[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1117

விண்ணவரைச் செற்றுகந்தா னிலங்கை செற்ற
மிக்கபெருமி பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணியபொற் சிலைத்தடக்கை யிராமன் செய்த
திருவிரா மேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்.

887

(இ-ள்) புண்ணியனார்...போற்றி - புண்ணியராகிய சிவபெருமானது திருநெல்வேலியினை வணங்கித் துதித்து; புரிசடையார்...பாடி - முறுக்கிய சடையினையுடைய இறைவரது திருப்பதிகள் பலவற்றையும் சென்று பொருந்தி, விரும்பி எழுந்தருளி அங்கங்கும் விரும்பிப் பாடி; நற்றொண்டருடன்....செல்வார் - நல்ல திருத்தொண்டர்களுடனே நாளும் துதித்துச் செல்வாராகிய பிள்ளையார்; விண்ணவரை...சேர்ந்தார் - தேவர்களை அழித்து மகிழ்ந்தானாகிய இராவணனது இலங்கையினை அழித்த மிகுதியாகிய பெரும் பாதகத்தினைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு வலிய அழகிய வில்லை ஏந்திய பெரிய கையினையுடைய இராமன் தாபித்த திருவிராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தருளினார்.
(வி-ரை) புண்ணியனார் - புண்ணியங்களுக்கெல்லாம் இலக்காயுள்ளவர்; சிவபெருமான்; "புண்ணியா வுன்னடிக்கே"(தேவா); அவனடியார்களும் சிவபுண்ணிய மேலீட்டினால் சிவத்தன்மை பெறுதலால் புண்ணியர் எனப்பெறுவர். "புண்ணியப் பொருளாயுள்ள பொருவில்சீ ருருவி னாரை"(666) என்று கண்ணப்பரையும்; "புண்ணியக்கன் றனையவர்தாம்"(1959) என்று ஆளுடைய பிள்ளையாரையும் கூறியதனையும், "புண்ணியர் போற்றிசைப்ப" (திருவிசைப்) என்றமையும், பிறவும் பார்க்க.
இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகம் - "பெரும்பாதகம்" - 1673-ல் உரைத்தவை பார்க்க. இராவணனை வதைத்த ஒன்றான் வந்ததன்றி, இலங்கை முழுதுமழித்தமையால் மிக்க பெரும்பாதக மாயிற்று என்பது.
நீக்கவேண்டி -இராமன் செய்த திருவிராமேச்சுரம் - நீக்க - நீக்கிக்கொள்ள; இறைவர் நீக்குதற்காக வேண்டி என்றலுமாம்.
வேண்டி - வேண்டிக்கொண்டு; இராமனால் தாபிக்கப் பெற்ற கோயிலாதலின் இராமேச்சுரம் எனப்படும் என்பார். இராமன் செய்த இராமேச்சுரம் என்று சொற்பொருள் விரித்தோதினார். ஈண்டும், முன்னரும்(1673) இத்தன்மையாற் கூறியது பிள்ளையாரது இரண்டு பதிகங்களினும், அரசுகளது திருநேரிசையினும் இச்செய்தி பற்றியே அறிவுறுத்தப்பட்டமையை வற்புறுத்தி எடுத்துக்காட்டும் பொருட்டு.
திண்ணிய பொற்சிலை - சிவனது வில்லாதலின் திண்ணிய என்றார். பொன் - அழகு; பொற் சிலை - சிவனேந்திய மேருப் போன்றதென்ற குறிப்புடனும் நின்றது.

887

திருநெல்வேலி
திருச்சிற்றம்பலம் பண் - சாதாரி - 3-ம் திருமுறை
மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூஞ்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே லியுறை செல்வர்தாமே.

(1)

பெருந்தண்மா மலர்மிசை யயனவ னனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே லியுறை செல்வர் தம்மைப்