவ்வாறு கூறினார். "பாவெனப் படுவதுன் பாட்டு" என்றது காண்க; பா உற்ற பாட்டின் நல்லிலக்கணம் முற்றும் பொருந்திய என்றலுமாம். பரம்பிய - எங்கும் பரந்த சிறப்புடைய என்ற குறிப்புமாம்.
  காவற் றொழிலான்......பெற்றது - தொழிலான் எனும் - படைப்புக் காப்பு அழிப்பு என்ற முத்தொழில்களுள் காத்தல் என்ற தொழிலைச் செய்பவன் என்று சொல்லப்படும். உலகம் அவ்வாறு முகமனால் கூறினும் உண்மையில் அவன் செய்கிறதில்லை என்பார் எனும் என்றார்.
  கண்ணனும் காவல் பெற்றது - உண்ணின்றியக்குதலால் அவன் ஆணைவழியே நின்றும் அவன் தந்த சக்கரத்தின் துணைகொண்டும் செய்கின்றான் என்ற தன்மையால் அவ்வாறுபசரிக்கப்படும் தன்மையும் வாய்த்தது என்பது கண்ணனும் என்ற இழிவு சிறப்பும்மையின் குறிப்பு.
  காவல் பெற்றது - காக்கும் தொழிலின் தன்மை அடையப்பெற்றது.
  யாவர்க்கு மேலாய ஈசன் - முதல்வன் "யாவர்க்கு மேலா மளவிலாச் சீருடையான்"(திருவாசகம்); சீருற்றது அவன் அருளப்பெற்ற சீர் உற்றதன் துணை என்க. "மூவிலை யொருதாட் சூல மேந்துதல், மூவரும் யானென மொழிந்த வாறே" (திருவொற் - ஒருபா - 6); "மூவர்நின் சந்நிதி முத்தொழில் செய்ய வாளா மேவண்ணல்" (திருவிளை. புரா) முதலியவையும் காண்க.
  ஈசன் - ஈசத்துவமாகிய முதன்மைக்குண முடையவன்; ஏனையோர் எல்லாரையும் தன் ஆணை வழி நிற்கச் செய்பவன்.
  அருள் ஆழி - அருளும் ஆழியும். அருளாவது அவனது காத்தற்றொழில் இனிது செல்லும்படி சங்கற்பித்தல்; "அருள் செய்தல் பேணி" என்பது பதிகம். ஆழி - சக்கரம். பாராழி வட்டம் - என்றவிடத்து, வட்டஆழி சூழம் பார் என ஆழி - ஆணைச் சக்கரம் என்ற குறிப்பும் தந்து நிற்பது காண்க.
  பெற்றது - பெற்ற வரலாறு; பெயர்.
  சீருற்றது - சீருற்றதனால் காவல் பெற்றதாம் எனக் காரணப் பொருள்பட நின்றது.
  கண்ணன் - கிருட்டிணன் என்ற ஓரவதாரத்தின் வந்த பெயர் விட்டுணு என்ற பொதுப்பொருளில் வந்தது. "நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்டவர்" (தனது உரைவிடமாகிய நீரினையுடைய கடலினை விட்டு ஏறிவந்து தன் நெஞ்சினை இறைவனுக்கு இடமாக வைத்துக் கொண்டு தியானித்த திருமால்) என்றது பதிகம். "நாகப்பள்ளி கொள்வா னுள்ளத்தான்" (அப்பர் - ஆரூர்); (திருமாலினால்) தியானிக்கப்படுபவன்; "தியேயன்". தியாதா - தியானிக்கின்றவன்; (மால்); "நாராயண: பரோத் தியாதா" என்பது வேதம்.
  கண்ணன் (திருமால்) ஆழிபெற்ற வரலாறு மாபுராணங்களாற் பேசப்படும். திருப்பாசுரத்தில் விரிவாக அருளப்பட்டதனால் ஆசிரியர் அதனைச் சுட்டிக் கூறியமட்டில் அமைந்தனர்.