|
| உந்துவனவாகிய குயில் என்க; ஆலுவ - அசைவன; தாம் உந்திய கொம்புகளுடன் தாமும் அசைவன. |
| தலவிசேடம்:- திருவண்ணாமலை - III - பக். 534 பார்க்க. |
2869 | அங்க ணணைவார் பணிந்தெழுந்து போற்றி செய்தம் மலைமீது தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாட்டா மரைக டம்முடிமேற் பொங்கு மார்வத் தொடும்புனைந்து புளக மலர்ந்த திருமேனி யெங்கு மாகிக் கண்பொழியு மின்ப வருவி பெருக்கினார். | |
| 971 |
| (இ-ள்) அங்கண்...போற்றி செய்து - அங்கு (அண்ணாமலையின்கண்) அணைபவராகிய பிள்ளையார் நிலமுற வணங்கி எழுந்து; அம்மலைமீது....தாள் தாமரைகள் - அந்த மலையின்மேல் தங்கும் விருப்பினுடன் எழுந்தருளியுள்ள இறைவரது திருவடிகளாகிய தாமரைகளை; தம் முடிமேல்...புனைந்து - தமது திருமுடியின் மேலே மேன்மேல் எழுகின்ற ஆசையினுடன் சூடிக்கொண்டு; புளகம்...எங்குமாகி - திருமேனி முழுதும் மயிர்புளகம் வரக்கொண்டு; கண்...பெருக்கினார் - கண்களிற் பொழிகின்ற ஆனந்தக் கண்ணீரை அருவிபோலப் பெருக்கினார். |
| (வி-ரை) பணிந்தெழுந்து - மலையினைச் சேர்ந்தவுடன் அதனடியில் நிலமுறப் பணிந்து எழுந்து. |
| அம்மலைமீது....வீற்றிருந்தார் - திருஅண்ணாமலை நாதர் - அருணாசலேசுவரர்; தங்கு விருப்பில் வீற்றிருத்தலாவது என்றும் நீங்காது வெளிப்பட எழுந்தருளியிருத்தல். |
| தாள் தாமரைகள் - முடிமேல் - புனைந்து - திருவடிகளில் தலைசாய்த்து நிலமுற வணங்கி; அடித்தாமரை மலரைத் தலையிற் சூடி என்ற நயமும் காண்க. தாமரை அந்தணர்க்குரிய மாலையாதலும் குறிப்பு. மலையை வணங்கி மேற்சென்று இறைவரை வணங்கினார் என்க. |
| புளகம்...ஆகி - புளகம் - மயிர்க் கூச்செறிதல்; இம்மெய்ப்பாடு உடல்முழுதும் உளதாதல் அன்புநிறைவின் குறி. |
| கண் பொழியும் இன்ப அருவி - ஆனந்தக் கண்ணீர் அருவிபோலக் கண்களில் பெருக வருதல் பேரின்ப அன்பின் மிகுதியினால் உளதாவது; மிகுதியும் இடையறாத தன்மையும்பற்றி அருவி என்றார். உபசாரம். |
| 971 |
2870 | ஆதி மூர்த்தி கழல்வணங்கி யங்க ணினிதி னமருநாட் பூத நாத ரவர்தம்மைப் "பூவார் மல"ராற் போற்றிசைத்துக், காத லாலத் திருமலையிற் சிலநாள் வைகிக் கமழ்கொன்றை வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்; | |
| 972 |
2871 | மங்கை பாகர் திருவருளால் வணங்கிப் போந்து வடதிசையிற் செங்கண் விடையார் பதிபலவும் பணிந்து, புகலிச் செம்மலார் துங்க வரைகள் கான்பலவுங் கடந்து, தொண்டைத் திருநாட்டிற் றிங்கண் முடியா ரினிதமருந் திருவோத் தூரைச் சேர்வுற்றார். | |
| 973 |