[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1183

என்ற வரலாற்று முறையாற் பிரித்து சென்ற முன்றொடர்ச்சியின் நினைவு கூர்தற் பொருட்டு இங்கு வாகீசர் என்ற இப்பெயராற் கூறிய நயம் கண்டுகொள்க. மாமுனிவர் - "வருஞானத் தவமுனிவர் வாகீசர்" (1266); "பரமுனிவன்" (1694) என்றவையும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.
முனிவர் - எழுந்தருளிற்று - இறைவரையும், அத்தன்மை சார்ந்த பெரியோரையும் கூறும் பரவு வழக்கு.
அடியார்தமை வினவ - பலதிறத்தினாலும் பல நாட்டினின்றும் அடியார்கள் அவ்வப்போது திருக்கூட்டத்தில் சார்ந்தமையானும், திருக்கடவூரின் அடியார் முன்னர்த் தாம் வாகீசமுனிவரைப் பிரிந்து சென்றருளிய திருமறைக்காட்டின் அணியராந்தன்மையாலும், அடியார்களுக்கு இத்தகைய பெரியார்களின் நிகழ்ச்சிகள் பற்றியே அறிவும் செயலும் தொடர்பும் செல்லுதல் முன்னைநாளின் இயல்பாதலாலும் அடியார்களை வினாவியருளினார். அடியார் - தமது திருக்கூட்டதிலிருந்தாரும், திருக்கடவூரிலிருந்தாரும் ஆகியவர்களுள் அறிந்தார்.

927

2826. (வி-ரை) ஆண்ட அரசு எழுந்தருளி...இருந்தபடி எல்லாம் - அரசுகள் புராணம் பார்க்க. எழுந்தருளி - தமது யாத்திரையில் போந்தருளி; தங்கு - அந்நகரில் தங்கித் திருமடம் சமைத்துப் பலநாள் எழுந்தருளி யிருக்கும். "தங்கித் திருத்தொண்டு செய்வார்....திருமடமங்கொன்று செய்தார்" (1654).
தொண்டு செயும் மகிழ்ச்சி - அந்நகரிலே தங்குதல் உடல் நலம், நீர்வளம் முதலிய வேறு எக்காரணங்களாலுமன்றித் திருத்தொண்டு செய்து தங்குதலிற் கண்ட மகிழ்ச்சியே என்பதாம். "அங்குறையுந் தன்மை வேண்டி" (1654).
எங்கு நிகழ்ந்திட இருந்த - அரசுகள் அங்குத் தங்கிய நலம் எங்கும் பெருகி நிகழ்ந்திட. நலம் உலகம் போற்ற. யாவரும் அறியும்படி.
இருந்தபடி எல்லாம் - படி - நிலை; தன்மை. எல்லாம் - முன் அரசுகள் புராணத்துள் இதுபற்றி விரித்த நிலைமைகளை எல்லாம். முன் வரலாறுகளை ஆண்டு விரித்துக் கூறியருளியமையால் இங்கு எங்கு நிகழ்ந்திட இருந்த என்று சுருக்கிச் சுட்டியமட்டிலமைந்தார்.

928

2827
அப்பரிசங் கவர்மொழிய வாண்டவர சினைக்காணும்
ஒப்பரிய பெருவிருப்பு மிக்கோங்க வொளிபெருகு
மைப்பொருவு கறைக்கண்டர் கழல்வணங்கி யருள்பெற்றுச்
செப்பரிய புகழ்ப்புகலிப் பிள்ளையார் செல்கின்றார்,

929

2828
பூவிரியுந் தடஞ்சோலை புடைபரப்பப் புனல்பரக்குங்
காவிரியின் றென்கரைபோய்க் கண்ணுதலார் மகிழ்ந்தவிடம்
மேவியினி தமர்ந்திறைஞ்சி விருப்புறுமெய்த் தொண்டரொடு
நாவரச ருழைச்சண்பை நகரரசர் நண்ணுவார்;

930

2829
அந்தணர்சூ ளாமணியார் பூந்துருத்திக் கணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டருளி
"நந்தமையா ளுடையவரை நாமெதிர்சென் றிறைஞ்சுவது
முந்தைவினைப் பய" னென்று முகமலர வகமலர்வார்;

931