1106திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

வந்தருளும் செல்வர் - "நீறணிந்த செல்வர்" எனப்பட்ட இறைவரது தன்மை இவரும் பெற்றவர் என ஈண்டும் செல்வர் என்றார்.
ஏறு அணிந்த - ஏற்றினைக் கொடியில் அழகுபட வைத்த.
வெல்கொடி - எஞ்ஞான்றும் வெற்றியேயன்றிப் பிறிதில்லாதது.
திருப்புத்தூரை...இருந்தார் - திருப்புத்தூர் அந்நாளினும் அரசாங்கத் தொடர்புடைய பெரும்பட்டினமாயிருந்தமை சரிதங்களா லறியப்படும்; பாண்டி நாட்டுப் பெருந் தலங்களுள் ஒன்று; தலவிசேடம் பார்க்க.
எய்தியிறைஞ்சிச் சிலநாள் - எய்தியிறைஞ்சிப்பாடி - என்பனவும் பாடங்கள்.
திருப்பரங்குன்றம்
திருச்சிற்றம்பலம் பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை
நீடலர் சோதி வெண்பிறை யோடு நிறைகொன்றை
சூடல னந்திச் சுடரெரி யேந்திச் சுடுகானில்
ஆடல னஞ்சொ லணியிழை யாளை யொருபாகம்
பாடலன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே.

(1)

மைத்தகு மேனி வாளரக் கன்றன் மகுடங்கள்
பத்தின திண்டோ ளிருபதுஞ் செற்றான் பரங்குன்றைச்
சித்தம தொன்றிச் செய்கழ லுன்னிச் சிவனென்று
நித்தலு மேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.

(8)

தடமலி பொய்கைச் சண்பைமன் ஞானசம்பந்தன்
படமலி நாக மரைக்கசைத் தான்றன் பரங்குன்றைத்
தொடைமலி பாடல் பத்தும்வல் லார்தந் துயர்போகி
விடமலி கண்ட னருள்பெறுந் தன்மை மிக்கோரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- சிவனதிடமாகிய பரங்குன்றத்தைச் சிவனென்று ஏத்துவோர் மேற் றொல்வினை நில்லா.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சூடலன் - சூடலை உடையவன்; ஆடலன் - ஆடல் செய்பவன்; பாகம் பாடலன் - பாகம் வைத்துப் பாடல் புரிபவன். பாடல் - மறை; வரும் பாட்டுப் பார்க்க; அதனுள் தேன்மொழி என்ற குறிப்புமிது;- (2) தேன்மொழி - தேன் போன்ற மொழியையுடையவள் - உமையம்மையார்;- (3) பாரிடம் - பூதகணம்;- (6) தொடை நவில்கின்ற - தொடுத்த அளவாலே செயல் விளைகின்ற; தொடை - தொடுத்த செயல்; நவிலுதல் - செய்தல் என்ற பொருளில் வந்தது;-(8) சித்தமதொன்றி....ஏத்த - சிவனை வழிபடும் நிலையினையும் மந்திரத்தினையும் உபதேசித்தருளியபடி; 1-2-3-4-9 பாட்டுக்களில் அம்மையோடிருக்கும் நிலையினைப் போற்றி, அத்தன்மை குறிக்கும் மகாமந்திரத்தையும் அருளியவாறு காண்க; தொல்வினை நில்லா - என்றதனால் பழவினையேயன்றிப் பின்னர்த் தேடிக்கொள்ளப்படும் வினையும் உடல் முகந்துகொண்ட வினையும் ஒழியும் என்பது பெறப்படும். 10-வது பாட்டும் இக்கருத்தினை வற்புறுத்தியவாறு; பரங்குன்றத்தினைச் சிவனே என்று வழிபடுக என்றதாம். அப்பெருங்குன்றம் மெய்யும் உருவும் சிவவடிவாய்த் திகழ்வதும் கருதுக. நம்மேல் நில்லா என்றதனால் "இன்றோரிடையூ ரெனக்குண்டோ" திருவா) என்றபடி பழவினையும் உடலூழாய்க் கழிவ