1134திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

மதிநிலவு குலவேந்தன் - பாண்டியன். பாண்டியர்கள் சந்திரகுலத்தில் வந்தவர்கள் என்றும், சோழர்கள் சூரியகுலத்தில் வந்தவர்கள் என்றும் வரலாறு கூறப்படும்; சூரியனால் சந்திரன் ஒளிபெற்று விளங்கும். போற்றிச் செல்ல - சூரியகுலத்து வந்த மங்கையர்க்கரசியம்மையராலும், அவராணை பெற்ற மெய்ம்மை மந்திரியாராலுமேதான் உண்மை விளக்கமும் உய்தியும் பெற்றதென்பது கருதினான்போல இங்குப் "போற்றிச் செல்ல" என்றார். மதியுடைய அரசுக்கும் அமைச்சுக்கும் உள்ள ஒற்றுமை நலமுங் குறித்தபடி. மதிநிலவு என்ற குறிப்புமிது.
மணமேற்குடி - தலவிசேடம் (குலச்சிறை நாயனார் புராணம்) III - பக்.793 பார்க்க. இதன் வடக்கில் அணிமையில் உள்ள வெள்ளாறு அந்நாட் பாண்டிநாட்டெல்லை என்பர்.

892

2791
அந்நகரி லினிதமர்வா ரருகு சூழ்ந்த
   பதிகளினீ டங்கணர்தங் கோயி றாழ்ந்து
மன்னுதிருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து
   மன்னவனு மங்கையருக் கரசி யாருங்
கொன்னவில்வேற் குலச்சிறையார் தாமுங் கூடிக்
   குரைகழல்கள் பணிந்துகுறை கொண்டு போற்றச்
சென்னிவளர் மதியணிந்தார் பாதம் போற்றிச்
   சிரபுரத்துச் செல்வரினி திருந்த நாளில்;

893

2792
பொங்குபுனற் காவிரிநா டதனின் மீண்டு
   போதுதற்குத் திருவுள்ள மாகப் பெற்று
மங்கையருக் கரசியார் தாமுந் தென்னர்
   மன்னவனு மந்திரியார் தாமுங் கூட
அங்கவர்தந் திருப்பாதம் பிரியலாற்றா
   துடன்போக வொருப்படுமவ் வளவு நோக்கி
"இங்குநான் மொழிந்ததனுக் கிசைந்தீ ராகி
   லீசர்சிவ நெறி போற்றி யிருப்பீ" ரென்று,

894

2793
சாலமிகத் தளர்வாரைத் தளரா வண்ணந்
   தகுவனமற் றவர்க்கருளிச் செய்த பின்பு,
மேலவர்தம் பணிமறுக்க வவரு மஞ்சி
   மீள்வதனுக் கிசைந்துதிரு வடியில் வீழ்ந்து
ஞாலமுய்ய வந்தருளும் பிள்ளை யாரைப்
   பிரியாத நண்பினொடுந் தொழுது நின்றார்;
ஆலவிட முண்டவரை யடிகள் போற்றி
   யந்நாட்டை யகன்றுமீண் டணையச் செல்வார்;

895

2794
பொன்னிவளந் தருநாடு புகுந்து மிக்க
   பொருவில்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்
பன்னகப்பூ ணணிந்தவர்தங் கோயி றோறும்
   பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று,