1074திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 
குறைவில தெனினுங், கூற்றை யுதைத்தவர் நாமங் கூறி
நிறைகடற் பிறவித் துன்ப நீங்கிடப் பெற்ற தன்றே.
 

860

  (இ-ள்) மறையவர்....ஓங்க - வேதியர்கள் சிவ வேள்விகளைச் செய்யவும், (அது காரணமாகத்) தேவர்கள் மழையைப் பெய்விக்கவும், (அதுகாரணமாக) அரசன் நல்ல அறநெறியில் ஓங்கியிடவும், ஆக இவ்வாற்றான்; அவனி - உலகம்; இகத்தினில் - இவ்வுலக வாழ்வாகிய இம்மைநிலையிலே; இன்பம் குறைவிலது - துய்க்கும் இன்பங்களில் எவ்வாற்றானும் குறைவிலாமலிருந்தது: எனினும் - அவ்வாறாயினும் (அது பிறவித் துன்பத்துக் கேதுவாதலின்றி); கூற்றை.....அன்றே - இயமனை உதைத்தவராகிய சிவபெருமானுடைய திருநாமத்தைக் கூறுதலால் நிறைந்த கடல்அலை போன்று மேலுமேலும் தொடர்ந்துவரும் பிறவியாகிய துன்பத்தினின்றும் நீங்கியிடவும் அன்றே பெற்றது (அவனி).
  (வி-ரை) ஞானசம்பந்தரது வாய்மையினால் திருநெறி நடந்த வரலாறு இவ்வாறென்று முன்பாட்டிற் கூறிய பொருளை அனுவதித்துக் கூறியது இப்பாட்டு.
  மறையவர் வேள்வி செய்ய - "வாழ்க வந்தணர்" என்றருளிய "வாய்மை" யின் பயனாக உலவ மின்புறச் சந்தவேள்விகள் - சிவவேள்விகளைச் - செய்ய; வேள்வி - சிவவேள்வி; "சங்கரர்க்கு"(2719).
  வானவர் மாரி நல்க - "வாழ்க....வானவர்", "வீழ்க தண்புனல்" என்றருளிய "வாய்மை"களின் பயனாக உலகமின்புறச் செய்யும் வேள்விகளினாலே "வேள்வி நற்பயன் வீழ்புனலாவது"(2720) என்றபடி வேள்விகளில் விளிக்கப்படும் இந்திரன் வருணன் முதலிய தேவர்கள் அவ்வம் மந்திரங்களால் வரும் சிவனது ஆணைப்படிநின்று முறைமையால் மழையைப் பருவந் தப்பாது பெய்விக்க; நல்குதல் சிவனாணையால் என்பது துணிபு : ஆணைவழி நல்குதலை வானவர் நல்க என்றதுபசாரம்.
  இறைவன் நன்னெறியின் ஓங்க - இறைவன் - இங்கு அரசன் என்ற பொருள் தந்து நின்றது. இது "வேந்தனு மோங்குக" என்றருளிய "வாய்மை"யின் பயனாக வந்தது. நன்னெறி - இறைவர் அருளிய வேத சிவாகமங்களின் விதித்த ஒழுக்கநெறி. நெறியின் ஓங்குதலாவது நெறியில் தானும் நின்று தம்கீழ் உலகத்தையும் அந்நெறியில் நிற்பித்தலால் உலகத்தை வளரச்செய்தல். ஓங்க என்பது "ஓங்குக" என்ற பதிகத்தின்படியே என்ற குறிப்புத்தர அச்சொல்லினாலே கூறினார். "வேள்வி" என்றது போல.
  அவனி, இகத்தினில் இன்பங் குறைவிலது என்று கூட்டுக. உலகத்தின் இம்மையின்பம், மழையும் வினையுளுமாகிய இவற்றான் வருதலானும், இவற்றை அரசனது செங்கோல் நிலைபெறுத்துதலானும் இகத்தினில் இன்பம் குறைவிலதாயிற்று. "இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட, பெயலும் விளையுளும் தொக்கு"(குறள்). ஈண்டு இன்பம் என்றது ஐம்புல வின்பங்களாகிய உலக வின்பங்களை.
  இன்பங் குறைவில தெனினும் - பிறவித் துன்ப நீங்கிடப் பெற்றது - உலக இன்பங்கள் துய்ப்போர்க்குப் பற்றறாமையால் பிறவியறுதலில்லை என்பத நூல்களின் துணிபு. "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்", "பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை", "அடல்வேண்டு மைந்தன் புலத்தை; விடல் வேண்டும், வேண்டிய வெல்லா மொருங்கு" (குறள்) என நீதிநூல் பேசும்; "மோக மறுத்திடினாம் முத்தி கொடுப்பதென, வாகமங்கள் சொன்ன வவர்" (களிறு -- 72); "ஆசை நீத்தவர்க்கே வீடு தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன்"(திருவிளை. புரா-பாயி) எனப் பெருநூல்கள்