| செயல்களுக்காயிற்று. புரிதல் - இடைவிடாது நினைத்தலும் சொல்லுதலும் செய்தலுமாம். |
| அடியவர்கள் தம்மோடும் - அடியவர் - அயரா அன்புசெய்யும் மெய்ஞ்ஞானிகள் -"அன்பரொடு மரீஇ" (12 சூத் - சிவஞானபோதம்). |
| கையுறு பொருப்புச் சிலையார் என மாற்றுக. பொருப்பு - ஈண்டு மேருமலை; சிலை - வில்; "சிலையது வெஞ்சிலையாக"(தேவா). |
| பிறபதியும் - என்பதும் பாடம். |
| 882 |
| 2781. (வி-ரை) ஆலின்...அங்கணனை-ஆல்-கல்லாலமரம்; நால்வர் - முனிவர் நால்வர்; அவராவார் சனகர் -சனந்தனர்-சனாதனர்- சனற்குமாரர். |
| அறம் - அறமுதலிய நான்கினையுமுணர்த்தி நின்றது; "அழிந்த சிந்தை யந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு, மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே" (பிள். தேவா - பழந்தக்க - 7); இவை வேதங்களில் மக்களுக்கு உறுதிப் பொருள்கள் என எடுத்தோதப்பட்டன. |
| நூலின்கட் பொருள் பாடி - பொருள் - பொருள்நூல்; "செழும்பொருணூல் தருவானை"(1671); நூலின்கண் - தமிழ் நூல்களில் சிறந்து பேசப்படும்; எழுத்துச் சொல் பொருள் யாப்பு என்ற நான்கனுள் சிறந்தது பொருள்; அஃது அகம்புறமென இருவகைப்படும்; அவற்றுட் சிறந்தது அகப்பொருள்; அதுதானும் ஞானயோக நுண்பொருள் - உலகவழக்குப் பொருள் என இரண்டு பொருளும் நுதலும் இயல்புடைத்து; அவற்றுட் சிறந்தது ஞானயோக நுண்பொருள்; என இவ்வெல்லாவகைப் பட்ட பொருணூல்களினும் சிறந்த ஞானயோகப் பொருணூல் பாடியளித்தனர் என்ற தாம்; "மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச், செம்மைப் பொருளுந் தருவார்" (974) என்று இதன் இயல்பை முன்னர் விரித்தருளியமை காண்க. இதுபற்றி வரும் இறையனாரகப் பொருளுரையும்(1), திருக்கோவையா(1)ருரையும் பார்க்க. பொருள் பாடி - "இறையனாரகப்பொருள்" என்னும் பொருளிலக்கணத்தைப் பாடி. |
| நூலறிவார் - சங்கப் புலவர்களும் பாண்டியனும். அவர்க்கு இறைவர் பாடியீந்த வரலாறு இறையனாரகப்பொருள் முதற்சூத்திர உரையுட் காண்க. "நூலறிபுலவ" (முருகு) |
| காலம் பெற்று - இறைஞ்சி வழிபட்டு விடை கொள்ளுதற்குரிய பூசைக்காலங் கிடைக்கப்பெற்று. |
| நூல்....பாடி - "படிக்கு நூல்கள் சிவாகமம்" (சித்தி) என்றபடி ஈண்டுச் சரியை யாதி உண்மைப்பொருள் காட்டும் சிவாகமங்களைப் பாடியருளி என்றும், இவற்றை மறையாதி உணர்ந்தார்க்கு ஈந்தருளினர் என்று கொள்வதுமாம். |
| புறம் - மதுரைத் திருநகரின் புறம்; மேல்வரும் பாட்டுப் பார்க்க. |
| சீலம் கொள் - சைவவொழுக்கத்தினை மீள மேற்கொண்ட (அரசன்). |
| 883 |
| வேறு |
2782 | தேனிலவு பொழின்மதுரைப் புறத்துப் போந்த தென்னவனார் தேவியா ரமைச்சர் சிந்தை யூனெகிழும் படியழிந்தங் கொழுகு கண்ணீர் பாய்ந்திழிய வுணர்வின்றி வீழக் கண்டே | |