[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1139

காட்சியருளிய மூர்த்தி; பராசரர் - காளவர் முதலிய முனிவர்கள் வழிபட்ட பதி. சுப்பிரமணியர் சந்நிதி சிறப்பு. சுவாமி - களர்முளை நாதர்; அம்மை - இளங்கொம்பன்னாள்; தீர்த்தம் - தூர்வாச தீர்த்தம்; மரம் - பாரிசாதம்; பதிகம் 1.
இது திருத்தருப்பூண்டி நிலையத்தினின்றும் மேற்கே மட்சாலைவழிக் களப்பாள் போகும் பாதையில் 4 நாழிகையளவில் முத்துப்பேட்டைப்பாதை சந்திப்பினின்றும் வடக்கே மட்சாலைவழி 1 1/2 நாழிகையளவில் அடையத்தக்கது.
திருப்பாதாளேச்சுரம்
திருச்சிற்றம்பலம் பண் - வியாழக்குறிஞ்சி - 1-ம் திருமுறை
மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்ன மனநடையா ளொருபாகத் தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினா னுறைகோயில் பாதாளே.

(1)

பன்பலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லா ரெழில்வானத் திருப்பாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு:- மின்னியல் செஞ்சடைமேல் மதிமத்தமொடு பொன்னியல் கொன்றையினான், வெள்ளைத் தோடமர் காதினல்ல குழையான் என்பன முதலாகப் பலவாற்றானும் அறியப்படும் இறைவன் உறைகோயில் பாதாளே.
பதிகப்பாட்டுக் குறிப்பு; -(1) மின்னியல் - மின் போன்ற; இயல் - உவம உருபு; "மின்வண்ண மெவ்வண்ணம் வீழ்சடை"(பொன்வ. அந் - 1); பாடல் - மறை; 2-4-7-8-9-10 பார்க்க; -(2) நீடலர் - மாலை போல நீண்டு அலர்கின்ற; நிரம்பா மதி - பிறை; சுடுநீறு - சுட்டதால் - சங்காரத்தில் அழித்தலால் - விளையும்நீறு; வெள்ளைத் தோடு - சங்குத் தோடு; தோடமர் காதினல்ல குழையான் - ஒரு காதில் தோடும் காதில் குழையும் உடையான்; - (3) சாமம் போக - இரவில்; தூமொழி - மொழியவராகிய அம்மை; செறுவில் - பங்கயம் நின்றலர்தல் - நீர்வளமும் நிலவளமும் காட்டும்; -(5) தேய்பிறை - தேய்ந்து வந்தடைந்தபிறை;- (9) தமது ஆள்வினை - தமது உயிர் முயற்சி;- (10) காலையில் உண்பவர் - கண்தான் கழுவாமுன் ஓடிக் காலையில் கலவைக்கஞ்சியை உண்ணும் புத்தர்;- (11) தன்னொளி - சிவவொளி; சிவஞான விளக்கம்.
தலவிசேடம்:- திருப்பாதாளீச்சுரம் - காவிரித் தென்கரைத் தேவாரப்பாடல் பெற்ற 104-வது பதி; "பாமணி" - "பாம்பணி" என வழங்கப்படுகின்றது; "பாதாளே" என்பது பதிகத்துட் கண்ட பெயர். பாதாள உலகத்தினின்றும் ஆதிசேடனது தம்பியாகிய தனஞ்சயன் என்னும் அரவு பிலத்தின் வழியே வந்து பூசித்துப் பேறுபெற்ற பதியாதலின் அத்தொடர்புபற்றிப் பாதாள் எனப்பட்டது என்ப. "சர்ப்பபுரம் என்று மொழிபெயர்த்து வடமொழியில் வழங்குதல் காண்க. சுவாமி - சர்ப்பரேசர்; அம்மை - அமுதநாயகி; பதிகம் 1.
இது மன்னார்குடி நிலையத்தினின்றும் வடமேற்கே மட்சாலை வழி 1 1/2 நாழிகையளவில் அடையத்தக்கது; திருப்பூவனூரினின்றும் மன்னார்குடிக் கற்சாலை வழி