|
| அங்குநின்றும் வடதிசையிற் செல்வார் இடையிற் கண்ட பதி பலவும் பணிந்து சென்றனர் என்பது. |
| வடதிசையில் - வடகிழக்கு நோக்கிச் செல்கின்றாராதலின் வடக்கில் என்னாது வடதிசையில் என்றார்; ஆயினும் அங்குநின்று செல்லும் சாலை தொடக்கத்தில் நெடுந்தூரம் போளூர் வரை வடக்கு நோக்கியே சென்றபின்னரே ஆரணி வழியாய் வடகிழக்கில் செல்கின்றமையும் குறிக்க. |
| பதி பலவும் - இவை திருத்தெள்ளாறு, திருவெண்குன்றம், புரிசைநாட்டுப் புரிசை முதலாயின என்பது கருதப்படும். |
| துங்க வரைகள் கான் பலவும் கடந்து - இவை செஞ்சிமலை, நெடுங்குன்றம், சவ்வாது மலைத்தொடர்பாய்ச் சிதறிய குன்றுகள் முதலாயினவும், நடுநாடும் தொண்டை நாடும் சந்திப்பான நிலப்பரப்பாகிய இடத்தில் உள்ள காடும் மலையும் கலந்து பரந்தவைகளும் ஆம். பல்குன்றம், இளங்காடு, திண்டிவனம், புலிவனம், புறவார் பனங்காட்டூர் முதலிய காரணக் குறிப்புடன் வரும் ஊர்ப்பெயர்களையும் கருதுக. துங்க வரை - பெரிய மலைகள். இவைகள் பலவற்றை இடமாகக்கொண்டு முன்னாளில் அரசர் தமது கோட்டைகளை அமைத்து நாடு காவல் புரிந்தநிலை நாட்டுச் சரிதங்களால் அறியப்படும். |
| 973 |
| II திருவண்ணாமலை |
| திருச்சிற்றம்பலம் |
| பண் - தக்கேசி - 1-ம் திருமுறை |
| பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் மூவார் புரங்க ளெரித்த வன்று மூவர்க் கருள் செய்தார் தூமா மழைநின் றதிர வெருவித் தொறுவின் னிரையோடும் ஆமாம் பிணைவந் தணையுஞ் சார லண்ணா மலையாரே. | |
| (2) |
| ஞானத் திரளாய் நின்ற பெருமா னல்ல வடியார்மேல் ஊனத் திரளை நீக்கு மதுவு முண்மைப் பொருள்போலும் எனத் திரளோ டினமான் கரடி யிழியு மிரவின்கண் ஆனைத் திரள்வந் தணையுஞ் சார லண்ணா மலையாரே. | |
| (2) |
| அல்லா டரவ மியங்குஞ் சார லண்ணா மலையாரை நல்லார் பரவப் படுவான் காழி ஞான சம்பந்தன் சொல்லான் மலிந்த பாட லான பத்து மிவைகற்று வால்லா ரெல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- குறிஞ்சித்திணை பற்றிய நிலைகள் பலவும் தமிழ்நலம் பெறச் சுவைபட எடுத்துக் கூறி இத்தகைய திருவண்ணாமலையில் எழுந்தருளிய இறைவர் அடியாரும் வானோரும் வழிபட விளக்கமாக இருந்து அடியார்க்கருளி நன்மை தரும் பெருமை உண்மைப்பொருள் என்றதாம். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :-(1) பூ - அழகு; மண்ணுலகத்தவரும் விண்ணவரும் கூடி வணங்குதல்பற்றி முன் உரைத்தவை பார்க்க; மூவார் - கேடில்லா வரம் பெற்ற அசுரர்; மூவர் - முப்புரங்களில் வாழ்ந்த மூவர். தொறு - பசுக் கூட்டம்; |