1098திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

ழு
  2777. (இ-ள்) சிவபாதவிருதயர்...சென்றணைய - சிவபாத விருதயர் தாம் அவர் முன்னே தொழுது சென்றருள; தவமான... எதிர்தொழுவார் - தவநெறியினில் அணையும் தாதையார் எதிரில் தாமும் தொழுவாராகிய பிள்ளையார்; அவர் சார்வு...நினைவுற்றார் - அவரைக் கண்டருளிய சார்பினாலே திருத்தோணியின்கண்ணே அமர்ந்தருளியிருந்து பவபாசங்களை அறுத்தவராகிய தோணியப்பருடைய திருப்பாதங்களை நினைவுற்றனர்.
 

879

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
  2776. (வி-ரை) அது கேட்டு - கேட்டதனால் திருமடத்தினை அறிந்து.
  "அப்பர் எழுந்தருளினார்" எனக் கண்டோர் - பிள்ளையாரது தாதையார் எழுந்தருளினார் என்று அங்கு அவரைக் கண்ட பரிசனங்கள். இது பரிசனங்கள் மனங்கொண்டது.
  அடி வணங்கி - அவரைத் தொழுதுபோய் உட்சென்று; எழுந்தருளக் கண்டோர் பிள்ளையார்க்கு அந்த ஓகையினை அடிவணங்கி உரை செய்ய என்று கூட்டி உரைப்பினுமமையும். ஓகை - உவகை; மகிழ்ச்சிக்கிடமான செய்தி.
  "எப்பொழுது வந்தருளிற்று?" என்று - பிள்ளையார் இவ்வாறு கூறிக்கொண்டு; எதிரே எழுந்தருள - எதிர்கொண்டு வந்தருளவே; "எப்பொழுது வந்தது?" என்பது வரவேற்கும் மரபு. "என்றுவந்தா? யென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே" (தேவா). ஒப்பில் புகழ் - பிள்ளையாரது புகழ் ஒப்பற்ற சிறப்பினையுடையது.
  எனக் கேட்டோர் - என்பதும் பாடம்.
 

878

  2777. (வி-ரை) முன் தொழுது - முன் - பிள்ளையார் திருமுன்பு; முதற் கண் - வேறு செய்தற்கு முன் என்றலுமாம்.
  தொழுது முன் சென்று என்று கூட்டினுமமையும்.
  சென்று அணைய - திருமடத்தினுள் பிள்ளையாரை அணுகச் சென்று சார.
  தவமான நெறி...எதிர் தொழுவார் - தவமான நெறி - வைதிக சைவ நெறி. முன்(2773 - 2774) பாட்டுக்களில் உரைத்தவை பார்க்க; தவநெறியின்கண்ணே எப்பொழுதும் வாழ்பவர்; எதிர் தொழுதல் - அவர் தொழத் தாமும் தொழுதல்; தொழுவார் - தொழுவாராகி; முற்றெச்சம். தொழுவார் - கைகுவித்தருளி - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. "அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியா ரவர்களோ நம்பி யாரூரர் தாமோ, முன்பி றைஞ்சின ரியாவரென் றறியா முறைமையா லெதிர் வணங்கி மகிழ்ந்து " (244) என்ற நிலை இங்குக் கருதற்பாலது. அங்கு இருபாலும் அடியார்கள் என்ற கருத்தால் ஒருசேர வணக்கம் உடனாக நிகழ்ந்தது. "பரமனுக்காளா மன்பர் தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்" (72) என்ற நிலை; இனித், "திருமுலையமுத முண்டபோதே, யேழிசைவண் டமிழ்மாலை யிவ னெம்மா னெனக்காட்டி யியம்ப வல்ல, காழிவரும் பெருந்தகை"(1443)யைக் கண்டு வணங்க வருகின்ற அரசுகளும், "வரை வில்லியார் வெஞ்சூலை மடுத்தருளி நேரே முன்னா, ளாண்டவர செழுந்தருளக் கேட்டருளி"(1446) அவரைக் காண்டமைய பெருவிருப்புடன் எதிர்கொண்டு வந்த பிள்ளையாரும் சீகாழியில் திருமடத்தில் சந்தித்த இடத்துக் "கண்ட கவுணியக் கன்றுங் கருத்திற் பரவுமெய்க் காதற், றொண்டர் திருவேட நேரே தோன்றிய தென்று தொழுதே...எதிர்வந் திறைஞ்ச"(2169) என்ற நிலையும் இங்குக் கருதத்தக்கது; ஆண்டு இறைவர் ஆட்கொண்டருளிய பெருமை நினைந்ததும், திருவேடத்தின் பெருமைபற்றி நினைந்ததும், ஆகிய கருத்துக்களினால்