| இது புதுச்சேரி நிலையத்தினின்றும் வடகிழக்கே மட்சாலைவழி 8 நாழிகையளவில் அடையத் தக்கது. (இங்குநின்றும் வடமேற்கில் மட்சாலைவழி 2 நாழிகையளவில் உள்ளது திருவரசிலி.) |
|
| திருவரசிலி |
| திருச்சிற்றம்பலம் |
| பண்-பியந்தைக் காந்தாரம் - 2-ம் திருமுறை |
| பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல் ஆடன் மாசுண மசைத்த வடிகளுக் கிடமர சிலியே. | |
| (1) |
| அல்லி நீள்வயல் சூழ்ந்த வரசிலி யடிகளைக் காழி நல்ல ஞானசம் பந்த னற்றமிழ் பத்திவை நாளுஞ் சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த வல்ல வானுல கெய்தி வைகலு மகிழ்ந்திருப் பாரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- ஆடல் மாசுண மசைத்தார் என்பது முதலான தன்மைகளாற் போற்றப்படும் இறைவராகிய அடிகளுக்கிடம் அரசிலியே. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வண்டு பாடலறை என்க; வல்லியம் - புலி; புலித்தோல் குறித்தது ;-(2) தேன்அவன் - தேன் போன்ற இனிமையுடையவன்; நல்.....சுடர் - முழு ஞானவொளி ;-(3) கதம் மிக - ஆரவாரிக்க; கதம் - கோபம்; கோபம் போல்வதனைக் கோபம் என்றார்; ஒப்புமைப்பற்றி; "கதமிக் கெரிகதிரின் முன்னிருள்போல்" (போதம் - 10 - சூத்) "எரி துள்ளினாலென" (527); சங்கையாய்த்திரியாமே - திரியாதவாறு; "அனுசயப்பட் டதுவிது வென் னாதே" (தேவா); "இரண்டாட்டாது" (தேவா) ;-(4) மெய் - உடம்பு ;-(5) அஞ்சும் - உவமவுருபு; -(6) பரிய மாசுணம் - வாசுகி என்னும் மாநாகம் ;-(9) குறியமாண் - வாமனன்; மாண் - பிரமசாரி ;-(10) குருளை - இளமை; குருளை எய்திய மடவார் - இளம் பருவமடைந்த பெண்கள்; திரளை - சோற்றுருண்டை ; கவளம். பொருள் - சத்து; உண்மைப் பொருள். வணங்கும் அருளை நல்கும் - வணங்கும்படி அருள் செய்யும்; "அவனரு ளாலே அவன்றாள் வணங்ங்கி" (திருவா). |
| தலவிசேடம் :- திருவரசிலி - தொண்டைநாட்டின் 31-வது பதி. இஃது ஒழிந்தியாப்பட்டு என வழங்கப்படுகின்றது. அரசமரத்தை இல்லாக-இருப்பிடமாக-க்கொண்டு இறைவர் வீற்றிருக்கும் இடம் என்பது பெயர்க்காரணம். அடிகளுக்கு இடம் அரசிலி என்ற பதிகம் இப்பொருள் தருவது. அரசமரம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. முதல் வழிபாடு அதற்கு நடைபெறுகின்றது. வாமதேவ முனிவர் வழிபட்ட பதி. சுவாமி - அரசிலி நாதர்; அம்மை - பெரியநாயகி; தீர்த்தம் - அரசடித் தீர்த்தம்; மரம் - அரசு; பதிகம் 1. |
| இது புதுச்சேரி நிலையத்தினின்றும் வடகிழக்கில் மட்சாலையில் 8 நாழிகையளவில் உள்ள இரும்பைமாகாளத்தினின்றும் வடமேற்கே மட்சாலைவழி 2 நாழிகையளவில் அடையத் தக்கது. |