[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1225

நின்று; ஒருகை - எரி ஏந்திய என்க; விரியும் புனல் - முன் "ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்" கங்கை; சடையுட் பனிபோலச் சுருங்கிப் பின் நிலத்தில் வந்து விரியும் என்பதும் குறிப்பு;- (8) வரை(யால்) அடர்த்து - என்று கூட்டுக;- (9) நிமிர்ந்தான் - கீழுமேலும் அறியாவண்ணம் நீண்டவன். வெடியார் - வெடித்த தன்மை பொருந்திய; தலை - கபாலம் - மண்டை ஓடு;- (10) சுரை ஓடேந்தித் திரிதலும் - உடைவிட் டுழலுதலும் - அமண குருமார் வழக்குக்கள்;- (11) ஞாழல் - புலிநகக் கொன்றை; வேழம் பொரு தெண்ணீர் - யானையினையும் அலைக்கும் அளவிலும் கதியிலும் வரும் நீர்; பொருதல் - அலைத்தல்; வேழம் - நாணல் என்றலுமாம். இது கெடிலத்தின் தன்மை நவிற்சி; வாழுந் துணை - வாழச் செய்யும் துணை.
தலவிசேடம் :- திருவதிகை வீரட்டானம் - 1-பக். 271-ம் III-பக். 55-ம் பார்க்க.
2865
சென்ற ணைந்துசிந் தையின்மகிழ் விருப்பொடு திகழ்திருவாமாத்தூர்ப்
பொன்ற யங்குபூங் கொன்றையும் வன்னியும் புனைந்தவ ரடிபோற்றிக்
"குன்ற வார்சிலை" யெனுந்திருப் பதிகமெய் குலவிய விசைபாடி
நன்று மின்புறப் பணிந்துசெல் வார்திருக் கோவலூர் நகர்சேர்ந்தார்.
(இ-ள்) சென்று அணைந்து....அடிபோற்றி - சென்று அணைந்து மனத்துள் மகிழ்ச்சிகொண்ட விருப்பத்துடனே, விளங்கும் திருஆமாத்தூரின்கண் பொன்போல விளங்கும் அழகிய கொன்றையினையும் வன்னியினையும் சூடி யெழுந்தருளிய இறைவரது திருவடிகளைத் துதித்து; "குன்றவார் சிலை"...செல்வார் - குன்றவார்சிலை என்று தொடங்கும் திருப்பதிகத்தினை மெய்ம்மை விளங்கும் இசையுடனே பாடி மிகவும் இன்பம் பொருந்த வணங்கிச் செல்பவராகிய பிள்ளையார் திருக்கோவலூர் நகரினைச் சேர்ந்தருளினர்.
(வி-ரை) பொன் தயங்கு - தயங்கு - உவமவுருபு.
பூ - அழகிய; கொன்றைப் பூவும் என்று கூட்டியுரைப்பினு மமையும்.
வன்னி - இத் தலமரமாதலும் குறிப்பு.
குன்றவார் சிலை எனும் - குன்றவார் சிலை என்று தொடங்கும்.
மெய்குலவிய இசை - தன்மைநவிற்சியிற் பல உண்மைகளும் புலப்படும் இயலும் இசையும் பொருந்த; பதிகப் பாட்டுக் குறிப்புப் பார்க்க.
நன்றுமின்புற - மிகவும் இன்பம் பொருந்த. நன்றும் - மிகுதிப்பொருள் குறித்து நின்றது; நன்மை பயக்கும் என்ற குறிப்புமாம். இக்குறிப்பில் தீமையும் அழிவும் தரக்கூடிய ஏனைய இன்பங்கள் போலன்றி நன்மையே தரும் இன்பம் உயிர்களுக்குப் பொருந்தும்படி என்க.
செல்வார் - சேர்ந்தார். என்று கூட்டுக. செல்வார் - செல்வாராகிய பிள்ளையார். வினைப்பெயர்.
திருக்கோவலூர் நகர் - நடுநாட்டின் ஒரு பகுதியாகிய முனைப்பாடி நாட்டின் உட்பிரிவுகளுள் ஒன்றாகிய சேதிநாட்டின் அரசர் வாழும் தலைநகருமாதலின் அக்குறிப்புப் பெற நகர் என்று கூறினார்; திரு - என்றதனால் அஃது இறைவரது பதியாதலும் குறிப்பித்தபடி. மெய்ப்பொருணாயனார் புராணத்தினுள் "சேதிநன் னாட்டி னீடு திருக்கோவலூர்"(467) என்றதன்கீழ் உரைத்தவை பார்க்க; (1 - பக். 578 - 579).