|
| மெய்யுணர்வுடன் - ஆடற் காட்சி கண்டு திளைத்து நின்ற மெய் உணர்வு மாறாது. |
| குண்டைக் குறட்பூதம் - சிவ பூதகணங்கள்; இது பதிகத் தொடக்கம். "கோடி கோடி குறட்சிறு பூதங்கள், பாடி யாடும் பரப்பது பாங்கெலாம் (16). |
| கோதிலாவிசை - ஆடல் கண்டு காட்டும் வகையால் கோது(மலம்) நீக்கும் தன்மை வாய்ந்த என்பதும் குறிப்பு. |
| வேதபாலகர் - மெய்யுருகியவன்புறு - எடுத்தேத்தி - என்பனவும் பாடங்கள். |
| 965 |
| 2864. (வி-ரை) பாடினாராகி - உறைபவராகிய - மறைச்சிறுவர் என்று விரித்துக் கூட்டி முடிக்க; பாடினார் - பாடினாராகி; முற்றெச்சம். |
| அங்கு...உறைபவர் - திருவதிகை நகரில் சில நாள்கள் அன்புடன் தங்கியருளினார் என்பது. அரவம் - ஓசையினையுடைய என்றலுமாம். |
| அங்கணர் - பசுக்களுக்கு அருள் புரிந்தவர் என்ற தல வரலாற்றுச் சிறப்புக் குறிப்பு. சிறுவர் - உருவமும் பருவமும் குறித்தது. |
| திருவதிகை வீரட்டானம் |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை |
| குண்டைக் குறட்பூதங் குழும வனலேந்திக் கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம் வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. | |
| (1) |
| எண்ணா ரெயிலெய்தா னிறைவ னனலேந்தி மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப் பண்ணார் மறைபாடிப் பரம னதிகையுள் விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. | |
| (4) |
| ஞாழல் கமழ்காழி யுண்ஞான சம்பந்தன் வேழம் பொருதெண்ணீ ரதிகைவீரட் டானத்துச் சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை வாழுந் துணையாக நினைவார் வினையிலரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- பூதம் பாடநின் றாடுவார் திருநடம் புலப்படும்படி முன்னே காட்டக் கண்டு "ஆடும் வீரட்டானத்தே" என்று பாடியது. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) குண்டை - குறுகித் தடித்த; குண்டைக் குறள் - மிகக் குறிய. குழுமுதல் - கூட்டமாதல்; பூதங்கள் முன் வருதலால் அவற்றை முதலிற் கூறினார். மருள் - குறிஞ்சிப் பாடல் வகையுள் ஒன்று; பொன் விரி - பொன் போல விரிகின்ற;- (2) அலைத்தல் - கீழ்ப்படுத்துதல்; உவமப் பொருளில் கூறும் மரபு; கரும்பின் - இன் - உவமஉருபு; இனிய என்றலுமாம்;- (3) ஆடல் - நாகம் - அசைத்தாட - தன்னியல்பின் ஆடும் நாகம் நடனத்தால் அசைக்கப்பட்டு மேலும் மிகஆட; படுதம் - கூத்து வகை ;- (4) எண்ணார் - எண்ணாத பகைவர்; திரிபுரவாணர். எயில் எய்தான் - எரித்தான்; இத்தலத்தில் நிகழ்ந்த வீரம்;- (5) திருநின்று - செம்மைதர |