[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1057

 

(இ-ள்) பிள்ளையார்தாம் ஏடகம் வன்னி என்று எடுத்துப் பாட - பிள்ளையார் திருவேடகத் திருப்பதிகத்தை "வன்னியு மத்தமும்" என்ற தொடங்கிப் பாடியருளவும்; கூடிய...கூடி - ஆற்று நீரினுட் கூடி வந்த ஏட்டினிடம் குலச்சிறையாரும் சென்று பொருந்தி; காடிடமாக...புக்கு - பெரு மயானமே இடமாக ஆடுகின்ற கண்ணுதற் பெருமானது திருக்கோயிலின் பக்கத்தில் நிலைபெற்ற வைகையாற்றின் நடுவிலே புக்கு; நின்ற ஏடு எடுத்துக் கொண்டார் - மேற் ஏறாமல் நின்ற ஏட்டினை எடுத்துக் கொண்டனர்.

  (வி-ரை) வன்னி என்று எடுத்து ஏடகம் பாட - என்க; ஏடகம் - திருஏடகத் திருப்பதிகத்துக்கு ஆகுபெயர். பதிகத்தை என சாரியையும் உருபும் தொக்கன.
  வன்னி - பதிக முதற்குறிப்பு. எடுத்தல் - தொடங்குதல்.
  நீரில் கூடிய - என்க; நீரில் கூடிய ஏடு குலச்சிறையாரும் கூடி - நீரி னடுவழியாக எதிரேறி வந்த ஏட்டினைக் குலச்சிறையார் கரைவழியை குதிரைமீது வந்து பொருந்தி. ஏடு - ஏட்டின் இடமாக; இங்குக் கூடி என்பது, குலச்சிறையார் கரைவழியாலும் ஏடு நீர்வழியாலும் ஒத்த இடத்தைப் பொருந்துதல் குறித்தது. பின்னர் நீர் நடுவுட் புக்கு என்றது கரையினின்று நீரினுட் புகுதலைக் குறித்தலின் கூறியது கூறலன்மை யுணர்க.
  நின்ற - "கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர் விரவும்" என்று முன் ஆணையிட்டருளிய பிள்ளையார், இப்போது ஏடு தங்க ஆணைதந்து "ஏடுசென்று அணைதரும்" என்று அருளியமையால் மேல் எதிர்ந்து செல்லாமலும் நீரோடு உடன் ஓடாமலும் அணைந்துநின்ற என்க.
  எடுத்துக் கொண்டார் - கையினால் எடுத்து மேற்கொண்டனர். அதனைத் தலையின்மிசை வைத்தலை மேற்கூறுவது காண்க.
 

850

  திருஏடகம்
  திருச்சிற்றம்பலம் பண்-கொல்லி
 
வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட வடியவர்
இன்னிசை பாடல ரேடகத் தொருவனே
 

(1)

 
கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
 

(11)

 

திருச்சிற்றம்பலம்.

  பதிகக் குறிப்பு:- வைகை நீரினை ஆணையால் எதிர்ந்து சென்ற ஏடு சென்று அணைந்து தங்கும் ஏடகம் என்பது. "பாடினா ரேடு தங்க"(2747) என ஆசிரியர் அறிவித்தமையும் "ஏடுசென் றணைதரும் ஏடகம்" என்ற பதிகத் திருக்கடைக் காப்பும் காண்க.
  குறிப்பு:- இப்பதிகம் மதுரையில் வைகையாற்றின் கரையில் எழுந்தருளியிருந்த படியே பிள்ளையார் அருளி ஆணையிட்டது.
  பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) வன்னி - மரம். வன்னியின் இலை; மதி - எண்ணும்மை தொக்கது; வன்னியும் மத்தமும் முதலியவை மிகுதியும் மேற்பெய்தமை