1142திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

நீர் வாழ்நர் - நீரில் ஓடம் போக்கி அதனால் வரும் ஊதியங்கொண்டு வாழும் அத்துறை மாக்கள்.
நிறுத்தி - ஓடத்தை வெள்ளங் கொண்டுசெல்லாமல் கரையில் தறிகளில் அணைத்துக் கட்டி; "கட்டவிழ்த்து" (2795) என மேற்கூறுதல் காண்க.
கலைபயிலும் - கலைகளாற் பயிலப் பெறும் புகழினையுடைய; "கலை மலிந்த சீர் நம்பி" (தேவா).
அக்கரையின் - அந்த ஆற்றின் தென்கரை; அகரம். "முள்ளிவாய்க் கரையணைந்தார்" (2793) என்று முன்கூறிய அந்த என முன்னறிசுட்டு.
எத்துறையும் - நிலையிலாமல் - என்பனவும் பாடங்கள்;

897

2796. (வி-ரை) எதிர் தோன்ற - எதிர்க்கரையில் கட்புலப்பட.
சென்று பணியத் திருவுள்ளம் மேவுதலால் - என்க. ஒரு திருக்கோயில் கண்ணுக்குத் தோன்றியவுடன் அங்குச் சென்று அதனைப் பணியும்படி உள்ளங்கொள்ளுதல் முன்னைத் தவத்தானாகிய மனநிலை பக்குவமுடையார்க்கே நிகழ்வதாம். "காவேரித் தென்கரைபோய்க் கோயில் பல சென்றிறைஞ்சி"க் கண்டியூர் பணிந்த (கழறிற். புரா - 130, நம்பிகளும் கழறிற்றறிவார் நாயனாரும் "வடகரையிற் றிருவையா றெதிர்தோன்ற மலர்க்கரங்க ளுடலுருக வுள்ளுருக வுச்சியின்மேற் குவித்தருளிக் கடல் பரந்ததெனப் பெருகுங் காவிரியைக் கடந்தேறித், தொடர்வுடைய திருவடியைத் தொழுவதற்கு நினைவுற்றார்"(கழறிற். புரா - 131); "திரு ஐயா றிறைஞ்ச மனமுருகி, நையா நின்ற திவ்வாறு கடந்து பணிவோ நாமென்ன" (கழறிற். புரா - 132) என்று வரும் மனநிலைகளும், "நாணனே தோன்றுங் குன்றி னண்ணுவே மென்ன"த்(745) திண்ணனார்க்கு நிகழ்ந்த மனநிலையும் ஆகியவற்றின் பரிபக்குவநிலைகளின் உள்ளுறை ஈண்டுச் சிந்திக்கத் தக்கன; இம்மூன்றிடங்களினும் உலக ஆறுகள் இறைவரைச் சாரும் ஆர்வத்தின் படிச் சாரவொட்டாது குறுக்கிடுதலும் அன்பினாறேவென்று இறைவர் சார்பு நிகழ்தலும் குறிக்க; "வேறு நாவா யோடங்கண் மீது செல்லா வகைமிகைப்ப...நிருத்தர் பாதம்பணிந் தன்பினாறு நெறியாச் செலவுரியார்"(கழறி. புரா - 133) என்று இதன் உள்ளுறை விளக்கப்படுதலும் காண்க;- இவ்வாறு சிவாலயத்திலும் திருவேடத்திலும் கண்டபோதே அன்பும் ஆர்வமும் மிகுதல பக்குவம்பற்றி நிகழுமென்பதும், அவையே பக்குவத்தின் அறிகுறியாமென்பதும், "நல்வினைக்கண், எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு, செல்காலம் பின்னரகஞ் சேராமே-நல்லநெறி, எய்துவதோர் காலந்தன்னன்பரைக்கண் டின்புறுதல், உய்யு நெறிசிறிதே யுண்டாக்கி" என்ற போற்றிப் பஃறொடை(55 - 56) யானு மறிக.
ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் - உம்மை சிறப்பும்மை. இடையூறுகள் பெருகி வரும்போது மேலும் ஆர்வம் மிகுதல் பக்குவத்தின் விளைவு.
ஓடத்தின் கட்டு - நீர்ப்பெருக்கு ஈர்த்துச் செல்லாது ஓடத்தினைக் கரையிலே தறியில் அணைத்துக் கட்டுதல் வழக்கு.
நாவலமே கோலாக - கோல் - ஊன்றி ஓடத்தைச் செலுத்தும் ஓடக்கோல்; நாவலம் - நாவின் வல்லமையாகிய சத்தி; (நா - கோலாக, வல்லமை - அக்கோலை ஊன்றி இயக்கும் சத்தியாக.)
அதன்மேல் நின்று - அவ்வோடத்தின் மேலே தாமும் ஏறி நின்று. இரட்டுற மொழிதலால் அவ்வல்லமையினை மேல் கொண்டு என்ற குறிப்புமாம்.
நம்பர் - எக்காலத்தும் நம்பியடைதற்குரியராய்க் கைவிடாது உள்ளேநின் றுதவுபவர். மேற்பாட்டிலும் நம்பரவர் (2797) என்ற கருத்துமிது. "நம்பனை உள்க"